Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பிரான்சில் வாழும் தமிழ்மக்களுக்கான பிரான்சுத்தமிழர் ஒருங்கிணைப்புக்குழுவின் விசேட அறிக்கை

Featured Replies

சிறிலங்கா சுதந்திரம் பெற்ற அன்றைய தினத்திலிருந்து தமிழினம் சுதந்திரத்தை இழந்து நிற்கின்றது. 61 ஆவது சுதந்திர தினத்தை சிறிலங்கா கொண்டாடவிருக்கும் இந்த நாட்களில் ஈழத்தமிழர்கள் மரணப்போராட்டத்தில் நிற்கின்றனர்.

இரத்தக்கறைபடிந்த நாட்களாகவும் தூக்கமின்றிய இரவுகளாகவும் நாட்கள் நகர்ந்து கொண்டிருக்கின்றன. உலகத்தமிழினமே உறவுகளின் அழுகுரலோடு கடந்து செல்லும் இந்நாட்களை நாம் வெறுமனே எண்ணிக்கொண்டிருந்தால் எங்கள் உறவுகளின் சமாதிகளைக்கூட சிங்கள பேரினவாதம் விட்டுவைக்கப்போவதில்லை.

நாம் காலம் தாமதிக்கும் ஒவ்வொரு கணங்களும் எம் உறவுகள் அங்கே துடித்துக்கொண்டிருக்கும் கணங்களாகவே கழிகின்றன. நாம் வாழும் ஒவ்வொரு நாடுகளிலும் பெப்ரவரி 4 ஆம்திகதியை கறுப்புதினமாக முன்னெடுத்து உலகின் கண்களில் உண்மையைக்கொஞ்சம் உறைக்கச்சொல்வோம்.

அன்றையதினத்தை மாபெரும் கறுப்புதினமாக முன்னெடுக்கும் முயற்சியில் பிரான்சிலுள்ள தமிழ்வர்த்தகர் சங்கமும் தனது பெரும் பங்களிப்பைச்செய்துள்ளது. அன்றையதினம் கடையடைப்பு தினமாக முன்னெடுப்பதாகவும் அறிவித்துள்ளனர். அத்தோடு பல்வேறு அரசியல் பிரமுகர்களும் கறுப்பு தினத்தில் பங்கெடுப்பதற்காய் முன்னாயத்தங்களை மேற்கொண்டு வருகின்றனர்.

பல்வேறு தமிழ் அமைப்புக்களும் இதற்கான தமது ஆதரவுகளைத்தெரிவித்தும் வருகின்றன. ஒவ்வொருதமிழனையும் வரலாற்றுக்கடமை அழைக்கின்றது. எழுச்சிகொண்ட தமிழர்களே மரணப்போராட்டத்தில் நின்று எம்மினம் மீளும் வரை அத்தியாவசியத்தேவைகள் தவிர்ந்த அத்தனையும் விடுதலைக்கே என்று சத்திய சபதம் எடுத்துக்கொள்வோம். எதிர்வரும் இந்த 4 ஆம் திகதியன்று தமது அத்தனை கடமைகளையும் நிறுத்திவிட்டு உறவுகளின் உயிர்களை மீட்கும் போராட்டத்தில் இறங்குவதற்காய் தமிழர்கள் எழுச்சிகொண்டுள்ளனர்.

காசாவில் 22 நாட்களில் 1200 உயிர்கள் பலிகொள்ளப்பட்டபோது வன்மையாகக்கண்டனம் செய்த உலகின் கண்களுக்கு நாளாந்தம் எண்ணிலடங்காமல் தொடரும் படுகொலைகள் கண்களில்படவில்லை . உலகத்தமிழ்நெஞ்சங்களே நாம் ஒவ்வொரு தமழனும் எமக்காய் குரல் கொடுக்கின்றபோதுதான் எமது தேசத:;தின் விடுதலை சாத்தியமாகும் . விண்மட்டும் புகழுற்று நின்ற தமிழன் விறைப்பற்று வீழ நாம் விட்டுவிடக்கூடாது. எம் இனத்தை முழுமையாகத்துடைத்தழிப்பதற்

Edited by tamil92

  • தொடங்கியவர்

04/02/2009 அன்று பிரான்ஸ்சில் எழுச்சி மாபெரும்பேரனி மேற்கோள் காட்டி பதில் எழுத: [நீங்கள் எழுதும் பதிலுடன் இங்குள்ள தகவலும் இணைக்கபட்டு பதிலளிக்கபடும்

04/02/09 புதன்கிழமை பி.ப3.00க்கு எழுச்சிப் பேரனி சிறிலங்காவின்

சுதந்திர தினத்தன்று சாவின் விளிம்பில் நின்று போராடும் வன்னி

உறவுகளுக்காக குரல் கொடுப்போம்.சிங்களரசு எம்மை முற்று முழு

தாக அழித்தொழிக்க முழு ழூச்சோடு கங்கணம் கட்டிநிற்கும் இவ்

வேளையில் நம் உறவுகள் அழிந்து போகாமல் தடுப்பதற்காக பிரான்ஸ் வாழ் தமிழ்மக்கள் அனைவரும் பேரணியாக ஒன்று திரள்

வோம்.

விழ விழ எழுவோம் வெல்வோம்

M°:ECOLE MILITAIRE

Line:8

metro-ligne-8-full;init:.gif

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.