Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இந்தியத் திரைப்படங்களும்; ஈழத்தமிழினமும் சில சிந்தனைகள் !

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியத் திரைப்படங்களும்; ஈழத்தமிழினமும் சில சிந்தனைகள் !

----------------------------------------------------------------------------------------------

0 இந்தியத் திரைப் படங்கள் எந்த வகையிலாவது எமது கலாசார,பண்பாட்டு விழுமியங்களை பேணவோ அன்றி வளர்க்கவோ முனைகின்றனவா ?

0 இவை சொல்லுகின்ற செய்திகள் எமது இனம், மொழி, கலை சார்ந்து எவ்வகையிலாவது பயன்படுகின்றதா ?

0 திரைப் படங்களில் இடம்பெறுகின்ற உரையாடல்களில் வருகின்ற வசனங்கள் எந்த வகையிலேனும் பயனுடையனவாக இருக்கின்றதா ?

0 தமிழ்மொழியோடு தமிழினமும் அழிவுக்குள்ளாகியிருக்கின்ற இன்றைய சூழலில், இந்தியத் திரைப் படங்கள் வெறும் கனவுலகில் எம்மையும் எமது எதிர் காலச் சந்ததிகளையும் சஞ்சரிக்க வைக்கின்றன என்ற உண்மையை உணர்ந்துள்ளோமா?

0 பணவருவாயை இலக்காகக் கொண்டு இளவயதினரின் பாலுணர்வைத் தூண்டுவதூடாகத் தமது பைகளை நிறைப்பதோடு, குமுகாயச் சீரழிவுக்கு வித்திடுகின்றமையை அறிந்துள்ளோமா ?

0 திரைப் படங்களில் இடம்பெறுகின்ற கதாநாயக பாணிக் குமுக மோதல்கள் எமது இளையோரிடையே தோற்றம் பெற்று உயிரிழப்புகள் ஏற்படுவது பற்றி நாம் எப்போதாவது அக்கறைப்பட்டதுண்டா?

0 கதாநாயக வழித் தோன்றல்களாக மாறிவிடும் இளையோர் தாமும் சீரழிந்து,தமது இனத்துக்கும் அவப்பேரைத் தேடிக்கொடுப்பதை தொடர்ந்தும் அனுமதிக்கப் போகின்றோமா ?

0 இந்தியப் பொருண்மியத்திற்கு குறிப்பிட்டளவு வருவாயை வழங்கும் திரைத் துறையினரின் இன்றைய இலக்காக இருப்பது புலம்பெயர் தமிழர்களின் நுகர்வுச் சந்தை வாய்ப்புமென்பதை புரிந்துகொண்டுள்ளோமா ? (இதனை நாங்கள் சொல்லவில்லை இந்திய நட்சந்திரங்களே சொல்கின்றன)

0 இதனூடாக எமது கலைஞர்களின் படைப்புச் சுரண்டலும் இடம்பெறுவதை நாம் கவனத்தில் கொண்டோமா ?

0 தமிழீழத்தவரை கொன்றொழித்து வரும் சிங்கள அரசுகளுக்குத் துணை போகின்றது இந்திய அரசு. இந்தியத்திரை நுகர்வானது எமது அழிவுக்கு நாமும் துணை போவதாகாதா ? ஏனென்றால் தொடர்ச்சியாக வீழ்ச்சியடைந்து வரும் நாடாக இருக்கும் சிறீலங்கா அரசை தூக்கி நிறுத்த படாத பாடுபடும் இந்திய அரசானது, படைத்துறை சார் பயிற்சி, ஆயுதம், ஆலோசனை, பணம், பொருண்மிய உதவி என்று அனைத்தையும் தமிழின அழிவுக்காகவே வழங்குகின்றது என்பதை எண்ணிப் பார்க்கின்றோமா?

0 அமைதிப் படையென்று வந்த இந்தியப் படைகள் எமது மக்கள் மீது பாலியல் வன்புணர்வு, கொலை, உடைமையழிப்பு, உடல் உளவியலழிப்புக்கள் என்று எமது இனம் மீது கட்டவிழ்த்து விட்ட பெருங்கொடுமைகளின் (எமது மக்களை நிலத்திலே போட்டு ராங்கிகளை ஏற்றிக்கொன்றமையை, எமது சகோதரிகளின் மார்பகங்களைக் கடித்துக் குதறியதை, எமது எதிர்காலச் சந்ததிகளின் கல்விக்கூடங்கள் அழிக்கப்பட்டமையை, நூலங்களில் ப+ட்டிவைத்து குண்டுவைத்துக் கொன்றமையை என்று ஓர் நீண்ட பட்டியலே இடலாம்) வடுக்கள் இன்றுவரை எமது உறவுகளை சீரழித்து வருகின்றமையை நாம் மறந்து விடுவதானது, எமது உறவுகளுக்குத் துரோகமிழைப்பதாகாதா? இது எமது இனத்துக்கே கேடாகாதா?

0 இந்தக்கொடுமைகள் நிகழ்ந்த போதோ, நிகழ்கின்ற போதோ எந்த ஒரு இந்தியத் திரை நட்சத்திரமாவது, இந்தக் கொடுமைகளுக்கு எதிராகக் குரல் கொடுத்துள்ளதா? கொடுக்க முனைந்துள்ளதா? என்பது பற்றி என்றாவது சிந்தித்துள்ளோமா?

0 இந்திய அரசானது ஈழத்தமிழரின் விடயத்திலே இரட்டை வேடமிட்டு எமது அழிவுக்கே வித்திட்டு வருவதை நாம் எப்படி நோக்குகிறோம். போராளிகளுக்கு உதவி என்ற போர்வையில், பயிற்சி, ஆயுதம், என்று ஆரம்பித்து, தம்மை எசமானர்களாக ஏற்க வைக்க எடுத்த முயற்சி தோல்வியுற்றதையடுத்து, ஈழத் தீவிருந்து எம்மைத் துடைத்தளிக்க உதவுவதைக் கண்டும், எமக்கு ஏன் தன்மான உணர்வு வர மறுக்கிறது என்று எம்மை நாம் என்றாவது கேட்டதுண்டா? அல்லது தன்மானமற்றவர்களா?

0 இந்தியத் திரைப்பட மாயையிலிருந்து நாம் விடுபடுவதூடாக எம்மை நாம் பேணிக் கொண்டு, எமது எதிர்காலச் சந்ததியினரை சரியான திசை நோக்கி நகர்த்திட இனியாவது முயல்வோமா ?

0 இந்தியத் திரைப்படங்களுக்கு கொடுக்கும் கண்மூடித் தனமான ஆதரவை என்றாவது, எமது கலைஞர்களின் படைப்புக்களிற்கு கொடுத்துள்ளோமா ?

0 என் வீட்டுக் குழந்தையை தட்டிக்கொடுத்து வழிகாட்டி வளர்த்தெடுத்து அதனை தொழிற்றுறைசார் முதலீடாக மாற்ற ஈழத்தமிழினம் ஏன் சிந்திக்காது இருக்கின்றது.அதனிடம் பலமில்லையா? திறனில்லையா? நம்பிக்கையில்லையா? கலைஞர்களில்லையா? தமிழருக்கு மனமில்லையா?

0 எனவே இன்றாவது நாம் சிந்தை கொள்வதூடாக, அறியாமை அல்லது தவறிலிருந்து விடுபட முயல்வோமா? இதற்காக ஆரோக்கியமான கருத்தாடல்களை மேற்கொள்வோமா? கருத்துக்களை அனைத்துத் தளங்க@டாகவும் பகிர்ந்து கொள்ள முனைவோமா?

0 எமது உழைப்பின் ஒரு பகுதியை நாம் எம்மையறியாமலே, எமது அழிவுக்கு வழங்குவதோடு, பெரும் அவமதிப்பிற்கும் ஆளாகின்றோம். எம்மை ஒரு மனிதர்களாகவே ஏற்க மறுத்துவரும் இந்திய அரசுகளின் மமதைப் போக்கால், எமது உறவுகள் பெரும் அழிவுக்குள்ளாவதை கருத்தில் கொள்வதோடு, பலஸ்தீனர்கள், திபெத்தியர்கள் தொடர்பாக ஓர் நிலையும், மிகமிக அருகிலே தொப்புள்கொடி உறவாக இருக்கும் சகோதர இனக் குழுமத்தின் அழிவைத் தடுக்க முனையாதமை போன்றவற்றைக் கருத்தூன்றி ஆய்வது எமது தார்மீகக் கடனில்லையா?

(எனது நண்பரொருவர் இந்தியத் திரைத்துறை தொடர்பாக ஒரு தலைப்பின் தொகுத்துத் தருமாறு கேட்டுக் கொண்டதற்காக இதனை 07.ஓகஸ்ட் 2008 இல் எழுதியிருந்தேன். இதனை யாழ்க் கள உறவுகளோடு பகிர்ந்து கொள்ளும் நோக்கில் பதிவு செய்கிறேன். )

Edited by nochchi

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.