Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வைகோவுக்கும் காத்திருக்கு தேசிய பாதுகாப்புச் சட்டம்! -குமுதம் முச்சந்தி

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

வைகோவுக்கும் காத்திருக்கு தேசிய பாதுகாப்புச் சட்டம்!

சித்தனிடம் இருந்து எந்தத் தகவலும் இல்லை. அதனால், அவனது குடிலை தேடிப்போய் விட்டது அலப்பறை டீம். குடிலின் வெளியே ஏகப்பட்ட கூட்டம். முகம்தெரியாத நபர்கள் உள்ளே செல்வதும் பேசிவிட்டுத் திரும்புவதுமாக இருந்தார்கள். சாவகாசமாக உள்ளே நுழைந்தது டீம். என்னய்யா சித்தா? ஏதாவது கட்சி ஆரம்பிச்சுட்டியோ. டெல்லி பிரமுகர்கள் வந்து பேசிட்டு போறாங்களோ? என நக்கலாக கேட்டார்கள். அடப்பாவிங்களா. வீடு தேடி வந்துட்டீங்களா? என்ற சித்தன், எல்லாம் தேர்தல் ஜோதிடம் பார்க்குற கூட்டம்தான்பா. நமக்கும் இதுதான சீசன்... என்றார்.

சரி. எந்தெந்தக் கட்சி எந்த மாதிரி ஆருடம் வச்சிக்கிட்டு இருக்கு? ஏதாவது ஒரு கமுக்கமான கணக்கு இருக்குமே... - கோபாலு.

"நானும் வெத்தலையில மைபோட்டு தடவி பார்த்துட்டேன்பா. யாரு மனசுல என்ன கணக்கு இருக்குன்னே தெரியல. என்ன ஆனாலும் சரி. தி.மு.க கூடதான் கூட்டணி அப்படீன்னு சோனியா முடிவாம். அடுத்தகட்ட வேலைப்பாடு தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தைதான். அதைக் கவனிக்க குலாம்நபி ஆசாத்தை சென்னைக்கு அனுப்பி வைச்சுட்டாங்க. இதன்மூலம் காங்கிரஸ் - தி.மு.க கூட்டணி உறுதி. அதை யாராலும் பிரிக்க முடியாதுன்னு வெளிக்காட்டுறதுதான் முக்கியமாம். சத்தியமூர்த்தி பவனுக்கு வந்த குலாம்நபி, கட்சி முக்கியஸ்தர்கள் ஒவ்வொருவரையும் தனித்தனியா கூப்பிட்டு பேசுறதுல இறங்கிட்டாரு. இதுல வாசன் கோஷ்டி மட்டும் மொத்தமா சந்திக்கணும்னு முரண்டு பிடிச்சிருக்கு"

சரிப்பா. இந்த சந்திப்பு சீன்ல என்ன முக்கியமாம்?

"வழக்கம்போல கோஷ்டி கானம்தான். ஏற்கனவே எம்.பி.யா இருக்கிறவங்களுக்கு திரும்ப சீட் கொடுக்கக்கூடாது. புதியவர்களுக்கு சீட் கொடுக்கணும். அப்பதான் கட்சி பலப்படும். இருக்கிறவங்களே இருந்தா நாசமாப்பூடும். இது ஒண்ணு. அடுத்தது தயவு பண்ணி தி.மு.க கூட்டணிய விட்டு வெளிய வாங்க. டெல்லி அம்மாவுக்காக சென்னை அம்மா காத்துட்டிருக்காங்கன்னு மெஜாரிட்டி புலம்பலா சொல்லியிருக்காங்க. குறைந்தபட்சம் விடுதலைப்புலிகளை ஆதரிக்கிற கட்சிகளையாவது நம்ப கூட்டணிக்குள்ள இல்லாம பார்த்துக்க தி.மு.க உத்தரவாதம் தரணும். குறிப்பா திருமாவளவனை கூட்டணியில வச்சுக்கக் கூடாதுன்னு சொல்றாங்க. இது ஒருவிதம். மூன்றாவதா தமிழ்நாட்டுல கூட்டணி மந்திரிசபை. காங்கிரஸ் எம்.எல்.ஏ.வும் மந்திரியா சுத்தணும். வழிபண்ணுங்கன்னு கேட்டுக்கிறாங்க. இப்படி எல்லாத்தையும் கூட்டிக்கழிச்சுப் பார்த்தா குலாம்நபி, கைல பெரிய தஞ்சாவூர் தாம்பூலத் தட்டை ஏந்திக்கிட்டு அய்யாசாமின்னு திமுககிட்டே கெஞ்சற நிலைக்கு போயிடுவாரு போல"- சித்தன்.

யோவ் சித்தா. நீ சொல்ற கணக்கு வேற. இப்ப நான் சொல்றேன் பாரு என்ற சுவருமுட்டி சுந்தரம்,

"காங்கிரசை குஷிப்படுத்துறதுக்காக வேண்டி சீமானைத் தூக்கி தேசிய பாதுகாப்புச் சட்டத்துல போட்டாச்சு. அதே மாதிரி கொளத்தூர் மணியையும் உள்ளே வச்சாச்சு. தூத்துக்குடி அனல் மின்நிலையத்தை திறந்து வைக்க வந்த பிரணாப் முகர்ஜிக்கு எதிரா கருப்புக்கொடி காட்டின வைகோவையும் உள்ளே வச்சாச்சு. இப்போ அவருக்கு ஜாமீன் கிடைச்சிருக்கு. ஆனா கருப்புக்கொடி போராட்டம் நடந்தப்போ சிலபேரு பிரணாப் முகர்ஜி உருவப்படத்தை எரிச்சதைக் காட்டி இனிமே யாராவது இந்திய தலைவருங்க படத்தை எரிச்சா வேடிக்கை பார்க்க முடியாது. அவிங்க மேலயும் தேசிய பாதுகாப்பு சட்டம் பாயும்னு ரொம்ப கடுமையா சொல்றாரு. அதாவது வைகோவையும் தேசிய பாதுகாப்பு சட்டத்துல உள்ள வச்சிட வாய்ப்பிருக்குன்னு சூசகமா சொல்றாரு. அனேகமா அதுவும் நடந்துடுமாம். ஆக வர்ற தேர்தல்ல காங்கிரஸ் கட்சிய கடுமையா எதிர்க்குற யாரும் பிரசாரம் செய்ய வெளிய இருக்கக்கூடாதுன்னு காங்கிரஸ் கட்சி நினைக்குறதை, கலைஞர் தீவிரமா செய்யறாரு"

சரி. அப்படிப்பார்த்தா திருமாவளவனை என்ன செய்யப் போகிறாராம்? - கோபாலு.

"கரிக்ட்டுபா. திருமாவையும் அப்படிச் செய்தாகணும்னு காங்கிரஸ் கட்சி துடியாய் துடிக்குது. ஆனா கலைஞர் மறுக்குறாரு. அப்படிச் செய்தா மெஜாரிட்டி தலித் ஓட்டு வங்கி நமக்கு கிடைக்காது. உண்மையைச் சொன்னா காங்கிரஸ் கட்சிக்கு தனியா எவ்வளவு ஓட்டு இருக்குமோ, அதைவிட திருமாவுக்கு கூடுதலா ஓட்டுவங்கி இருக்கு. போன சட்டமன்ற தேர்தல்ல தி.மு.க கூட்டணியில பா.ம.க. நின்னுச்சு. அதுவுமில்லாம கம்யூனிஸ்ட்டுங்க எல்லாம் இருந்த பெரிய கூட்டணி. அப்பவே ஒத்தையா அ.தி.மு.க பக்கம் இருந்த திருமா கட்சி பத்து தொகுதிக்கும் மேல பா.ம.க நின்ன தொகுதிய காலி பண்ணிடுச்சு. பல தொகுதியில தி.மு.க.கிட்டே குறைச்ச வாக்குல அ.தி.மு.க தோத்தது. அதுக்கு காரணமும் திருமா ஓட்டு வங்கிதான். அதை மறந்திடக் கூடாதுன்னு எடுத்துச் சொல்றாராம். அதனாலதான் திருமாவை கூட வச்சுக்கிட உறுதியா இருக்காரு. அதுவுமில்லாம இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கத்துல இருக்கிற வைகோ, கம்யூனிஸ்ட்டுங்க அ.தி.மு.க பக்கம் போய் தேர்தல் வேலை செய்றப்போ, அதே இயக்கத்துல இருக்கிற திருமா தி.மு.க பக்கம் தேர்தல் வேலை செய்றதுதான் உத்தமம்னு கணக்கு வச்சிருக்காரு"

எல்லாம் சரிதான். திருமாவளவன் என்ன செய்யப்போகிறாராம்- கோபாலு.

"பெரும் குழப்பத்துல இருந்தாரு. கலைஞர் சார்பா சிலபேரு பேசி சமாதானம் செய்தாங்க. அதோட வெளிப்பாடுதான் ஸ்டாலின் 57-வது பிறந்த நாளுக்கு நேர்ல வாழ்த்து சொன்னதும் நடந்துச்சு. ஆனாலும் காங்கிரஸ் விரோத போக்கை கைவிட முடியாதுன்னு சொல்றதுல தெளிவா இருக்காரு. இப்போதைக்கு தி.மு.க ஆதரவுதான். போகப்போக என்ன முடிவுங்கிறதை தெளிவா எடுப்போம்னு இருக்காராம்..."

மகா குழப்பமா இருக்கு. திருமாவை மாதிரி பா.ம.க.வும் தீவிர இலங்கைத் தமிழ் ஆதரவு, காங்கிரஸ் எதிர்ப்புன்னு இருக்கு. அதுவும் தமிழ் பாதுகாப்புல இருக்கு. அந்தக்கட்சி அ.தி.மு.க.வுல இருக்குமா? தி.மு.க.வுல இருக்குமா?- அன்வர்பாய்.

"ரெண்டு கட்சியிலும் இருக்காது. அது காங்கிரஸ்கூடத்தான் இருக்கும்போல..." என்று சிரித்த சுவருமுட்டி சுந்தரம்,

"என்னப்பா. நான் சொல்றது தலைசுத்தற மாதிரி இருக்கா.? வெளிவராத ஒரு விஷயத்தை சொல்றேன் கேளு. இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தேசிய செயலாளர் டி.ராஜா வேலூர்ல இருந்தாரு. காலைநேரம் அவர் வீட்டுல டிபன் சாப்ட்டுக்கிட்டிருக்கிறப்ப

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.