Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

புதுக்குடியிருப்புக்கான போர்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

புதுக்குடியிருப்புக்கான போர்

விதுரன்

முல்லைத்தீவில் புதுக்குடியிருப்பைக் கைப்பற்றும் தீவிர முயற்சியில் படையினர் இறங்கியுள்ளனர். விடுதலைப் புலிகளின் கடைசிக் கோட்டையாக புதுக்குடியிருப்பே இருப்பதாகக் கருதும் படையினர் அதனை சகல முனைகளிலும் சுற்றிவளைக்க முயல்கின்றனர். அனைத்து படையணிகளும் புதுக்குடியிருப்பை நோக்கிய பாரிய நகர்வுகளை மேற்கொண்டு வருகின்ற போதும் விடுதலைப் புலிகளின் மிகக் கடுமையான பதில் தாக்குதலால் புதுக்குடியிருப்புக்கான போர் நீண்டு செல்வதாக படைத்தரப்பு கூறுகிறது. இதனால் தங்களது அனைத்து வளங்களையும் இங்கு குவித்து படையினர் பெரும் போரில் இறங்கியுள்ளனர்.

இந்தப் பகுதியிலேயே நான்கு இலட்சத்திற்கும் மேற்பட்ட பொது மக்கள் சிக்குண்டுள்ளனர். இந்த மக்களின் பாதுகாப்பு குறித்து அரசு சிறிதும் கவனம் செலுத்துவதாகத் தெரியவில்லை. இங்கு இடம்பெறும் ஷெல், பல்குழல் ரொக்கட் மற்றும் பீரங்கித் தாக்குதல்களில் தினமும் பெருமளவானோர் கொல்லப்படுகின்றனர். "கிளஸ்ரர்' ரக ஷெல்கள் இந்தப் பகுதிகளில் ஏவப்பட்டுள்ளதாக ஐ.நா.கடும் குற்றச்சாட்டு சுமத்தியுள்ளது. ஒரு ஷெல் பல ஷெல்களாகப் பிரிந்து சென்று வெடித்து பேரழிவை ஏற்படுத்தும் கிளஸ்ரர்கள் (கொத்தணிக் குண்டு) யுத்த முனையில் தடை செயப்பட்டதொரு போராயுதமாகும். இதனைப் படையினர் புதுக்குடியிருப்பில் பயன்படுத்தியுள்ளதாக ஐ.நா.அமைப்புக்கள் தெரிவித்துள்ளன.

தற்போதைய போரில் தினமும் பெருமளவு அப்பாவிப் பொது மக்கள் கொல்லப்படுகின்றனர். நூற்றுக்கும் மேற்பட்டோர் தினமும் படுகாயமடைகின்றனர். ஆஸ்பத்திரிகள் தொடர்ந்தும் இலக்கு வைக்கப்படுவதால் காயமடைவோரை ஆஸ்பத்திரிகளுக்கு கொண்டு செல்ல முடியாத நிலையுள்ளது. ஆஸ்பத்திரிகள் இல்லாமல் போனால் அங்கு மக்களால் தொடர்ந்தும் தங்கியிருக்க முடியாது. மக்களை வெளியேற்றுவதற்காக ஆஸ்பத்திரிகளை படையினர் இலக்கு வைப்பதாக புலிகள் குற்றஞ்சாட்டியுள்ளனர். கடந்த சில வாரங்களில் மட்டும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் கொல்லப்பட்டுள்ளனர். மூவாயிரத்திற்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். இவர்களில் மிகச் சிலரே மேலதிக சிகிச்சைக்காக வவுனியா ஆஸ்பத்திரிக்கு கொண்டுவரப்பட்டுள்ளனர். அங்கிருந்து மேலதிக சிகிச்சைக்காக வெளியிடங்களுக்கு அனுப்பப்படாத நிலையில் தினமும் பலர் இறக்கின்றனர். வன்னியில் அப்பாவி மக்கள் தினமும் சந்திக்கும் பேரவலத்தை எழுத்தில் வடிக்க முடியாது.

தொடர்ந்தும் மக்கள் கொல்லப்படுவதால் புலிகளுக்கே நெருக்கடிகள் அதிகரிக்கின்றன. அந்த மக்களை புலிகள் வெளியேற அனுமதித்தால் அப்பாவி மக்களுக்கான இழப்புகளை தடுக்க முடியுமென அரசும் படைத்தரப்பும் கூறுகின்றன. சர்வதேச நாடுகளும் இலங்கை அரசு கூறுவதற்கேற்ப அந்த மக்களை வெளியேற புலிகள் அனுமதிக்க வேண்டுமெனக்கூறி புலிகள் மீது கடும் அழுத்தங்களை கொடுக்கின்றன. அங்கு மக்களுக்கான இழப்புகள் அதிகரிக்க அதிகரிக்க புலிகள் மீதான இந்த அழுத்தமும் அதிகரிக்கிறது. அதேநேரம் புலிகள் மீதான அழுத்தத்தை மேலும் அதிகரிப்பதற்காக அரசும் தாக்குதலைத் தீவிரப்படுத்துகிறதே தவிர, அப்பாவி மக்கள் தினமும் கொத்துக் கொத்தாக வீழ்ந்து மடிவது குறித்து சற்றும் பொருட்படுத்தவில்லை. புலிகளுக்கு அழுத்தத்தை அதிகரிப்பதற்காக அப்பாவி மக்களின் உயிர்களைக் காவுகொள்ளவேண்டாமென அரசை வற்புறுத்த சர்வதேச சமூகமும் தயாராயில்லையென்பது இலங்கைக்கு சற்று ஆறுதலாகவேயுள்ளது.

அதேநேரம், புலிகள் வசமிருக்கும் எஞ்சிய நிலப்பரப்பையும் படையினர் கைப்பற்றி விடுவரென்பதால் தொடர்ந்தும் இழப்புகள் ஏற்படுவதை தவிர்க்க புலிகள் ஆயுதங்களை கைவிட்டு சரணடைந்துவிட வேண்டுமென இணைத் தலைமை நாடுகளான அமெரிக்கா, ஜப்பான், நோர்வே மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் கோரிக்கை விடுத்துள்ளன. இணைத்தலைமை நாடுகளின் இந்தக் கோரிக்கை கடும் விமர்சனத்துக்குள்ளாகியுள்ள

எல்லாத்தையும் முடிச்சமாதிரிக்கிடக்கு இந்தக்கட்டுரை.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.