Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

முத்துக்குமார்-இரவி-இரவிச்சந்திரன்-அமரேசன் மூட்டிய தமிழ்த் தேசியத் தீ பரவட்டும்! -தென்செய்தி

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

முத்துக்குமார்-இரவி-இரவிச்சந்திரன்-அமரேசன் மூட்டிய

தமிழ்த் தேசியத் தீ பரவட்டும்!

muthukumarhv5.jpg

1965ஆம் ஆண்டு இந்தி எதிர்ப்புப் போராட்டம் பிரளயம் போல கிளம்பி தமிழக அரசியலை தலைகீழாக மாற்றியது. அதற்குப் பிறகு இப்போது 2009ஆம் ஆண்டின் தொடக்கத்திலிருந்து தமிழகம் கொந்தளித்துக் கொண்டிருக்கிறது.

ravichandranuw3.jpg

இலங்கையில் தமிழ் மக்களை நாள்தோறும் கொன்று குவித்து வரும் சிங்கள பேரினவாத அரசைக் கண்டிக் கவோ தமிழினப் படுகொலையைத் தடுக்கவோ எதுவும் செய்ய இந்திய அரசு முன்வரவில்லை என்பதோடு சிங்களக் கொலைகாரக் கும்பலுக்கு ஆயுதங்களை யும், நிதியையும் வாரி வாரி வழங்கி வருகின்றது.

amaresanbw8.jpg

தமிழ்நாட்டில் அனைத்துக் கட்சி களும் தனித்தனியாகவும் கூட்டாகவும் இலங்கையில் போர் நிறுத்தம் செய்யப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தி போராடிப் பார்த்தாகிவிட்டது. தமிழக சட்டமன்றம் ஒருமுறைக்கு இருமுறை கூடி மத்திய அரசை வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றியாகிவிட்டது. முதலமைச்சர் தலைமையில் அனைத்துக் கட்சித் தூதுக்குழு இந்தியப் பிரதமரிடம் மன்றாடியாகிவிட்டது. ஆனால் எதுவுமே பயனளிக்கவில்லை.

pallapattiraviei6.jpg

தமிழக மாணவர்கள் களத்தில் இறங்கி பெரும் போராட்டம் நடத்தினர். ஆனால் கல்வி நிலையங்கள் அனைத்தையும் இழுத்துப்பூட்டி தமிழக அரசு மாணவர்களின் போராட்ட உணர்வை அணைக்க முயன்றது.

தேசத் தந்தை காந்தியடிகளின் பிறந்த நாளான அக்டோபர் 2ம் தேதி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தமிழகத்தில் உண்ணாநிலைப் போராட்டங்களை நடத்தியபோது அனைத்துக்கட்சிகளும் அதில் பங்கெடுத்தன. பின்னர் மத்திய அரசின் அலுவலங்களுக்கு முன்னால் அனைத்துக்கட்சியினரின் மறியல் போராட்டங்கள் நடைபெற்றன. சட்டக் கல்லூரி மாணவர்கள் செங்கல்பட்டு, சேலம் கோவை ஆகிய ஊர்களிலும், மருத்துவக் கல்லூரி மாணவர்கள் தஞ்சை யிலும் சாகும் வரை உண்ணாநிலைப் போராட்டங்களை நடத்தினார்கள்.

இவ்வாறு தமிழகம் முழுவதுமே கொதித்துப் போராடியபோதும் இந்திய அரசு போர் நிறுத்தத்தை வலியுறுத்த முன்வரவில்லை. தமிழக அரசோ இந்திய அரசின் தவறான நடவடிக்கைகளுக்கு ஆதரவு அளித்தது.

இந்த நிலைமையில் எத்தகைய போராட்டத்தினாலும் ஈழத்தமிழர்களை பாதுகாக்க முடியவில்லையே என்ற வேத னையில் சென்னையில் பத்திரிகையா ளரான இளைஞர் முத்துக்குமார் தன்னைத் தானே அழித்துக்கொள்வதின் மூலம் தமிழக மக்களை தட்டி எழுப்ப முடியும் என துணிந்து தீக்குளித்தார். 27 வயதே ஆன முத்துக்குமார் உயிர்த் தியாகம் செய்வதற்கு முன்பாக எழுதிய மரண சாசனம் உலகத் தமிழர்களை உலுக்கியது. பல நாட்களாக நன்கு சிந்தித்து அவர் எழுதிய அந்த மரண சாசனத்தில் ஒவ்வொரு சொல்லும் வாக்கியமும் மற்றவர்களின் சிந்தனை யைக் கிளறும் வகையில் அமைந்திருந் தன. முத்துக்குமார் அளித்த உயிராயு தத்தை உலகத் தமிழர்கள் இன்று ஏந்தி போராட்டத்தைத் தொடர்ந்து வருகின்றனர்.

முத்துக்குமாரின் இறுதி ஊர்வலம் சென்னையில் நடைபெற்றபோது அத்தகைய உணர்ச்சிப் பூர்வமான ஒரு காட்சியை இதுவரை தமிழகம் கண்ட தில்லை. முன்பின் யாரும் அறியாத முத்துக்குமரன் என்ற இளைஞனின் தியாகம் மக்களை எந்த அளவுக்கு ஈர்த்தது என்பதை அந்த ஊர்வலம் எடுத்துக்காட்டியது. ஊர்வலம் சென்ற வழி நெடுக இருபுறமும் கூடிநின்ற மக்கள் குறிப்பாக தாய்மார்களும், குழந்தைகளும் கண்ணீர் பெருக்கி கதறினார்கள்.

முத்துக்குமார் தீக்குளித்த துயரம் அடங்குவதற்குள் திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டையைச் சேர்ந்த பள்ளப் பட்டி என்னும் சிற்றூரில் வாழ்ந்த இரவி என்னும் தோழர் தீக்குளித்த செய்தி எல்லோரையும் கதற வைத்துவிட்டது. ஐந்து குழந்தைகளுக்குத் தந்தையான இரவி ஒரு எளிய விவசாயக் கூலித் தொழிலாளி ஆனாலும் ஈழத்தமிழர் களுக்காக தனது இன்னுயிரையே அர்ப்பணித்த அவர் தனது குடும்பத்தின் எதிர்காலம் பற்றி கொஞ்சமும் சிந்திக்க வில்லை. மாறாக ஈழத் தமிழ் குடும்பங் கள் காக்கப்படவேண்டும் என துடித்தார். அவரது உயிர்த் தியாகத்தையும் கொச்சைப்படுத்த காவல் துறை அதிகாரிகள் பெரும் முயற்சி செய்தார் கள். ஸ்டவ் வெடித்து இறந்ததாகவும், குடும்பப் பிரச்சினையில் மனம் உடைந்து இறந்ததாகவும் கூறி பிரச்சினையைத் திசை திருப்ப முயன்றார்கள். ஆனால் இரவியோ திட்டவட்டமாகவும் தெளிவாக வும் ஈழத்தமிழர் பிரச்சினைக்காகத்தான் தான் தீக்குளித்ததாக வாக்குமூலம் கொடுத்தார். அவரின் இறுதி ஊர்வலம் மதுரை நகரில் நடைபெற்றபோது அனைத்துக் கட்சித் தலைவர்களும் உணர்வாளர்களும் கொந்தளிக்கும் உள்ளத்தோடு பின்தொடர்ந்தனர்.

துயரம் தொடர்ந்தது. பிப்ரவரி 6ம் தேதியன்று நள்ளிரவில் சீர்காழி நகர 17வது வட்ட காங்கிரஸ் செயலாளராக இருந்த சு. இரவிச்சந்திரன் தீப்பிழம்பாக மாறி தன்னைத் தியாகம் செய்து காங்கிரஸ் குடும்பத்தைச் சேர்ந்த ஒருவர் மூன்று குழந்தைகளுக்குத் தந்தையானவர் வயதான பெற்றோரும் மனைவியும் கதறியழ தன்னைத்தானே அழித்துக் கொண்டார். உயிர்த்தியாகம் செய்த இரவிச்சந்திரனையும் கொச்சைப்படுத்த முயற்சி நடந்தது. ஆனால் ஆவேசமாக திரண்ட மக்கள் அதை எதிர்த்து முறியடித் தார்கள். சீர்காழியில் நடைபெற்ற இறுதி ஊர்வலம் அந்தச் சிற்றூரையே குலுங்க வைத்தது.

நான்கு நாட்கள் கழிவதற்குள் பிப்ரவரி 10ம் தேதியன்று சென்னையில் 65 வயதான ம. அமரேசன் தீக்குளித்தார். அவர் எழுதிவைத்த துண்டறிக்கையை காவல்துறை பறிமுதல் செய்தது. அவரது சாவையும் மூடி மறைக்க முயற்சி நடந்தது. ஆனால் அனைத்துக்கட்சித் தோழர்களும் மக்களும் கூடி அந்தச் சதியை முறியடித்தனர். வணிகராக ஓரளவு வசதியுடன் வாழ்ந்த ஒரு குடும்பத் தலைவர் தனது மனைவியை யும் பிள்ளைகளையும் பற்றிக் கவலைப் படாமல் ஈழத்தமிழர்களைப் பற்றியே கவலைப்பட்டு அவர்களைக் காப்பாற்ற தன்னையே அர்ப்பணித்துக்கொண்டார். இவரது இறுதி ஊர்வலத்திலும் பல்லாயி ரக் கணக்கான மக்கள் பங்கேற்றனர்.

12 நாட்கள் இடைவெளியில் நான்கு உயிர்கள் தங்களைத் தாங்களே தியாகம் செய்து கொண்டன. இந்த நால்வரின் உயிர்த் தியாகம் என்பது தமி ழக மக்களின் கொதிப்புணர்வை வெளிப் படுத்தியுள்ளன. எரிமலை குமுறு வது போல தமிழக மக்கள் குமுறிக்கொண் டிருக்கிறார்கள். எப்போது எரிமலை வெடிக்கும் என்பது யாருக்கும் தெரியாது.

முத்துக்குமாரும், இரவியும், இரவிச் சந்திரனும், அமரேசனும் மூட் டிக்கொண்ட தீ அவர்களின் உடல்களை மட்டும் சுட்டெரிக்கவில்லை. தமிழர்கள் அனைவரின் உள்ளங்களையும் சுட்டெறித்துக் கொண்டிருக்கின்றது. ஈழத்தமிழர்களுக் காக இந்த நால்வரும் செய்த உன்னத மான தியாகம் ஒரு போதும் வீண்போகக் கூடாது. வீண்போகவும் தமிழர்கள் அனுமதிக்கக்கூடாது.

இந்த நால்வரின் தியாகத்தால் உருவாகியிருக்கிற இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கம் கட்சிகள் கடந்து சாதிகள் கடந்து, மதங்கள் கடந்து மாபெரும் தமிழர் இயக்கமாக உருவாகி யுள்ளது. இந்த இயக்கத்தின் குடையின் கீழ் அனைத்துத் தமிழர்களும் ஒன்றுபட்டு நின்று ஈழத்தமிழர்களை காப்பாற்றுவதற்கு போராடவேண்டும். இதைத் தவிர வேறுவழி நமக்கு இல்லை. ஒன்று படுவோம், வெற்றிபெறுவோம்.

-தென்செய்தி

ஈழத்தமிழரின் பரிதாப நிலைகண்டு உள்ளத்தில் தீப்பிழம்புடன் உலகதமிழினமே துடித்துக்கொண்டு இருக்கிறது.. இந்த உணர்வை மீறி தங்கள் உடலையும் தீப்பிழம்பாக மாற்றி தங்கள் இன்னுயிரைகொடுத்து தொடர்ந்து கொடுத்து வருகிறது எம் உடன் சகோதரங்கள்..

உங்கள் உணர்வுகளை மதிக்கிறோம்.. உங்கள் ஆத்மா சாந்தியடையட்டும்..

தயவு செய்து இனிமேல் இப்படியான உயிர்கொடைகளைசெய்யாதீர்கள்.. போதும் எங்களின் கவலைகள் உங்களின் உயிர் இழப்புகளால் மேலும் அதிகரிக்கிறது..

நீங்கள் உயிருடன் இருந்து சாதிக்க வேண்டியது இன்னும் பல உண்டு... அடக்க வேண்டிய தமிழின எதிரிகள் பல உள்ளனர்.. வெளிப்படையாகவே எம்மினத்தை எதிர்கிறார்கள்..அவர்களை முறியடியுங்கள்.. உங்கள் உயிர் இழக்கும் எண்ணங்களை கட்டுப்படுத்துங்கள்..

தமிழர் நலன் அரசியல் கட்சிகள் இப்படியான உணர்ச்சியான மக்களை உள்வாங்கி அவர்களை சரியாக பயன்படுத்துங்கள்..

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.