Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சிம்பாவே போன்ற ஒரு சர்வாதிகாரத்தை நோக்கி - பர்மாவைப் போன்ற இராணுவ ஆட்சியை நோக்கி இலங்கை பயணிக்கிறது - சொனாலி சமரசிங்க:

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

சிம்பாவே போன்ற ஒரு சர்வாதிகாரத்தை நோக்கி - பர்மாவைப் போன்ற இராணுவ ஆட்சியை நோக்கி இலங்கை பயணிக்கிறது - சொனாலி சமரசிங்க:

sonalisamarasinghe1qr6.jpg

சிம்பாவே போன்ற ஒரு சர்வாதிகார நிலையை நோக்கி அல்லது பர்மாவைப் போன்ற இராணுவ ஆட்சியை நோக்கி இலங்கை பயணிக்கிறது என்று அந்தப் போக்கிற்கு எதிராகப் போராடி அண்மையில் படுகொலை செய்யப்பட்ட சண்டே லீடர் பத்திரிகையின் ஆசிரியரான லசந்த விக்ரமதுங்கவின் துணைவியாரும் ஊடகவியலாளருமான சொனாலி சமரசிங்க தெரிவித்துள்ளார்.

அவரது கணவரான லசந்த விக்ரமதுங்கவின் கொலையாளிகளைக் கைது செய்ய அரசாங்கம் ஒரு நடவடிக்கையையும் எடுக்காத காரணத்தால் நாட்டை விட்டு வெளியேற வேண்டி வந்ததாகவும் சொனாலி விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

தான் எங்கிருக்கிறேன் என அடையாளம் காட்ட விரும்பாத ஒரு மறைவிடத்திலிருந்து கொண்டு அவர் வழங்கிய நேர்காணலில் இதனைத் தெரிவித்திருக்கிறார்.

அவர் தொடர்ந்து இது பற்றிச் சொல்கையில் லசந்தவின் படுகொலை குறித்து நான் கோபமடையவில்லை. உண்மையாகவே ஆழ்ந்த துயரமடைகிறேன். மனம் அமைதியின்றித் தவிக்கின்றது. ஆனால் எனக்குத் தெரிகிறது எனக்கு ஒரேயொரு இலக்குத் தான் இருக்கிறது. லசந்த எதற்காகப் போராடினாரோ அதனை நான் முன்னெடுத்துச் செல்ல வேண்டும். அவருடைய மரணம் பயனற்றதாகி விடக் கூடாது. என்கிறார் அவர்.

லசந்த அலுவலகத்திற்குச் சென்று கொண்டிருந்த போது மோட்டார் சைக்கிளில் வந்த ஒரு குழுவினரால் படுகொலை செய்யப்பட்டு ஒரு மாதம் கடந்த பின்னரும் கூட படுகொலைக்குப் பயன்படுத்தப்பட்ட ஆயுதத்தின் தன்மை பற்றி காவற்துறை இதுவரை எதுவும் வெளியிடவில்லை. படுகொலை தொடர்பான விசாரணைகள் எதுவும் மேற்கொள்ளப்படவில்லை என்றும் தெரிவித்த அவர் எனக்கான அச்சுறுத்தல் அதிகரித்து வந்தது. லசந்தவின் கொலையாளிகளுக்கு என்னைத் தெரியும். அவர்கள் என்னை அறிவார்கள். புலனாய்வு விடயங்களில் நான் லசந்தவுடன் இணைந்து பணியாற்றியது அவர்களுக்குத் தெரியும். இதனால் மறைந்து வாழ வேண்டிய நிலை எனக்கு ஏற்பட்டதால் நான் நாட்டை விட்டு வெளியேறினேன் என்கிறார் சொனாலி சமரசிங்க.

லசந்த சுடப்பட்ட செய்தி கேட்டு வைத்தியசாலைக்கு விரைகிறார் சொனாலி. அங்கு படுகாயமடைந்துள்ள லசந்தவைக் காண்கிறார். அவர் அங்கு கண்டது சுடப்பட்ட காயத்தை அல்ல, ஆழமான வெட்டுக்காயத்தை. ஆனால் சுடப்பட்டு இறந்ததாகவே உத்தியோகபூர்வமாகச் சொல்லப்பட்டது. வைத்தியர்கள் அவ்வாறான ஒரு காயத்தை தாம் காணவில்லை என சொனாலிக்குத் தெரிவித்தனர். ஆனால் அவர்கள் லசந்தவின் தலையில் பெரிய காயம் ஒன்றைக் கண்டதாகத் தெரிவித்தனர். அது ஒரு உறுதியான இரும்புச்சட்டகத்தைக் கொண்டு தாக்கிய காயமாக இருந்தது. யாரும் துப்பாக்கிச் சூட்டுச் சத்தத்தைக் கேட்டதாக இதுவரை தெரிவிக்கவில்லை.

ஒரு மாதம் கடந்து விட்டது. இதுவரை நியாயமான விசாரணை எதுவும் மேற்கொள்ளப்படவில்லை. சம்பவம் நடந்த இடத்திலுள்ள மக்கள் எவரும் விசாரிக்கப்படவில்லை. மோட்டார் சைக்கிளில் வந்த கொலையாளிகளைக் கண்ட எவரும் விசாரிக்கப்படவில்லை. லசந்தவின் கைத்தொலைபேசியை யார் எடுத்துச் சென்றது என்பது இதுவரை கண்டறியப்படவில்லை.

அச்சுறுத்தல் காரணமாக 30 ஊடகவியலாளர்கள் நாட்டை விட்டு வெளியேறியுள்ளார்கள். குற்றச்சாட்டுக்கள் எதுவமின்றி ஊடகவியலாளர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்கள். கடந்த மாதம் சிறிலங்காவின் மிகப்பெரிய தொலைக்காட்சி நிறுனங்களிலொன்று சூறையாடப்பட்டு எரிக்கப்பட்டது.

அரசாங்கம் 26 வருடங்களாக நடந்து வரும் போரை விடுதலைப் புலி கெரில்லாக்களைத் துடைத்தழிப்பதனூடாக முடிவுக்குக் கொண்டு வர சங்கற்பஞ் செய்திருக்கிறது. ஆனால் அத்தோடு தன் மீதான விமர்சனத்தையும் மௌனமாக்கும் முயற்சிகளையும் ஆரம்பித்திருக்கிறது.

போர்ப்பிராந்தியத்தில் அப்பாவிப் பொதுமக்கள் கொல்லப்படுவது பற்றி எமது கவலையை வெளிப்படுத்தினால் அரசாங்கம் தனது ஊடகங்களைப் பாவித்து எங்களைத் துரோகிகளாகவும் பயங்கரவாதிகளாகவும் முத்திரை குத்துகிறது.

இலங்கை சிறுபான்மையினரையும், வேறுபட்ட அபிப்பிராயமுள்ளவர்களையும் புறக்கணித்து, ஒரு வகையான பெரும்பான்மையின சர்வாதிகாரத்தை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது அது விரைவில் சிம்பாவேயாக அல்லது பர்மாவாக மாறிவிடும் என்றும் தனது நேர்காணலில் சொனாலி சமரசிங்க தெரிவித்துள்ளார்.

சொனாலியின் கணவரான சண்டே லீடரின் ஆசிரியர் லசந்த விக்ரமதுங்க ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவைக் கடுமையாக விமர்சித்ததோடு, விடுதலைப் புலிகளுக்கெதிரான இராணுவ நடவடிக்கைகளின் செலவினம் குறித்தும் கேள்வியெழுப்பி வந்தார்.

லசந்தவுக்கு மகிந்தவை பல தசாப்தங்களாகவே தெரியும் என்றாலும் கடந்த வருடம் முதல் தான் அவர் நெருங்கிப் பழக ஆரம்பித்தார். அவ்வாறான நட்பு இருந்த போதும் லசந்த மனித உரிமை மீறல்கள் மற்றும் ஊழல்கள் என்பவற்றை அம்பலப்படுத்தியே வந்தார். அதுவும் குறிப்பாக ஜனாதிபதியின் இளைய சகோதரர் கோத்தபாய ராஜபக்சவின் கீழ் இயங்கி வந்த பாதுகாப்பு அமைச்சின் நடவடிக்கைகள் பற்றியும் அம்பலப்படுத்தி வந்தார்.

டிசம்பரில் ஜனாதிபதியுடன்; இரவுணவுக்குச் சென்றிருந்தார். அதுவே அவர் ஜனாதிபதியுடன் இரவுணவுக்குச் சென்ற இறுதிச் சம்பவம். அது முடிந்து வரும் போது லசந்த மிகுந்த கவலையுடன் திரும்பி வந்தார்.

போர்த்தளபதியாக இருந்தவரும் பின்னர் அரசியலுக்கு வந்தவருமான மேஜர் ஜெனரல் ஜானக பெரோராவைக் கொன்றவர்கள் யார் என்பது தனக்குத் தெரியும் என்றும் அதனைத் தன்னால் நிரூபிக்க முடியுமென்றும் தனது கணவரான லசந்த ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவிடம் தெரிவித்ததாகச் சொன்னார் சொனாலி சமரசிங்க. மேஜர் ஜெனரல் ஜானக பெரேராவும் அவருடைய மனைவியும் ஒரு குண்டு வெடிப்பில் ஒக்ரோபரில் கொல்லப்பட்டனர்.

முன்னாள் சிப்பாயும் பின்னர் ஒரு காலத்தில் ராஜதந்திரி ஆக இருந்தவரும், அரசியலுக்கு வந்த பிற்பாடு அவர் அரசாங்கத்தின் யுத்ததந்திரோபாயம் முழுவதையும் அதற்கு எதிரானதாக மாற்றினார்.

லசந்த பாதுகாப்பு அமைச்சை நீதிமன்றிற்கு இழுத்தார். மேஜர் ஜெனரல் ஜானக பெரேராவைக் கொன்றவர்கள் தொடர்பாக, பாதுகாப்பு அமைச்சிற்கெதிராக தம்மிடம் போதிய ஆதாரங்கள் இருக்கின்றன என அவர் ஜனாதிபதியிடம் தெரிவித்தார்.

விசாரணை வழிமுறைகளின் ஒரு பகுதியாக முதலில் அந்த ஆதாரங்களை விசாரணையின் போது நீதிமன்றில் ஒப்படைப்பது என்றும் அதன் பின்னரே அவை பற்றி பத்திரிகையில் அறிக்கையிடப் போவதாகவும் அவர் ஜனாதிபதியிடம் தெரிவித்திருந்தார். எவ்வாறோ லசந்த பிரச்சினைக்குரியவரானார். தனது உயிருக்கு அச்சுறுத்தல் உருவாகி வருவதை உணர்ந்தார்.

அவர் தன்னைக் காப்பாற்றும் முயற்சில் ஒரு வழியாக ஜனாதிபதியை டிசம்பர் இறுதியில் நடைபெற்ற தனது திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்கு வருமாறு அழைப்பு விடுத்திருந்தார். ஆனால் ஜனாதிபதி அதற்கு வரவேயில்லை.

அரசாங்கத்திடமிருந்து கடுமையான அச்சுறுத்தல்கள் வர ஆரம்பித்துள்ளதாக அவர் என்னிடம் தெரிவித்தார். நீதிமன்ற விசாரணைகள் சரியாக நடைபெற வேண்டும் என்பது குறித்து அவர் கலக்கமடைந்திருந்தார். இப்படி அவர் கலக்கமடைந்திருந்ததை ஒரு போதும் நான் கண்டதில்லை. அவர் கோபமுற்றவராகவும், கடுமையாக கலகக்மடைந்தவராகவும் இருந்தார். ஆனாலும் அவருக்கு மேஜர் ஜெனரல் ஜானக பெரேராவைக் கொன்றது யார் என்று தெரிந்திருந்தது. அதற்கான ஆதாரங்கள் கொழும்பிலுள்ள சட்டத்தரணி ஒருவரிடம் உள்ளன.

பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்சவிடம் பி.பி.சி செய்தியாளர் லசந்தவின் கொலை தொடர்பாகக் கேட்கிறார். அதற்கு அவரால் இளிக்கத் தான் முடிகிறது. அவர் சொல்கிறார் அதைப் பற்றி நான் கவலைப்படவில்லை என்று. இந்த மனிதர் தான் காவற்துறை மீதான முழுமையான கட்டுப்பாட்டைக் கொண்டிருப்பவர்.

லசந்த எழுதிய ஆசிரிய தலைங்கத்தில் தான் கொல்லப்பட்டால் தனது கொலைக்குப் பின்னால் அரசாங்கமே இருக்கும் என்று குறிப்பிட்டிருந்தார். லசந்த வியாழக்கிழமை கொல்லப்பட்டார். வெள்ளிக்கிழமை அவருடைய கணணியில் அவர் எழுதி வைத்திருந்ததை அவருடைய சகபாடிகள் கண்டெடுத்தனர். அதனை நான் முதற் பக்கத்தில் பிரசுரிக்கத் தீர்மானித்தேன். அது சரியான பதிலாக இருந்தது என்றார் சொனாலி சமரசிங்க.

கருத்து வேறுபாடுகளை தேசத்துரோகமாகவும், அரசாங்கத்தை விமர்சிப்பவர்களை துரோகிகளாவும் காணும் ஒரு அரசாங்கம் இருக்கும் இடத்தில் நீங்கள் உயிர்வாழ முடியாது. எனதும் லசந்தவினதும் அரசாங்கம் தெடர்பான விமர்சனங்கள் விடுதலைப்புலிகளின் வழிமுறைகளுக்கு ஆதரவளிக்காத வகையிலேயே அமைந்திருந்தன.

இராணுவத்தினர் விடுதலைப்புலிகளைத் தோற்கடிப்பது மட்டும் பிரச்சினைக்குத் தீர்வாக இருக்கப் போவதில்லை எனக் குறிப்பிட்ட சொனாலி சமரசிங்க, சிறுபான்மையினரான தமிழர்களுக்கு அரசியல் தீர்வொன்று வழங்கப்பட வேண்டும் என்பதோடு, அவர்கள் பெரும்பான்மையான சிங்கள பௌத்தர்களுக்குக் கீழ்ப்பட்டவர்களாக அல்லாமல் சமமானவர்களாக நடாத்தப்பட வேண்டும் எனவும் தெரிவித்தார்.

இந்தக் கட்டுரை காடியன் மற்றும் இன்டிப்பென்டன் இதழ்களில் வந்த கட்டுரைகளைத் தழுவி GTN ஆல் எழுதப்பட்டது. :

updated - 2009-02-12மூலம் - GTN

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.