Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

குறுகிய நிலப்பரப்பில் குவிக்கப்பட்டுள்ள படைபலமும் ஏற்படபோகும் பேரழிவும்

Featured Replies

சிறீலங்கா அரசானது தமிழ் மக்களின் உரிமை போரினை படைத்துறை ரீதியாக நசுக்கி விடுவதற்கு திட சங்கற்பம் பூண்டுள்ளது. தமிழ் மக்கள் மீதான இன அழிப்பிற்கு சிங்கள தேசத்தில் படித்த மக்கள் தொடக்கம் பாமர மக்கள் வரையிலும் பூரண ஆதரவை வழங்கி வருகின்றனர்.

வன்னி மண்ணில் நடைபெறும் கடுமையான வான்குண்டு தாக்குதல்களினாலும்இ எறிகணை வீச்சுக்களினாலும் சின்னம் சிறு குழந்தைகளும்இ பெண்களும்இ வயோதிபர்களும் என பெருமளவான மக்கள் சிதறுண்டு கொடுரமாக கொல்லப்பட்ட போதும்இ அதனை தமிழ் ஊடகங்கள் உலகிற்கு காண்பித்த போதும்இ உலகின் ஜனநாயகம் பேசும் நாடுகளிடம் இருந்து அதற்கு எதிராக சொற்ப நடவடிக்கைகளும் இல்லை.

குறிப்பாக இந்த கோர நிகழ்வு தென்னிலங்கையின் எந்த ஒரு மனித மனங்களையும் பாதிக்கவில்லை. மாறாக அதனை சந்தோசமாக கொண்டாடி மகிழ்ந்து வருகின்றது சிங்கள தேசம்.

வியட்னாம் போரின் போது அமெரிக்க படையினரின் குண்டு வீச்சுக்களின் அகோரங்களினால் தனது உயிரை காப்பாற்ற உடலில் உடைகள் கூட இன்றி நடுவீதியால் கதறியபடி ஓடிய சின்னஞ்சிறு பெண்குழந்தையின் கதறல் அமெரிக்காவையே உலுக்கியிருந்தது.

வியட்னாமில் அமெரிக்கா மேற்கொண்ட கொடூரமான போருக்கு எதிராக பல ஆயிரம் அமெரிக்க மக்கள் வீதிகளில் இறங்கி போராடியிருந்தனர். அந்த புகைப்படமும் உலகத்தின் விருதை பெற்று கொண்டது. ஆனால் கொடூரம் நிறைந்த சிறீலங்கா வான்படையின் குண்டு வீச்சுக்களினால் எத்தனையே சின்னஞ்சிறு குழந்தைகள் கொல்லப்பட்ட போதும் அது எந்த சிங்கள மக்களையும் பதிக்கவில்லை என்பது அவர்களின் கொடூரமான செயற்பாடுகளுக்கான ஆதராம் என்பதை தவிர எதனை கூறமுடியும்.

ஒருபுறம் சிறீலங்கா அரசு தமிழ் மக்களின் விடுதலைப்போரை இராணுவ ரீதியாக நசுக்கிவிட கங்கணம் கட்டி நிற்கையில் மறுபுறம் அனைத்துலகத்தின் முக்கிய நாடுகளும்இ பிராந்திய வல்லரசுகளும் அதனை ஊக்குவிப்பதுடன்இ அதற்கு நியாயம் கற்பிக்கவும் மறைமுகமாக முயன்று வருகின்றன.சிறீலங்கா அரசு மேற்கொண்டு வரும் கடுமையான வான் தாக்குதல்கள் மற்றும் எறிகணைத்தாக்குதல்களினால் முல்லைத்தீவு நோக்கி இ டம்பெயர்ந்துள்ள ஏறத்தாள 300இ000 மக்களும் சாவின் விழிம்பில் வாழ்ந்து வருகின்றனர்.

2006 ஆம் ஆண்டு ஏப்பிரல் மாதம் திருமலையின் சம்பூர் பகுதியில் கிபீர் மிகையொலி விமானங்கள் மேற்கொண்ட வான் தாக்குதலில் இருந்து இந்த வருடத்தின் ஜனவரி மாதம் 15 ஆம் நாள் வரையிலும் சிறீலங்கா வான்படை 1345 தடவைகள் வான் தாக்குதல்களை மேற்கொண்டுள்ளதாக வான்படை மார் தட்டி வருகின்றது.இந்த தாக்குதல்களில் 1116 வான் தாக்குதல்கள் கிபீர்இ மிக்-27 மற்றும் எஃப்-7 ரக மிகையொலி விமானங்கள் மூலம் நடத்தப்பட்டுள்ளதுடன்இ 229 தாக்குதல்கள் எம்ஐ-24 மற்றும் எம்ஐ-35 ரக தாக்குதல் உலங்குவானூர்திகளின் மூலம் நிகழ்த்தப்பட்டுள்ளது.

மிகையொலி விமானங்களை பொறுத்தவரையில் வன்னியில் ஆழமான பகுதிகளுக்குள் ஊடுருவி பல நூறு கிலோ எடை கொண்ட குண்டுகளை அதிக உயரத்தில் இருந்து பரசூட்டுக்கள் மூலம் வீசிவருவது குறிப்பிடத்தக்கது.இந்த விமானங்களில் மிக்-27 ரக விமானம் ஒரு தடவையில் ஏறத்தாள 4இ000 கிலோ வெடிகுண்டுகளையும்இ கிபீர் விமானம் 6இ000 கிலோ வெடிகுண்டுகளையும்இ எஃப்-7 ரக விமானம் 2இ000 கிலோ குண்டுகளையும் காவிச் செல்லக்கூடிவை. தாக்குதல் உலங்குவானூர்திகள் 81 மி.மீ உந்துகணைகளையும்இ 23மி.மீ மற்றும் 30 மி.மீ பீரங்கிகளையும் கொண்டுள்ளன. ஒவ்வொரு தடவையும் சிறீலங்கா வான்படை இரு விமானங்களை இனைந்து தாக்குதல்களை மேற்கொள்வதுடன்இ சில சந்தர்ப்பங்களில் நான்கு அல்லது ஆறு விமானங்களும் தாக்குதல்களை நடத்தியதுண்டு. எனவே இந்த தாக்குதல்களில் வன்னி மண்ணில் வாழும் அப்பாவி மக்களின் மீது அதிக உயரத்தில் இருந்து கொட்டப்பட்ட வெடிகுண்டுகளின் எடையை நீங்கள் கணிப்பிட்டு பார்த்தால் அதன் தாக்கமும் கெடூரமும் புரியும்.

வன்னியில் வாழ்ந்துவரும் 300இ000 இற்கு மேற்பட்ட மக்களின் இழப்புக்களையும் பொருட்படுத்தாது சிறீலங்கா அரசு பல ஆயிரம் கிலோ வெடிகுண்டுகளை வன்னி மண்ணின் மீது வீசிய போதும் விடுதலைப்புலிகள் அங்கு வாழும் மக்களுக்கு கற்றுக்கொடுத்த வான்தாக்குதலில் இருந்து தப்பும் பாதுகாப்பு உத்திகளே அவர்களை பெரும் அழிவுகளில் இருந்து பாதுகாத்து வருகின்றது.பாடசாலைகளும்இ வைத்தியசாலைகளும் கூட பதுங்குகுழிகளின் பாதுகாப்புக்களை நம்பியே அங்கு இயங்கி வந்தனஇ வருகின்றன. ஆனால் தற்போது இந்த மக்கள் ஒரு குறுகிய பிரதேசத்திற்குள் இடம்பெயர்ந்துள்ள நிலையில் சிறீலங்கா அரசு பெருமளவான ஆயுத வளங்களுடன் அங்கு தாக்குதலுக்கு தயாராகி வருவதுடன்இ செறிவான எறிகணை வீச்சுக்களையும்இ வான்குண்டு தாக்குதல்களையும் மேற்கொண்டு வருகின்றது.மருத்துவ வசதிகள் மற்றும் அடிப்படை வசதிகள் மிகவும் மட்டுப்படுத்தப்பட்ட நிலையில் வாழ்ந்துவரும் இந்த மக்களை அரசின் இந்த பாரிய குண்டு வீச்சுக்கள் கடுமையாக பாதித்து வருகின்றது.

இந்த வருடத்தின் ஆரம்பத்தில் இருந்து இன்று வரையிலும் அங்கு நடைபெற்ற தாக்குதல்களில் 77 க்கு மேற்பட்ட மக்கள் கொல்லப்பட்டும்இ 260 இற்கு மேற்பட்டோர் காயமடைந்தும் உள்ளனர். அவர்களில் பலர் சிறுவர்களும் குழந்தைகளும் என்பதும் குறிப்பிடத்தக்கது. இதில் கடந்த செவ்வாய்கிழமை சுதந்திரபுரம் பகுதியில் உள்ள இடம்பெயர்ந்தோர் முகாம் மீது மேற்கொள்ளப்பட்ட எறிகணைத்தாக்குதல்களில் 17 பொதுமக்கள் கொல்லப்பட்டதுடன்இ 51 இற்கு மேற்பட்டோர் காயமடைந்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.பெருமளவில

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.