Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

புலிகளுக்கு சார்பாக ஆர்ப்பாட்டம் இடம்பெறும் நாடுகளிடம் இலங்கை கடும் ஆட்சேபம்: அமைச்சர் சமரசிங்க

Featured Replies

புலிகளுக்கு சார்பாக ஆர்ப்பாட்டம் இடம்பெறும் நாடுகளிடம் இலங்கை கடும் ஆட்சேபம்: அமைச்சர் சமரசிங்க

விடுதலைப் புலிகளுக்கு சார்பாக ஆர்ப்பாட்டங்கள் இடம்பெறும் நாடுகளுக்கு இலங்கை கடும் ஆட்சேபனையைத் தெரிவிக்கவுள்ளதாக மனித உரிமைகள் விவகார அமைச்சர் மஹிந்த சமரசிங்க கூறியுள்ளார்.

அவுஸ்திரேலியா, பெல்ஜியம், பிரிட்டன், கனடா, நியூஸிலாந்து, சுவிற்சர்லாந்து, அமெரிக்கா போன்ற நாடுகளில் புலிகளின் அனுதாபிகள் ஆர்ப்பாட்டங்களை நடத்துவதாக அமைச்சர் நேற்று முன்தினம் வியாழக்கிழமை தெரிவித்ததாக ஏ.எவ்.பி. செய்தி சேவை தெரிவித்தது.

தமிழ் நாட்டில் தீக்குளிப்பு மற்றும் புலிகளுக்கு ஆதரவான ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்று வருகின்ற போதும் இந்த விடயம் குறித்து கொழும்பு புதுடில்லியின் கவனத்துக்கு கொண்டு செல்லாது என்றும், ஏனெனில் புலிகளின் கொடிகளை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவோர் வைத்திருப்பதில்லை எனவும் அமைச்சர் கூறியுள்ளார்.

ஆனால், ஏனைய நாடுகளில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவோர் புலிக்கொடிகளுடன் காணப்படுவதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இந்த நாடுகள் சிலவற்றில் புலிகள் இயக்கம் தடைசெய்யப்பட்ட அமைப்பாகும். புலிகளின் கொடிகளை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவோர் பயன்படுத்த இந்த நாடுகள் அனுமதித்திருப்பதையிட்டு வியப்படைகிறோம். எமக்கு எதிராக பகிரங்கமாக அவர்கள் ஆர்ப்பாட்டம் நடத்துகின்றனர் என்று அமைச்சர் கூறியுள்ளார்.

இந்த நடவடிக்கைகள் பயங்கரவாதத்திற்கு ஆதரவளிப்பதென சம்பந்தப்பட்ட நாடுகளிடம் ஆட்சேபனை தெரிவிக்குமாறு இலங்கைத் தூதரகங்களிடம் கேட்கப்பட்டுள்ளது.

அவர்கள் புலிகளுக்கு தொடர்ந்து நிதி உதவி அளிப்பார்களென நாம் கருதுகிறோம் என்றும் அமைச்சர் கூறியுள்ளார்.

http://www.tamilwin.org/

  • கருத்துக்கள உறவுகள்

இந்த உலகப் பரப்பிலே வாழும் ஏழு கோடிக்கு மேற்பட்ட தமிழினம் இன்று ஒன்று திரண்டு "புலிகளே தமிழர் தமிழரே புலிகள் "„ என உலகின் செவிகளுக்கு உரத்துச் சொல்வதூடாகச் சிங்களத்தின் பொய்ப்பரப்புரை பிசுபிசுக்கத் தொடங்கியுள்ள நிலையில் வெளிநாடுகள் மேல் பாயத்தொடங்கியுள்ளது. எனவே உலகெங்கும் பரந்து வாழும் தமிழினம் இன்னும் முழுவீச்சோடு எழ வேண்டும். அப்போதுதான் இந்த உலகு கொஞ்சமேனும் வேகமாக அசையும். இனவெறிப் பித்துப் பிடித்த மகிந்தவும் தான் மூழியாகினால் மட்டும் போதாது, தமிழீழப் பெண்கள் அனைவரையும் விதைவையாகவும், வலுவற்றவராகவும் ஆக்க வெறிபிடித்தலையும் சோனியா போன்றவர்களது இனவழிப்புப் போர்வெறி அனைத்துலக அரங்கிலே அம்மணமாகத் தொடங்கியுள்ளமையின் வெளிப்பாடே இந்தக் கூச்சலாகும். எனவே தமிழினம் தொடர்ந்து போராடும். தமிழினத்தின் தேசியக் கொடியே புலிக் கொடியென்பதை எங்கும் சொல்வோம். எம்மில் அணிவோம். யாரெமைத் தடுப்பார். நீதியைக் கேட்போம். சோழனின் காலமது மீண்டும் திரும்பியது ஞாலத்தின் திசையெங்கும்.

ஏதிர்வரும் 14ம் திகதிக்கு முன்பாகப் புலிகளை அழித்துவிடுமாறு உத்தரவிட்டுள்ள, தமிழனை சிங்களவன் அழிப்பதை தடுக்காது, தனது நாட்டுக்குள் வாழும் தமிழினத்தை செருப்பிலும் கீழாக நோக்கும் ஆளும் காங்கிரசிற்கும் அதன் தோழமைக் கட்சியான தி.மு.க வுக்கும் நல்ல படிப்பினையை தமிழகம் கொடுக்கும் போது தமிழினம் உலக அரங்கிலே தலைநிமிரும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.