Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

போரை முன்னெடுக்கும் பின்னணியில் இந்தியா: தமிழ் மக்கள் கவலை - பா.உ கஜேந்திரன்

Featured Replies

இன அழிப்பு முன்னரை விடவும் உக்கிரமாக இடம்பெறத் தொடங்கியுள்ளது. இதன் பின்னணியில் இந்தியா ஆயுதங்களையும், இராணுவ நிபுணர்களையும் வழங்கி இலங்கை அரசை ஊக்கப்படுத்தி, போரை முன்னெடுக்கும் செயற்பாட்டில் ஈடுபட்டுவருவதாக த.தே.கூ. பா.உ. கஜேந்திரன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக இலங்கையில் இருக்கும் இந்திய உயர்ஸ்தானியர் அலுவலகத்திற்கு அனுப்பிவைத்துள்ள கடிதத்தில் தெரி்விக்கப்பட்டுள்ளதாவது

வன்னியில் 450000 தமிழ் மக்கள் தங்குமிடங்களோ உணவு மருந்துப் பொருட்கள் உட்பட்ட மனிதாபிமான உதவிகள் எதுவும் இல்லாத நிலையில் அனைத்தும் இலங்கை அரசால் தடை செய்யப்பட்டுள்ள சாவின் விளிம்பில் வாழ்கின்றனர்.

மக்கள் பாதுகாப்பாக ஒதுங்குவதற்கென அறிவிக்கப்பட்ட பகுதிகளை இலக்கு வைத்து சிறீலங்கா அரச படைகள் தொடர்ச்சியாக மேற்கொண்டு வரும் எறிகணைத் தாக்குதல்கள் காரணமாக கடந்த ஒரு மாதகாலத்தில் நூற்றுக்கு மேற்பட்ட சிறுவர்கள் உட்பட 800 ற்கும் அதிகமான பொது மக்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன் 1900 ற்கும் அதிகமான மக்கள் படுகாயமடைந்துள்ளனர்.

தினமும் ஆகக் குறைந்தது 25 பொது மக்கள் படுகொலை செய்யப்படுகின்றனர். இன்றய தினம் மக்கள் செறிவாக வாழும் பகுதிகள் மீது சிறீலங்கா இராணுவம் 5000 திற்கும் அதிகமான பல்குழல் றொக்கற் குண்டுகளையும், ஆட்டிலறி எறிகணைகளையும்;, கொத்துக் குண்டுகளையும், எரி குண்டுகளையும் வீசி பெருமளவான பொது மக்களை படுகொலை செய்துள்ளதுடன் நூற்றுக் கணக்கான பொது மக்களை காயப்படுத்தியும் உள்ளது. வைத்தியசாலைகளும் தாக்கி அழிக்கப்படுகின்றன.

வைத்தியசாலைகள் அனைத்தும் இடம் பெயர்ந்து அடிப்படை வசதிகள் எதுவும் அற்ற நிலையில் ஓலைக் கொட்டில்களில் 9 வைத்தியர்களுடன் இயங்கிவருகின்றது. காயமடைந்தவர்களை பராமரிக்க முடியாத நிலையில் வைத்தியசாலைகள் திணறுகின்றது.

வன்னியில் இருந்து இராணுவக் கட்டுப்பாட்டுக்குள் சென்ற பெருமளவான பெண்கள் படையினரால் பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்கப்பட்ட பின்னரே யாழ்ப்பாணம் மற்றும் வவுனியாவில் அமைக்கப்பட்டுள்ள முகாம்களுக்கு அனுப்பப்பட்டுள்ளனர். மேலும் நூற்றக்கணக்கானோர் இராணுவத்தினரால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளதுடன் நூற்றுக் கணக்கானோர் இராணுவத்தினரால் ஆக்கிரமிக்கப்பட்ட பகுதிகளுக்குள் தடுத்து வைக்கப்பட்டு இராணுவத்தினரால் சித்திரவதை செய்யப்பட்டு வருகின்றனர்.

முகாம்களுக்கு அனுப்பப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்கள் அங்கிருந்து வெளியேற முடியாது. அந்த மக்களை சர்வதேச தொண்டு நிறுவனங்களோ ஊடகவியலாளர்களோ சென்று பார்வையிட முடியாது.

இவ்வாறான அவலங்கள் தொடரும் போது போரை நிறுத்தி மக்கள் கொல்லப்படுவதனை தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுக்கும் படி புலம்பெயர்ந்து வாழும் தமிழ் மக்கள் நோர்வே, ஐரோப்பிய ஒன்றியம், இந்தியா, அமெரிக்கா ஆகிய அனைத்து நாடுகளுக்கும் தொடர்ச்சியாக கோரிக்கைகளை விடுத்து வருகின்றனர்.

தமிழ் நாட்டுத் தமிழ் உறவுகளும் இந்திய மத்திய அரசிடம் இலங்கையில் யுத்த நிறுத்தம் ஏற்படுத் நடவடிக்கை எடுக்கும்படி தமிழக அரசிடமும் மத்திய அரசிடமும் கோரி வருகின்றனர்.

இந் நிலையில் இந்திய உயர் அதிகாரிகளான திரு சிவ்சங்கர்மேனன் அவர்களும் அவரைத் தொடர்ந்து திரு பிரணாப் முகர்ஐp அவர்களும் இலங்கை சென்று திரும்பியுள்ளனர். இவர்களது இலங்கை விஐயம் இலங்கையில் தமிழ் மக்களுக்கு எதிராக இலங்கை அரசு தீவிரப்படுத்தியுள்ள இன அழிப்பு போரை தடுத்து நிறுத்தி உடனடி போர் நிறுத்தம் ஒன்றினை ஏற்படுத்த வழி வகுக்கும் என்று தமிழ் மக்கள் பெரிதும் நம்பினர்.

எனினும் போர்ச் சூழலில் எவ்வித மாற்றங்களும் ஏற்படாத நிலையில் இன அழிப்பு முன்னரை விடவும் உக்கிரமாக இடம்பெறத் தொடங்கியுள்ளது. இதன் பின்னணியில் ஆயுதங்களையும், இராணுவ நிபுணர்களையும் வழங்கி இலங்கை அரசை ஊக்கப்படுத்தி, போரை முன்னெடுக்கும் செயற்பாட்டில் இந்தியா செயற்படுவதாகவே தமிழ் மக்கள் கவலையடைந்துள்ளனர்.

தமிழ் மக்களுக்கு எதிரான இன அழிப்பு போருக்கு இந்தியா வழங்கிவரும் ஆதரவை உடன் விலக்கி கொள்ள வேண்டும் என கோருவதுடன்.

உடனடி போர் நிறுத்தம் ஒன்றினை ஏற்படுத்வும் உணவு மருத்து உட்பட அவசர மனிதாபிமான உதவிகள் அனைத்தையும் அனுப்பிவைக்க நடவடிக்கை எடுக்கும்படி வேண்டுகின்றேன். தமிழ் மக்களை பாதுகாக்க அவசர நடவடிக்கை எடுக்கும்படி வேண்டுகின்றோம்.

pathivu.com

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.