Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சடலத்தை வைத்து அரசியல் செய்கின்ற இழிகுணம் எவருக்கும் இல்லை: வைகோ ஆவேசம்

Featured Replies

திண்டுக்கல் நிலக்கோட்டை அருகே உள்ள பள்ளிப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் ரவி. இவருக்கு வயது. 40. ஈழப்பிரச்சனை முடிவுக்கு வரக்கோரி ரவி நேற்று முன் தினம் தீக்குளித்தார் என்றும், உயிருக்குப் போராடிய அவரை மதுரை அரசு மருத்துவமனையில் இருப்பதாக அவருடைய உறவினர்கள் நேற்று தெரிவித்தனர்.

இதுகுறித்து காவல்துறையினர் தரப்பில், ரவி என்பவர் ஸ்டவ் பற்ற வைக்கும்போது, எதிர்பாராத விதமாக தீப்பிடித்திருக்கிறது. இதை ரவியே ஒப்புக்கொண்டிருக்கிறார் என்று போலீசார் கூறியுள்ளனர்.

இருப்பினும் மதுரை முழுவதும் ஈழப்பிரச்சனைக்காக ரவி தீக்குளித்தாக செய்தி பரவியதால், பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

ரவி மீது 2 கஞ்சா வழக்குகள், 3 கள்ளச் சாராய வழக்குகள் உள்ளன. நான்கு வழக்குகளில் தண்டனை பெற்றுள்ளார்.

ஒரு வழக்கில் நீதிமன்றத்தில் ஆஜராகாததால் வாரன்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது. குடும்ப பிரச்னையில்தான் இந்த சம்பவம் நடந்துள்ளது

ஆனால், இந்த விஷயம் இலங்கை தமிழருக்காக தீக்குளித்தார் என்று திசை திருப்பப்படுகிறது’’ என்று கூடுதல் டிஜிபி ராஜேந்திரன் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் இன்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ இச்சம்பவம் குறித்து, ‘’ஈழத்தமிழர்களுக்காக தீக்குளித்த திண்டுக்கல், பள்ளப்பட்டி இளைஞர் ரவியின் செயலை கொச்சைப்படுத்துகிறார்கள்.

மதுரை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் அவரை நான் நேரில் சென்று பார்த்தேன். ஈழத்தமிழர் நிலை குறித்தும், முத்துக்குமார் தியாகம் குறித்தும் பள்ளப்பட்டி ரவி மிகுந்த கவலைப்பட்டார்.

ஆனால் அவரது செயலை கொச்சைப்படுத்துவதன் மூலம் அரசுக்கும் காவல் துறைக்கும் மனித நேயம் செத்துப்போய்விட்டதா? ரவியின் செயலை இழிவுப்படுத்து வதற்காக பொய்களை புனைந்துரைத்து காவல் துறை அறிக்கை வெளியிடுவதற்கு என்ன காரணம்’’ என்று வைகோ கேள்வி எழுப்பி உள்ளார்.

அவர் மேலும், ‘’வேறு காரணங்களுக்காக தீக்குளித்த ஒருவரை இலங்கை தமிழர்களுக்காக தீக்குளித்தார் என்று கூறுகின்ற, உயிரற்ற சடலத்தை வைத்து அரசியல் செய்கின்ற இழி குணம் இங்கு எவருக்கும் இல்லை’’ என்றும் வைகோ கூறி உள்ளார்.

  • தொடங்கியவர்

முத்துக்குமார்,ரவியின் நிகழ்வுகள் தொடர்ந்துவிடக்கூடாது: ஆர்.சரத்குமார்

இலங்கை தமிழர் பிரச்சனை குறித்து அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி தலைவர் ஆர்.சரத்குமார் அறிக்கை வெளியிட்டுள்ளார். அவ்வறிக்கையில்,

’’அனைத்து தரப்பிலிருந்தும் போராட்டங்கள் நடந்தும், எதிர்ப்புக் குரல்கள் எழுந்தும் எந்த பலனும் கிடைக்காமலும் தன் இனம் பூண்டோடு அழிந்து விடுமோ என்கிற அச்சத்தின், வேதனையின் உச்சகட்டமாக முத்துக்குமார் என்னும் தமிழ் உணர்வுள்ள இளைஞன் தன் உயிரை மாய்த்துக்கொள்ளும் சூழ்நிலை உருவாகி உள்ளது.

திண்டுக்கல் மாவட்டத்தில் பல்லப்பட்டி என்னும் ஊரில் ரவி என்னும் தொழிலாளி, முத்துக்குமாரை போன்றே தன் உயிரை மாய்த்துக் கொள்ள முயற்சித்திருப்பது, இலங்கை தமிழர் பிரச்சனையை முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என்கிற உணர்வின் வெளிப்பாடே.

முத்துக்குமாருக்கு ஏற்பட்டதைப் போன்ற ரவிக்கு ஏற்பட்டது போன்ற நிகழ்வுகள் தமிழக மண்ணில் தொடர்ந்து விடக்கூடாது என்பதை வேதனையோடு அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி கேட்டுக்கொள்கிறது’’ என்று தெரிவித்துள்ளார்.

nakkheeran

Edited by vasisutha

  • கருத்துக்கள உறவுகள்

ரவி

Ravi20burler.jpg

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.