Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பசியால் வாடும் மக்களைப் பார்த்ததுமே நான் சாப்பிடும் போது கூட வலிக்கின்றது. சாப்பிட மனம் மறுக்கின்றது. இன்றைய காலகட்டத்தின் தேவை என்ன?

Featured Replies

இன்று மக்கள் வன்னியில் தினம் தினம் எதிரியின் குண்டுமழையினால் நனைந்தவண்ணமும் வெண்மணலும் செம்மணலாகின்றது. எங்கும் ஒரே பிண வாடை. எங்கும் சோகம், சிரிக்க மறந்த மனிதர்களாக வன்னி மக்களின் வாழ்வு. நேரடியாக வன்னி சென்று திரும்பிய செஞ்சிலுவைச் சங்க அதிகாரிகளுடன் கருத்துப் பகிர்ந்து கொண்டார். வன்னிநிலவரம்

கடற்கரையை நாம் படகுகளில் சென்றடைந்தோம் அங்கிருந்து சிறிது தூரம் கால் நடையாக நடந்து எமது செஞ்சிலுவைச் சங்க வாகனத்திற் பயணத்தினைத் தொடங்கினோம், எமக்காக நீண்டநேர அனுமதி இலங்கை அரசால் வழங்கப்படவில்லை. போகும் வழி எங்கும் குன்றும் குழியுமாகக் காணப்பட்டன. எங்கும் ஒரே துர்நாற்றவாடை.

காயப்பட்டவர்களை கொண்டுவந்து வைத்திருந்தார்கள். மக்களுடன் சந்திக்கும் வாய்ப்பு அப்போது கிடைத்தது. எவர் மனதிலும் சோகம், சிரித்தமுகங்களே மரத்துப் போயிருந்தன. எல்லாவற்றையும் தொலைத்தவர்களாக, சிங்கள அரசினை வெறுத்தவர்களாக கோபாவேசம் கொண்டவர்களாகக் காணப்பட்டனர். அங்கிருந்த மக்கள் வெளியிற் செல்லவோ அல்லது சிங்களவர்களிடம் மண்டியிட்டு அடிபணியவோ விரும்பவில்லை.

"எங்கட பிள்ளயள் இஞ்ச நிண்டு சண்டை பிடிக்குதுகள் அதுகளை விட்டுத்து எங்க போறது?" ஒரு தாய் அம்மிடம் திருப்பிக் கேட்ட கேள்வி. எமக்குத் தாறதையும் இலங்கை அரசு பறித்துக்கொள்ளுகின்றது. அரிசி என்பது எடுப்பதே கஸ்டமாக இருக்கின்றது. ஒரு வேளை உணவுக்கு கூட இங்கே பெரும் கஸ்டப்படவேண்டிக் கிடக்குது.

அண்டைக்கு நிவாரணம் எண்டு ஒரு கொஞ்சம் தந்தாங்கள் வேண்டப்போய் நிக்கேக்க அங்கயும் செல்லடிக்குறாங்கள். எல்லாச் சனத்துக்கும் வயித்தில பசிவலி, உடலெங்கும் உரசல் காயங்களும் குண்டுபட்ட காயங்களும், செல்லடிக்க விழுந்து படுத்து வலிகளும்.

பெரும்பாலான மக்கள் பெரும் சோகத்தில் ஆழ்ந்திருந்தனர். அழுக்கு உடைகளும், மக்களின் வேதனைகள் வார்த்தைகளில் வடிக்க முடியாதவையாக தழும்பின. இதனிடையே செல்லடிக்கும் நேரம் பார்த்து வீடுகளில் புகுந்து இருக்கும் உணவுப் பொருட்கள், பணம் விலையுயர்ந்த பொருட்களைக் கொள்ளையடிக்கவும் ஒருசிலர் துணிந்து செயற்படுகின்றனர்.

பசியால் வாடும் மக்களைப் பார்த்ததுமே நான் சாப்பிடும் போது கூட வலிக்கின்றது. சாப்பிட மனம் மறுக்கின்றது. நான் அம்மக்களுக்கு ஆதரவாக அவ்வாறு நடக்கின்றேன் என்று தெரிந்தால் மீண்டும் எனக்கு அம்மக்களைப் பார்க்க சிங்களப் பேரினவாத அரசின் எடுபிடிகள் அனுமதி மறுக்கின்றது. நா.............

இவ்வாறு தொடர்ந்து சென்றார் அந்த ஊழியர். பாதுகாப்புக் காரணங்களுக்காகவும் சிக்கல்களைத் தவிப்பதற்காகவும் தனது தனிப்பட்ட விபரங்களைத் தர மறுத்துவிட்டார். . .

நேர்காணல் : -

ச.சுதாகரன்

திருகோணமலை

Edited by யாழ்நிலவன்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

என்ன செய்ய அவராலும் புலம்பத்தானே முடியும்... எங்கட சனத்தை நினைத்தால் வாழ்க்கையே வெறுக்குது....உலகநாடுகள் இன்னும் கண்ணை விழித்துப் பார்காமல் இருப்பது தான் கொடுமை...

  • கருத்துக்கள உறவுகள்

இந்த அநாதரவான வேளையில் மக்களோடு மக்களாக் நின்று சேவை செய்யும் வைத்திய அதிகாரிகள். தாதியர் மற்றும் மருத்துவ துறை ஊழியர்களை எண்ணி பாருங்கள் என்னே ......அவர்களது தியாகம்.

  • 2 weeks later...
  • தொடங்கியவர்

எந்த வைத்தியர்களைச் சொல்கின்றீர்கள் நிலாமதி அக்கா? திருகோணமலையில் வந்து நிற்கும் வைத்தியத் தோல் போர்த்திய இந்திய அதிரடிப்படை, மற்றும் விசேடபடையணியையா? மக்களோடு மக்களாக மருந்து கட்ட மருந்தின்றி, கட்டத் துணியின்றி கஸ்டப்படும் எம் மருத்துவக் குழுக்களையா?

எனக்கொரு சந்தேகம் அக்கா, திருகோண மலையில மருந்து கட்டுறதுக்கு எதுக்கு பீரங்கிச் செலுத்தி? ஒருவேளை மருந்தை ஒரு குண்டில கட்டி வன்னிக்கு அனுப்புகினம் எண்டு சொல்லப் போகினமோ?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இந்த நிலை இந்த சந்ததியோடு முடியட்டும் இனியும் தொடர்ந்தால் தமிழன் வேரோடு அழிக்கப்பட்டுவிடுவான் நாம் எல்லோரும் ஒண்றுசேர்ந்து தான் இதனை நிறுத்தமுடியும்

  • தொடங்கியவர்

இந்த நிலை இந்த சந்ததியோடு முடியட்டும் இனியும் தொடர்ந்தால் தமிழன் வேரோடு அழிக்கப்பட்டுவிடுவான் நாம் எல்லோரும் ஒண்றுசேர்ந்து தான் இதனை நிறுத்தமுடியும்

உண்மைதான்; நாம் காலம் தாழ்த்தும் ஒவ்வொரு நிமிடமும் எம்மினம் அழிக்கப்படுகின்றது...

  • 2 months later...
  • தொடங்கியவர்

இந்த அநாதரவான வேளையில் மக்களோடு மக்களாக் நின்று சேவை செய்யும் வைத்திய அதிகாரிகள். தாதியர் மற்றும் மருத்துவ துறை ஊழியர்களை எண்ணி பாருங்கள் என்னே ......அவர்களது தியாகம்.

தம்முயிர் கொடுத்து எம்முறவுகளைக்காத்திட நினைத்தவர்கள்... தியாகிகள்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.