Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

2000 பேர் பங்கேற்கும் போராட்டம்: படைப்பாளிகள், மாணவர்கள் டெல்லி புறப்பட்டனர்

Featured Replies

ஈழத்தில் நடைபெறும் இனப் படுகொலைகளுக்கு எதிராக தன்னெழுச்சி பெற்றிருக்கும் மாணவர் கூட்டமைப்பு, படைப்பாளிகள், கலைஞர்கள், மனித உரிமைப் போராளிகள், பெண்கள் அமைப்பினர், பத்திரிகையாளர்கள், திருநங்கைகள், தகவல் தொழில் நுட்ப வல்லுநர்கள், வழக்கறிஞர்கள், உழைக்கும் மக்கள் அனைவரும் இணைந்து ஈழத்தமிழர் தோழமைக் குரல் என்ற புதிய அமைப்பை உருவாக்கியுள்ளார்கள்.

01.02.2009ல் நடந்த முதல் கூட்டத்தில், டெல்லி பாராளுமன்றத்தின் கூட்டத்தொடர் தொடங்கும் நாளில் (12.02.09) பாராளுமன்றத்துக்கு முன் பேரணி, மறியல் மற்றும் உண்ணாநிலைப் போராட்டம் நடத்த முடிவு செய்தார்கள்.

அதன்படி ஈழத்தமிழர் தோழமைக்குரல் அமைப்பினர் இன்று டெல்லி புறப்பட்டு விட்டனர்.

ஈழத்தமிழர் தோழமைக் குரல் அமைப்பாளர்கள் லீனா மணிமேகலை மற்றும் கு.வெங்கடாசலம்,படைப்பாளிகள் சுகிர்தராணி,அஜயன்பாலா,மாலதிம

ைத்ரி, மாணவர் கூட்டமைப்பிலிருந்து 60 பேர் உட்பட மொத்தம் 200 பேர் சென்னையில் இருந்து ரயிலில் புறப்பட்டுள்ளனர்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் ஆர்.நல்லக்கண்ணு இவர்களை வழியனுப்பி வைத்தார்.

இந்த 200 பேருடன் டெல்லி பல்கலை மாணவர்கள் 1000 பேர் இணையவிருக்கிறார்கள். மேலும் டெல்லி தமிழர்களூம் இணைந்து 2000 பேராக சேர்ந்து பேரணி மற்றும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடவிருக்கிறார்கள்.

1. ஈழத் தமிழர் மீது சிங்கள அரசு நடத்தி வரும் இனப்படுகொலைப் போருக்கு துணை செய்யாதே.

2. தமிழீழ மக்களின் விடுதலைப் போராட்டத்திற்கு அங்கீகாரம் வழங்கு.

3. தமிழீழ மக்களின் வாழ்வுரிமையை உறுதிசெய்.

4. கொல்லப்பட்ட தமிழ் மீனவர்களுக்காக இலங்கை அரசின் மீது நடவடிக்கை எடு.

ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி இப்போராட்டத்தை நடத்துகிறார்கள்.

முன்னதாக தில்லிப்பயண நோக்கம் குறித்து நம்மிடம் பேசிய மாணவர் கூட்டமைப்பின் தலைவர் வெங்கடாசலம் " 12-ந் தேதி காலை நாடளுமன்றக் கூட்டத்தொடர் தொடங்கும்போது... நாங்கள் மிகப்பெரிய பேரணியாகச் சென்று நாடாளுமன்றத்தின் முன் உண்ணாவிரதத்தை நடத்தப்போகிறோம். பாராளுமன்றத்தை முற்றுகையிடுவோம். இதன்பின் தொடர்ந்து தில்லியில் தகிப்பை ஏற்படுத்தும் வண்ணம் ஒருவார காலம் பல்வேறு போராட்டங்களை நடத்த இருக்கிறோம். எங்களுடன் அங்குள்ள ஜவஹர்லால் நேரு மற்றும் தில்லி பல்கலைக் கழக மாணவர்களும் ஆயிரக்கணக்கில் கலந்துகொண்டு தில்லியைக் குலுங்கவைக்கப் போகிறார்கள். எங்களின் போராட்டக் குரலை மத்திய அரசால் உதாசீனப்படுத்த முடியாது." என்றார் காரமாக.

கவிஞர் லீனா மணிமேகலையோ " ஈழமக்கள் தொடர்ந்து ராஜபக்‌சேவின் ராணுவத்தால் தொடர்ந்து சித்திரவதைகளை அனுபவித்து வருகிறார்கள். நேற்றுகூட 47 தமிழ்ப் பெண்களை... அங்குள்ள கேடுகெட்ட ராணுவம் மிக மோசமான பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கியிருக்கிறது. இதையெல்லாம் கேட்கும் போது நெஞ்சு கொதிக்கிறது. இதுபோன்ற தகவல்கள் வெளியே வரக்கூடது என்றுதான் ஊடகங்களுக்கு தணிக்கை என்ற பெயரில் வாய்ப்பூட்டு போட்டிருக்கிறார் ராஜபக்‌சே. இந்தியாவும் உலகநாடுகளும் ஈழ விவகாரத்தை வெறும் தமிழர் பிரச்சினையாகப் பார்க்கக்கூடாது. மனித உரிமைமீறலாகத்தான் பார்க்க வேண்டும். தில்லியில் இருக்கும் மற்ற மொழிப்படைப்பாளிகளுக்கும் ஈழத்தின் தீவிர நிலையை உணர்த்த கருத்தரங்கங்களை நடத்துவதோடு... அங்குள்ள ஊடகங்களின் பார்வையையும் ஈழத்தின் பக்கம் திருப்பும் முயற்சியில் இறங்கப் போகிறோம்.

அதேபோல் சமாஜ்வாடி உள்ளிட்ட பல கட்சிகளின் எம்.பி.க்களைக் கொண்டு நாடாளுமன்றத்தில்... ஈழம்குறித்து கவன ஈர்ப்புத் தீர்மானம் கொண்டுவரும் முயற்சியில் சி.பி.ஐ. தலைவர் ராஜா ஈடுபட்டிருக்கிறார். இலங்கை விவகாரத்தில்... அடைத்துக்கிடக்கும் நடுவண் அரசின் கண்களையும் காதுகளையும் திறக்கச்செய்ய எங்கள் தோழமைக்குரல் அமைப்பு அங்கே சகல விதத்திலும் போராடும்." என்கிறார் எழுச்சிமயமாய்.

தோழமைக் குரல்கள் எழுப்ப இருக்கும் இன ரீதியான உரிமைக்குரல்... அல்லலுறும் ஈழத் தமிழ்மக்களுக்கு ஆறுதலைத் தரட்டும்

நன்றி www.tamiloosai.com

Source Link: http://tamiloosai.com/index.php?option=com...9&Itemid=68

Edited by தேசம்

எவ்வளவோ சுமைகளுக்கு மத்தியிலும் எமக்காக குரல் கொடுக்கும் தமிழ்நாட்டு உறவுகளுக்கு கோடானு கோடி நன்றிகள்..நன்றிகள்..நன்றிகள்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.