Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

தீவிரமடைந்துவரும் போராட்டங்களை கட்டுப்படுத்த தமிழக அரசு தீவிர முயற்சி

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தீவிரமடைந்துவரும் போராட்டங்களை கட்டுப்படுத்த தமிழக அரசு தீவிர முயற்சி

இலங்கையில் அப்பõவித் தமிழர்களைக் காப்பாற்றக் கோரியும், போர் நிறுத்தம் ஏற்பட மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்தியும் தமிழகத்தில் அரசியல் கட்சியினர் மற்றும் கல்லூரி மாணவர்களின் போராட்டங்கள் முன்னொரு போதும் இல்லாத அளவு தீவிரமடைந்து வரும் நிலையில், அவ ற்றைக் கட்டுப்படுத்த தமிழக அரசாங்கம் தீவிர முயற்சிகளை மேற்கொண்டுள்ளது.

இலங்கை விவகாரம் தொடர்பில் தமிழ்நாடு முழுவதும் கல்லூரி மாணவர்களின் போராட்டம் தொடர்கின்றது. ஊர்வலங்கள், ஆர்ப்பாட்டங்கள் என இவை நீடித்து வருகின்றன. இதேபோல், இலங்கையில் போர் நிறுத்தம்கோரி தமிழகம் முழுவதும் நாளை மறுதினம் 4 ஆம் திகதி புதன்கிழ மை பொது வேலை நிறுத்தத்திற்கு இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கம் அழைப்பு விடுத்துள்ளது. கல்லூரி மாணவர்களின் போராட்டங்கள் தீவிரமடைந்து வருவதையடுத்து தமிழ் நாட்டிலுள்ள அனைத்துக் கல்லூரிகளையும் மூடிவிடுமாறு தமிழக அரசாங்கம் உத்தரவிட்டுள்ளது. இது குறித்து தலைமைச் செயலாளர் கே.எஸ். ஸ்ரீபதி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், மாணவர்களிடையே பதற்றமான சூழ்நிலை நிலவுவதால் மாநிலத்தில் தனியார் மற்றும் அரச கல்லூரிகள் உள்ளிட்ட அனைத்து கல்லூரிகளும் மாணவர் விடுதிகளும் மறு உத்தரவு வரும் வரை மூடப்பட்டு இருக்கும்'' என்று கூறப்பட்டு உள்ளது.

மருத்துவகல்லூரி மாணவ மாணவிகளுக்கு இன்று பல்கலைக்கழக தேர்வுகள் ஆரம்பமாகவிருக்கும் நிலையில் கல்லூரிகள் மூடப்பட்டதால் தேர்வுகள் அனைத்தும் தள்ளி வைக்கப்படுவதாக சுகாதாரதுறை செயலாளர் சுப்புராஜ் அறிவித்துள்ளார். சட்டவிரோதம் இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கம் எதிர்வரும் 4 ஆம் திகதி நடத்த உத்தேசித்துள்ள பொது வேலை நிறுத்தம் சட்டவிரோதமானது என்று தமிழக அரசு கூறியுள்ளது. இந்த பொது வேலை நிறுத்தத் தினமன்று பொதுமக்களுக்கும் போக்குவரத்துக்கும் இடைஞ்சல் ஏற்படாமலும் சட்டம் ஒழுங்கை பாதுகாக்கவும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று அரசு சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகம் முழுவதும் இலங்கை பிரச்சினை தீவிரமடைந்துள்ளதை எதிர்த்து இலங்கையில் போர் நிறுத்தத்தை வலியுறுத்தி இலங்கை தமிழர் பாதுகாப்பு இயக்கம் நேற்று முன்தினம் சென்னையில் கலந்தாய்வு கூட்டம் ஒன்றை நடத்தியது. இந்த இயக்கத்தின் தலைவர் பழ. நெடுமாறன் தலைமையில் நடந்த இந்த கூட்டத்தில் பா.ம.க. நிறுவனர் ராமதாஸ், பா.ஜ.க. தேசிய செயலாளர் ச. திருநாவுக்கரசர், ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ, இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் தா. பாண்டியன், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

இந்த கூட்டத்தில் இலங்கையில் போர்நிறுத்தம் கோரியும் தமிழர்களின் பாதுகாப்பை வலியுறுத்தியும் தமிழகம் முழுவதும் எதிர்வரும் 4 ஆம் திகதி பொதுவேலை நிறுத்தப் போராட்டத்தை நடத்துவது என்று முடிவெடுக்கப்பட்டது. மேலும் 7 ஆம் திகதி கறுப்புக் கொடி ஆர்ப்பாட்டம் நடத்துவது எனவும் தீர்மானிக்கப்பட்டது. இந்த நிலையில் இந்த பொதுவேலை நிறுத்தம் சட்டவிரோதமானது என்றும் பொது மக்களுக்கும் இடையூறு ஏற்படாமல் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தமிழக அரசு தெரிவித்துள்ளது. இது குறித்து தமிழக அரசு சார்பில் நேற்று வெளியிடப்பட்ட அரசு செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது, இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கத்தின் சார்பில் 4 ஆம் திகதி பொதுவேலை நிறுத்தத்தினை தமிழகம் தழுவிய அளவிலே நடத்தவிருப்பதாக பத்திரிகைகளில் அறிவிப்பு கொடுத்துள்ளார்கள். உச்ச நீதிமன்றத் தீர்ப்பின்படி தற்போது பொது வேலை நிறுத்தம் நடத்துவது என்பது சட்டத்திற்கு புறம்பான செயல் என்றும் எங்கும் யாரும் பொதுவேலை நிறுத்தம் நடத்தக்கூடாதென்றும் கூறப்பட்டுள்ளது.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு சேது சமுத்திரத் திட்டத்திற்காக பொது வேலை நிறுத்தம் நடத்தியதாக அ.தி.மு.க சார்பில் உச்ச நீதிமன்றத்திலே அது குறித்து வழக்கு தொடரப்பட்டு அந்த வழக்கு இன்னமும் நிலுவையிலேயே உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. ஆனால் அந்த பொது வேலை நிறுத்தம் நடைபெறவில்லை என்பது தான் உண்மை.இந்தச் சூழ்நிலையில் இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கம் 4 ஆம் திகதி அன்று முழு பொது வேலை நிறுத்தம் நடத்துவதாக கூறியிருப்பது சட்டப்படி உச்ச நீதிமன்ற ஆணைக்கு எதிரானது. எனவே இந்தப் பிரச்சினையில் தமிழக அரசு சட்டம் ஒழுங்கை நிலைநாட்ட தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ளும். பொது மக்களுக்கும் போக்குவரத்துக்கும் அத்தியாவசியப் பொருட்களின் பரிமாற்றத்துக்கும் எந்தவிதமான இடைஞ்சலும் ஏற்படாமல் அரசு சட்டப்படி தேவையான முன் எச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டியுள்ளது என்பது தெரிவிக்கப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. பழ நெடுமாறன் கருத்து

இதேவேளை பொது வேலை நிறுத்தம் தொடர்பாக இலங்கை தமிழர் பாதுகாப்பு இயக்கத்தின் தலைவர் பழ. நெடுமாறன் கருத்து தெரிவிக்கையில் கூறியதாவது, இலங்கையில் போர் நிறுத்தம்கோரி எதிர்வரும் 4 ஆம் திகதி தமிழகம் முழுவதும் பொது வேலை நிறுத்தம் செய்வது என்று முடிவு செய்துள்ளோம். பொது வேலை நிறுத்தம் என்றால் எல்லாம் உண்டு. அதில் கடையடைப்பு உண்டு. வழக்கறிஞர்களின் நீதிமன்றம் புறக்கணிப்பு உண்டு. எல்லாம் உள் அடங்கியதுதான் இந்த பொதுவேலை நிறுத்தம். இந்த பொதுவேலை நிறுத்தம் காலை 6 மணி முதல் மாலை 6 மணிவரை மட்டும் நடைபெறும். இரவு நேரத்தில் வேலை நிறுத்தம் வேண்டாம். அடுத்து 7ஆந் திகதி அன்று மாலை 4 மணிக்கு தமிழ்நாடு முழுவதும் அது நகரங்களாக இருந்தாலும் சிற்×ராக இருந்தாலும் எல்லா இடத்திலும் அனைத்து தமிழர்களும் ஒன்றுகூடி அங்கே கறுப்புக் கொடி ஊர்வலங்களை நடத்துவது என்று முடிவு செய்து உள்ளோம். இந்த கறுப்பு கொடி ஊர்வலம் மாலை 4 மணிக்கு தொடங்கப்பட வேண்டும். ஊர்வலத்தை முடிப்பது அந்தந்த ஊரைப் பொறுத்து முடித்துக் கொள்ளலாம். மற்ற திட்டங்கள் 5 ஆம் திகதி கூடி முடிவு செய்யப்படும்.

உயிர்த்தியாகம் கூடாது

இலங்கை தமிழர்களின் துயரத்தை இன்னமும் துடைக்க முடியவில்லையே என்ற ஆதங்கத்திலும் தமிழ்நாட்டு மக்களிடையே ஒற்றுமை ஏற்படாதா என்ற ஆதங்கத்திலும் முத்துக்குமார் தன்னையே அழித்துக் கொண்டு இருக்கிறார். முத்துக்குமாரின் இந்த தியாகம் வீண் போகாது. முத்துக்குமார் உயிர்த்தியாகம் என்பது மிகமிக உன்னதமானது. இதில் எந்த சந்தேகமும் இல்லை. ஆனால் நம்முடைய இளைஞர்கள், மாணவர்கள் உணர்ச்சிவசப்பட்டு அந்த வழியை ஒரு போதும் பின்பற்றக்கூடாது என்று மன்றாடி கேட்டுக்கொள்கின்றேன். உயிரைத்தியாகம் செய்து போராட வேண்டும் என்பது அல்ல. நாம் உயிருடன் இருந்து இலங்கை தமிழர்களை காப்பாற்ற போராட வேண்டும்.

தி.மு.க., அ.தி.மு.க.

இலங்கை தமிழர் பாதுகாப்பு இயக்கம் அரசியலுக்காக உருவாக்கப்பட்ட அணி அல்ல. இந்த கூட்டத்திற்கு வரவேண்டும் என்று அ.தி.மு.க., தி.மு.க. ,திராவிட கழகம் ஆகிய கட்சிகளுக்கும் அழைப்பு விடுத்தோம். யாரையும் ஒதுக்க வேண்டும் என்ற எண்ணம் இப்போதும் இல்லை, எப்போதும் இல்லை. அனைவரும் ஒன்றுபட்டு இந்த பிரச்சினைக்கு போராட வேண்டும் என்பதுதான் நோக்கம். புது அணி உருவாக்கப்பட்டு உள்ளது என்று கருதவேண்டாம். இது அரசியலுக்கு அப்பாற்பட்ட அணி. இது தமிழர்களுக்கான அணி. இந்த இயக்கம் தேர்தலுக்காக ஏற்படுத்தப்பட்டதும் அல்ல.

வன்முறை கூடாது

இலங்கையில் நடைபெறும்போரை தடுத்து நிறுத்த வேண்டியது நமது கடமை மட்டும் அல்ல. உலகம் முழுவதும் உள்ள மக்களின் கடமையாகும். இலங்கை தமிழர்களுக்காக நடத்தப்படும் போராட்டத்தில் எந்தவிதமான வன்முறைக்கும் இடம் கொடுக்க வேண்டாம். அது பிரச்சினையை திசை திருப்பிவிடும்.

விடுதலைப் புலிகள் எந்த அரசியல் கட்சி தலைவர்களை பற்றியோ, கட்சிகளை பற்றியோ விமர்சனம் செய்யவில்øல. அனைவரினதும் ஆதரவையும் அவர்கள் நாடி நிற்கிறார்கள். இந்த ஆதரவினை பெருக்குவதின் மூலம் இந்திய அரசுக்கு ஒரு நிர்ப்பந்தத்தை ஏற்படுத்தி பிரச்சினைக்கு தீர்வு காண முடியும். தமிழர்கள் ஒன்றுபட்டு நிற்க வேண்டும் என்ற கனவு இன்று நிறைவேறியுள்ளது. இந்த கனவை சிøதத்துவிட யார் முயற்சி செய்தாலும் அதற்கு இடம் கொடுக்கக் கூடாது.

ரூ. 3 லட்சம் நிதி உதவி

தீக்குளித்து மரணம் அடைந்த முத்துக்குமார் குடும்பத்திற்கு இலங்கை தமிழர் பாதுகாப்பு இயக்கச் சார்பில் ரூ. 3 இலட்சம் வழங்கப்படும். ஒரு வீரமிக்க இளைஞர் உயிருக்கு இது விலையாகாது. ஆனாலும் முத்துக்குமார் குடும்பம் ஒரு எளிய குடும்பம். அவரை நம்பி வாழ்ந்த குடும்பம். அந்த குடும்பத்திற்கு துணையாக நிற்க வேண்டியது 6 1/2 கோடி தமிழ் மக்களின் கடமையாகும்

http://www.tamilsweet.com/Tamils/page.php?71

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.