Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மாயைக்குள் மூழ்கியுள்ள அனைத்துலகமும் வன்னியில் தோன்றியுள்ள மனித அவலங்களும் - வேல்ஸிலிருந்து அருஷ்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

மாயைக்குள் மூழ்கியுள்ள அனைத்துலகமும் வன்னியில் தோன்றியுள்ள மனித அவலங்களும் - வேல்ஸிலிருந்து அருஷ்

திங்கள், 26 ஜனவரி 2009, 04:39 மணி தமிழீழம் []

போரில் வெற்றி தோல்வி என்பது என்ன? ஒரு தரப்பின் பேரழிவு மறு தரப்பின் வெற்றியாக கொள்ளப்படுவதே போரியலின் வெற்றி தோல்விக்கான கருதுகோள்.

உதாரணமாக 1954 ஆம் ஆண்டு வியட்னாமில் தியான் பியன் பூ பகுதியில் பிரான்ஸ் படைகள் சந்தித்த பேரழிவை குறிப்பிடலாம். இந்த சமரில் பிரான்ஸிய இராணுவத்தில் 7,000 இற்கு மேற்பட்டோர் கொல் லப்பட்டதுடன், 12,000 இற்கு மேற்பட்டோர் சரணடைந்திருந்தனர்.ஆனால் தற்போது தென்னிலங்கையில் மட்டுமல்ல அனைத்துலகத்திலும் வன்னிப் படை நடவடிக்கையின் வெற்றி தோல்விகள் தொடர்பான கருத்துக்களை கூறுவதற்கு படைத்துறை வல்லுநர்கள், அரசியல் தலைவர்கள், ஊடகவியலாளர்கள் என மிகவும் பெரியதொரு கூட்டம் அலைமோதுகின்றது. எதன் அடிப்படையில் இந்தக் கூட்டம் அலைமோதுகின்றது.

படைத்துறை ரீதியாக விடுதலைப்புலிகள் பேரழிவை சந்தித்துள்ளார்கள் என்று இவர்கள் நம்பியுள்ளார்களா? அதற்காக முன்வைக்கப்பட்ட சான்றுகள் என்ன? என்பவை தான் இவர்களின் கருத்துகளை பார்க்கும் போது ஒவ்வொரு மனங்களிலும் எழும் மில்லியன் டொலர் கேள்விகள். ஏனெனில் படைத்துறை ரீதியாக எந்த ஒரு தரப்பும் அழிவை சந்திக்காத போது வெற்றி தோல்விகளை கணிக்க முடியாது. கைவிடப்பட்ட பதுங்கு குழிகளும், நிலங்களும், மரங்களும், அரச கட்டிடங்களும் ஒரு தரப்பின் பேரழிவாக கொள்ள முடியாது. இருந்த போதும் அரச தரப்பு மேற்கொண்டுவரும் பிரசாரங்கள் தென்னிலங்கையை மட்டுமின்றி அகில உலகத்தையும் ஒரு மாயைக்குள் தள்ளியுள்ளது.

விடுதலைப்புலிகளை பொறுத்தவரையில் 1995 களில் யாழ் நகரத்தை தமது தலைநகரம் என அவர்கள் அறிவிக்கவில்லை, ஆனால் சந்திரிகா அரசாங்கம் தனது போருக்கு வலுச்சேர்த்து, தென்னிலங்கையில் அதிக அரசியல் ஆதரவை திரட்டும் முகமாக யாழ்குடாநாட்டை விடுதலைப்புலிகளின் தலைமைத் தளமாக தானே பிரகடனப்படுத்திக் கொண்டது.கிளிநொச்சி நகரத்தையும் விடுதலைப்புலிகள் தமது தலைநகரமாக அறிவிக்கவில்லை. அது அவர்களின் அரசியல் செயற்பாடுகளுக்கு உகந்த இடம். மக்கள் செறிவாக வாழ்ந்த பிரதேசம். அவ்வளவு தான். ஆனால் விடுதலைப்புலிகளின் பிரதான தளமாகவும், தலைநகரமாகவும் கிளிநொச்சி நகரம் சித்திரிக்கப்பட்டது.

உலகின் விடுதலைப்போராட்ட வரலாறுகளை நாம் கருத்தில் எடுத்தால் அவர்களின் பிரதான நிலையிடங்களும், தளங்களும் அடிக்கடி இடம்மாறியிருந்ததை நாம் காணலாம். பண்டைய காலத்தில் நிலப்பரப்பை கைப்பற்றுவது அரசர்களின் வெற்றியாக கருதப்பட்டது, ஆனால் அதே நிலப்பரப்புக்கள் மீண்டும் அதற்கு உரிமை உடையவர்களால் கைப்பற்றப்பட்ட போது ஏற்பட்ட பேரழிவுகளில் இருந்து தான் மெல்ல மெல்ல நவீன போரியல் உத்திகள் உருவாகியிருந்தன.நவீன போரியல் தத்துவங்களில் நிலப்பரப்புக்களின் நீள அகலத்திலோ அல்லது ஆட்பல அதிகரிப்புக்களிலோ போரின் நகர்வு அதிகம் தங்கியிருப்பதில்லை.

அதற்கு அப்பால் போரின் நகர்வுத்திறனை தீர்மானிக்கும் காரணிகளாக நவீன ஆயுதங்களும் அதற்கு ஏற்ற களமுனைகளும், போரியல் உத்திகளுமே அங்கம் வகிக்கின்றன.இலங்கை இராணுவத்தின் ஆட்தொகையையும், ஆயுத வளங்களையும் கருத்தில் எடுத்தால் விடுதலைப்புலிகளின் ஆட்பலமும், ஆயுத பலமும் குறைவானவை, எனவே அவர்கள் படைவலுச்சமநிலையை எட்டுவது என்பது கொள்கை ரீதியாக சாத்தியமற்ற ஒன்றாகவே முன்னர் பலருக்கும் தோன்றியிருந்தது. ஆனால் 2001 ஆம் ஆண்டு தீச்சுவாலை நடவடிக்கையின் தோல்வியுடன் ஒரு பøடவலு சமநிலை ஏற்பட்டது எவ்வாறு?படை வளங்களுக்கு அப்பால் போரியல் உத்திகள் படை வலுச்சமநிலையில் ஏற்படும் ஏற்றத்தாழ்வுகளை சீர்செய்து விடுகின்றன.

உதாரணமாக ஏறத்தாழ 54 இலட்சம் யூத மக்களை கொண்ட இஸ்ரேல் எவ்வாறு பல கோடி மக்களை கொண்ட அரபு நாடுகளின் மத்தியில் வலுவுள்ளதாக திகழ்கின்றது? நவீன ஆயுதங்களும், நுட்பமான போரியல் உத்திகளும் தான் அதற்குக் காரணம்.வன்னியின் தற்போதைய நிலையும் அதுதான். அரச தரப்பு விடுதலைப்புலிகளினதும், தமிழ் மக்களினதும் உளவுரண்களை முற்றாக தகர்க்கும் முயற்சிகளில் ஈடுபட்டுள்ளது. பிரசார போரின் நோக்கமும் அதுவே. ஆனால் இதனைக் கொண்டு வெற்றி தோல்விக ளையோ அல்லது படைவலுச் சமநிலை களையோ யாரும் கணிப்பிட்டுவிட முடியுமா என்பதும் கேள்வியே.இருந்த போதும் பாரிய படை வளத்துடன் இராணுவம் முல்லைத்தீவை நோக்கிய முற்றுகையை தீவிரமாக்கி வருகையில் கடற்படையினரும் முல்லைத்தீவில் இருந்து சுண்டிக்குளம் வரையிலான 20 கடல்மைல் நீளமான கடற்பரப்பில் 25 க்கு மேற்பட்ட கடற்படை கப்பல்களை நிறுத்தியுள்ளனர்.

இந்தப் படகு தொகுதியில் அதிகவேக டோராப்படகுகள், ஆழ்கடல் ரோந்துக் கப்பல்கள் என்பன உள்ளடக்கப்பட்டுள்ளதுடன், சிறப்புக் கடற் தாக்குதல் பிரிவு (குணீஞுஞிடிச்டூ ஆணிச்t குணுதச்ஞீணூணிண), விரைவு நடவடிக்கைப் பிரிவு (கீச்ணீடிஞீ அஞிtடிணிண குணுதச்ஞீணூணிண) போன்ற கடற்படை அணிகளும் அங்கு நகர்த்தப்பட்டுள்ளதாக கடற்படை பேச்சாளர் கப்டன் டி.கே.பி. திஸாநாயக்க தெரிவித்துள்ளார். இலங்கையின் கடற்படை வரலாற்றில் இது மிகப்பெரும் சுற்றிவளைப்பõகும் எனவும் இதற்கு வடபிராந்திய மற்றும் கிழக்குப் பிராந்திய கடற்படை வளங்கள் அனைத்தும் பயன்படுத்தப்பட்டுள்ளதாகவும

தாரணமாக 1954 ஆம் ஆண்டு வியட்னாமில் தியான் பியன் பூ பகுதியில் பிரான்ஸ் படைகள் சந்தித்த பேரழிவை குறிப்பிடலாம். இந்த சமரில் பிரான்ஸிய இராணுவத்தில் 7,000 இற்கு மேற்பட்டோர் கொல் லப்பட்டதுடன், 12,000 இற்கு மேற்பட்டோர் சரணடைந்திருந்தனர்.ஆனால் தற்போது தென்னிலங்கையில் மட்டுமல்ல அனைத்துலகத்திலும் வன்னிப் படை நடவடிக்கையின் வெற்றி தோல்விகள் தொடர்பான கருத்துக்களை கூறுவதற்கு படைத்துறை வல்லுநர்கள், அரசியல் தலைவர்கள், ஊடகவியலாளர்கள் என மிகவும் பெரியதொரு கூட்டம் அலைமோதுகின்றது. எதன் அடிப்படையில் இந்தக் கூட்டம் அலைமோதுகின்றது.

படைத்துறை ரீதியாக விடுதலைப்புலிகள் பேரழிவை சந்தித்துள்ளார்கள் என்று இவர்கள் நம்பியுள்ளார்களா? அதற்காக முன்வைக்கப்பட்ட சான்றுகள் என்ன? என்பவை தான் இவர்களின் கருத்துகளை பார்க்கும் போது ஒவ்வொரு மனங்களிலும் எழும் மில்லியன் டொலர் கேள்விகள். ஏனெனில் படைத்துறை ரீதியாக எந்த ஒரு தரப்பும் அழிவை சந்திக்காத போது வெற்றி தோல்விகளை கணிக்க முடியாது. கைவிடப்பட்ட பதுங்கு குழிகளும், நிலங்களும், மரங்களும், அரச கட்டிடங்களும் ஒரு தரப்பின் பேரழிவாக கொள்ள முடியாது. இருந்த போதும் அரச தரப்பு மேற்கொண்டுவரும் பிரசாரங்கள் தென்னிலங்கையை மட்டுமின்றி அகில உலகத்தையும் ஒரு மாயைக்குள் தள்ளியுள்ளது.

இப்படி புலிகளை உசுப்பேத்தி உசுப்பேத்தியே மாவிலாற்றில் இருந்து புதுக்குடியிருப்புக்குள்ளே கொண்டு வந்து விட்டிர்கள்

இப்படி புலிகளை உசுப்பேத்தி உசுப்பேத்தியே மாவிலாற்றில் இருந்து புதுக்குடியிருப்புக்குள்ளே கொண்டு வந்து விட்டிர்கள்

இராணுவம் முன்னேறியதற்கும் இவரின் கட்டுரைகளுக்கும் ஒரு சம்பந்தமும் இல்லை. இவர்கள் செய்ததெல்லாம் மிகைப் படுத்தல் புகை போட்டு அந்த புகையில் உண்மை அவலத்தை மறக்கடித்தது தான்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.