Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

கலைஞருக்கு வந்த முதுகுவலி

Featured Replies

இலங்கைத் தமிழர் பிரச்சினையை ஒட்டி தமிழகத்தின் ஆளும் தி.மு.க. நேற்று முன்தினம் கூட்டிய செயற்குழுக் கூட்டத்தின் தீர்மானமும் அங்கு தி.மு.தலைவரும் முதல்வருமான் கருணாநிதி ஆற்றிய உரையும், அதற்குப்பின்னர் செய்தியாளர்களிடம் அவர் வழங்கிய பேட்டியும் இலங்தை; தமிழர் விடயத்தில் கருணாநிதியினதும், தி.மு.க.தலைமையினதும் அதன் மாநில அரசினதும் முகத்திரையைக் கிழித்து உண்மைச் சொரூபத்தை அம்பலப்படுத்தி விட்டன என்றே கூறவேண்டும்.

ஈழத்தமிழர்களின் இன்றைய பேரவல நிலைமையும் அவர்கள் சிங்களவர்களினால் கொடுமைக்கு உள்ளாக்கப்படும் நிஜத்தையும் கருணாநிதி இந்தப் பேட்டியில் திரும்பவும் பகிரங்கமாக ஒப்புக் கொண்டிருக்கிறார். தமிழக மக்கள்; ஒவ்வொருவரினதும் மன எண்ணத்தில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி நிற்கும் இந்தப் பெரும் கொடூரத்தை மறுக்க மறைக்க அதை ஒப்புக் கொண்டாரோ தெரியவில்லை.

இன்று ஈழத்தமிழர்கள் பச்சிளம் குழந்தைகள் கூட கொல்லப்படுகின்றார்கள். தாய் மார்கள் இழிவாக நடத்தப்படுகின்றார்கள். இந்த நிலையில் தமிழ்நாட்டின் தலைவர்கள் தங்களைக் காப்பாற்றுவார்கள் என்ற ஈழத்தமிழர்கள் குரல் கொடுக்கிறார்கள்..' கருணாநிதி கூறுகிறார்.

ஆனால் ஈழத்தமிழரின் அந்த எதிர்பார்ப்பை நிறைவு செய்யாமல் பதவிக் கதிரையை ஒட்டிப் பிடித்துக் கொண்டிருப்பதில்தான் 'திண்ணையைக் காலி செய்ய மாட்டேன் என அடம் பிடிப்பதில்தான் உறுதியாக நிற்கிறார் கருணாநிதி

'ஈழத் தமிழர்களின் நலனைப பாதுகாப்பாற்காகப் பதவியை இழந்து, அரசைத் துறக்கவும் தயார்' என்று அண்மையில் கூட 'வாய்வீரம்' காட்டிய 'வாய்ப்பேச்சு வீரர்' தான் இந்த கருணாநிதி என்பதனை மறுப்பதற்பாலானது.

'இலங்கையில் போரை நிறுத்தச் செய்வதற்கு இந்திய மத்திய அரசு போதுமான நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறப்படுகிறதே?' என்ற கேள்விக்குப் பதிலளித்த கருணாநிதி

"போதுமானதாக இல்லை என்பது தான் தி.மு.க.வின் நிலைமை. ஆனால் போரை நிறுத்தச் செய்யக் கூடிய அதிகாரமும் வலிமையும் மாநில அரசுக்கு இல்லையே ' எனப் பதிலளித்திருக்கிறார்.

அவர் கூறுவது போல இலங்கையில் போரை நிறுத்தச் செய்யக் கூடிய அதிகாரமமும் வலிமையும் மாநில அரசுக்கு இல்லை என்பது வாஸ்தவந்தான்.

ஆனால் அதனைச் செய்விப்பதற்கான அதிகார வலுவும், ஆளுமைப் பலமும், கட்டளை இடும் மிடுக்கும் இந்திய மத்திய அரசுக்கு நிலையவே உண்டு. அந்த வலிiமையை இந்திய மத்திய அரசு சரிவரப் பயன்படுத்தவிலை;லை என்பதுதான் பிரதான குற்றச்சாட்டு. 'மத்திய அரசு போதுமான நடவடிக்கை எடுக்வில்லை' என்பதை கருணாநிதியே நேரடியாக ஒப்புக் கொண்டமை கூட இந்த அடிப்படையில்தான்.

உண்மையில் இலங்கையில் போரை நிறுத்தச் செய்யும் நேரடி அதிகாரபலம் தமிழக அரசுக்கு இலாதபோதும் இப்படிச் செய்யும் வலிமை உடைய இந்திய மத்திய அரைச, அத்தியையில் செயற்படவைக்கும் அதிகாரமும், வலுவும் செல்வாக்கும் மாநில அரசுக்கும் தி.மு.காவிற்கும் ரொம்பவே தாராளமாகவே நிறையவே உளளன என்பது மறைக்கக் கூடியதொன்றல்ல.

அவரது தி.மு.க எம்பிக்களின் ஆதரவில்தான் மத்திய அரசு இன்று நிலைத்து நீடிக்கின்றது. மத்திய அரசுக்குத் தான் கொடுத்து வரும் முண்டைத் தி.மு.க விலக்கிக் கொண்டால் மத்திய அரசு கவிழ வேண்டியதுதான்.

ஆனால், அந்தச் செல்வாக்கை சாதக நிலையை ஈழத்தமிழர்களுக்காக இந்திய மத்திய அரசை செயற்பட வைக்கும் விடயத்துக்காக பயன்படுத்த கருணாநிதி விரும்பவில்லை. அப்படி மத்திய அரசை மிரட்டிப் பணிய வைப்பதற்கான 'முதுகெலும்பு' அவருக்கு இல்லை.

அப்படி மத்திய அரசையும், மத்திய அரசின் ஆளும் காங். கட்சியையும் இதற்காக அச்சுறுத்தப் போய், மத்தி அரசு தமிழக மாநில அரசின் ஆட்சியில் வைத்துக் காலை வாரி விட்டால் என்ன செய்வது என்ற பயம் பீதி அச்சம் கருணாநிதி

இதைத்தான் ஈழத்தமிழர் பிரச்சினையை வைத்து 'அண்ணன் எப்போது சாவான் திண்ணை எப்போது காலியாகும்' என சிலர் எதிர்பார்த்து நப்பாசையுடன் காத்துக் கிடக்கிறார்கள் என்று கருணாநிதி குறிப்பிடுகின்றார்

ஈழத்தமிழர் நலனுக்காகக் கூடத் திண்ணையை விட்டுக் கொடுக்கும் எண்ணத்தில் கருணாநிதி இல்லை என்பது தான் வெளிப்படை.

தமது முதல்வர் பதவியைக் கூட ஈழத்தமிழருக்காகத் துறக்கத் திராணியற்ற முதுகெலும்பற்ற நிலையில் தாம் உள்ளார் என்பதையும், பதவி மீது தமக்குள்ள மோகத்தையும் மேற்படி பேட்டிகளில் வெளிப்படையாகக் கருணாநிதி ஒப்புக் கொண்டுவிட்டார் என்பது தெளிவாகின்றது.

முதுகு வலியால் அவஸ்தைப்படும் அவர் மருத்துவமனையில ஏழு, எட்டு நாட்களாக இருக்கிறார் என்பதையும் இன்னும் ஒரு வாரம் இருக்க நேரிடும் என்பதையும கூட இப் பேட்டியில அவர் ஒப்புக் கொண்டுள்ளார்.

'முதுகெலும்பு' இல்லாததால் வந்த முதுகு வலியோ இது.....?"

நன்றி :சுடர்ஒளி

ஆசிரியர் தலையங்கம்

அவரது தி.மு.க எம்பிக்களின் ஆதரவில்தான் மத்திய அரசு இன்று நிலைத்து நீடிக்கின்றது. மத்திய அரசுக்குத் தான் கொடுத்து வரும் முண்டைத் தி.மு.க விலக்கிக் கொண்டால் மத்திய அரசு கவிழ வேண்டியதுதான்.ஆனால், அந்தச் செல்வாக்கை சாதக நிலையை ஈழத்தமிழர்களுக்காக இந்திய மத்திய அரசை செயற்பட வைக்கும் விடயத்துக்காக பயன்படுத்த கருணாநிதி விரும்பவில்லை

:):(

ஐயா! கலைஞர் மத்திய அரசுக்கு தரும் ஆதரவை விலக்கி கொண்டால் காங்கிரஸ் தமிழக அரசுக்கு தரும் ஆதரவையும் விலக்கி கொள்ளும்!

அதன் பின்பு என்ன நடக்கும் தெரியுமா?

காங்கிரஸ் பாராளுமன்றத்தை கூட்டி தன் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும்.

இதற்கு மத்திய அரசுக்கு ஒரு குறிப்பிட்ட கால அவகாசம் வழங்கப்படும்!

ஆனால் மத்திய அரசோ 365ம் சரத்தை பாவித்து சட்ட ஒழுங்கு சரியாக பேணப்படவில்லை என்பது போன்ற காரணங்களை காட்டி

இரவோடு இரவாக ஒரு மாநில அரசை கவிழ்த்து விட முடியும்!

அப்போது தமிழகம் ஜனாதிபதி ஆட்சியின் கீழ் கொண்டுவரப்படும்.

ஜனாதிபதி ஆட்சி என்பது என்ன? டெல்லியில் இருந்து ஆட்சி செய்யும் காங்கிரசின் ஆட்சி தானே!

இன்றைய சூழ்நிலையில் அடுத்த மூன்று மாதத்திற்கு தமிழகத்தில் ஜனாதிபதி ஆட்சி என்ற பெயரில் காங்கிரசின் அடாவடி ஆட்சி நடப்பது ஈழத்தமிழர்களுக்கு பலம் சேர்க்கும் என்று சொல்கிறீர்களா???

அதன் பின்பு காங்கிரஸ் ஜெயலலிதாவுடன் கூட்டணி அமைத்து, ஜனாதிபதி ஆட்சியில் உள்ள அதிகாரங்களை துஷ்பிரயோகம் செய்து,

திருட்டு வாக்குகள் மூலம் ஜெயலலிதாவை தமிழக ஆட்சிக்கட்டிலில் ஏற்றிவிட்டால், நிலைமை கேட்கவே தேவை இல்லை.

அதன் பின்பு மத்தியில் பி.ஜே.பி ஆட்சிக்கு வந்தாலும் பயன்படப்போவதில்லை!

நான் ஈழத்தமிழர் பிரச்சினையில் கலைஞர் சரியான வழியில் செயற்படுகிறார் என்று சொல்லவரவில்லை. அவரின் செயற்பாடுகள் முதுகெலும்பு முறிந்து போனவரின் செயற்பாடுகள் போலவே உள்ளன என்பதையும் மறுக்கவில்லை.

ஆனால் இன்றைய நிலையில் தி.மு.க ஆட்சி கவிழ்க்கப்பட்டு ஜனாதிபதி ஆட்சி வருவது என்பது தமிழகத்தில் தற்போது தீவிரமடைந்து வரும் ஈழத்தமிழர் ஆதரவு நிலைப்பாட்டுக்கு பெரும் தீங்கு விளைவிப்பதாகவே இருக்கும்.

உணர்ச்சிவசப்பட்டு எழுதி தீர்த்துவிடுவது சிலவேளை வாசிப்பதற்கு விறுவிறுப்பாக இருக்கலாம். ஆனால் அரசியல் என்று வரும் போது பல கோணங்களில் சிந்தித்து முடிவு எடுக்க தவறுவோமானால் நாம் மேலும் மேலும் சிக்கல்களில் மாட்டிக்கொள்வதில் தான் போய் முடியும்!

Edited by vettri-vel

அது முதுகு வலி இல்லை தமிழனின் முதுகில் குத்துவதால் வந்த திருகுவலி...

முதுகு இருந்தால் வலி வரத்தான் செய்யும்.

தமிழர்களே தமிழர்களே.... என

அந்த ரீவிக்கு கொடுத்தது விளம்பரம்

தத்துவ முதிர்மையாக எண்ணிபார்த்தேன்...

அந்த ரிவீயை... எல்லா ரீவியிலும் விட (தமிழ்நாட்டு)

ஏதோ இந்த வயதில் சொல்லவாறார் என.. எண்ணிப்பார்த்தேன்...

இனி அவரே யோசிக்கட்டும்.... தான் சொன்ன வார்தைகளை...

(அது அவர் குரல் இல்லை என கூட இப்ப சொல்லலாம்....)

இந்த வயதிலும் அவர் முதிர்ச்சி அடையவில்லையா...

அல்லது இந்தவயதிலும்... பொருளாதாரமும்... (அவர்தம் குடும்பத்துக்கு அரசியல் வாழ்க்கை தேடுவதா)

உங்கள் வாழ்க்கை... கடவுளே... அய்யா உங்களுக்கு இந்த வயதிலும் இது தேவையா...

இனி நீங்களே உங்களை நினைத்துபாருங்கள். :lol: எங்களை விடுங்கள். :lol:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.