Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஈழம்: எதிரி – துரோகிகளுக்கெதிரான கருத்துப்படங்களின் போர் !

Featured Replies

ஈழத் தமிழ் மக்களை அகதிகளாய் துரத்தி முல்லைத்தீவில் அடைத்திருக்கும் சிங்கள இனவெறி இராணுவம் இதுவரை எவ்வளவு தமிழ் மக்களை கொன்றிருக்கிறது என்பதற்கு கணக்கில்லை. என்றாலும் உயிரைப் பறிகொடுத்தும், படுகாயமுற்றும் இருக்கும் மக்களின் விவரங்கள் ஏதோ ஒரு வகையில் நமக்கு தெரிய வருகின்றன. ஆனால் இந்த இனப்படுகொலைப் போரை நடத்தும் சிங்கள இராணுவ வீரர்களில் எத்தனை பேர் இறந்திருக்கிறார்கள் என்ற கணக்கு மட்டும் இரகசியமாக பாதுகாக்கப்பட்டு வருகிறது.

ஓரிரு ஆயிரம் வீரர்கள் இறந்திருப்பார்கள் என்றும், பலநூறுபேர் பணியை விட்டு ஓடி வந்ததாகவும் உறுதி செய்யப்படாத தகவல்கள் தெரிவிக்கின்றன. இத்தனை இழப்பிருந்தும் சிங்கள இராணுவம் எப்படி தொடர்ந்து முன்னேறுகிறது என்பதற்கு முக்கியமான காரணம் இந்திய அரசு செய்து வரும உதவிதான். இதை உதவி என்பதை விட போரை வழிநடத்துவதே இந்தியாதான் என்றால் கூட மிகையில்லை. நவீன ஆயுதங்கள், வீரர்கள், வழிகாட்டும் தளபதிகள் என்று இந்தியா செய்து வரும் உதவியை சிங்களப்பத்திரிகைகளும், சிங்கள அரசியல்வாதிகளும் ஒத்துக் கொள்வதை 29.03.09 தேதியிட்ட ஜூனியர் விகடன் வெளியிட்டிருக்கிறது.

சமீபத்தில் இந்திய அரசால் அனுப்பப்பட்ட இராணுவ மருத்துவக் குழு கூட போரில் காயமுற்ற இந்திய வீரர்களுக்கு சிகிச்சை அளிப்தற்குத்தான் என்ற செய்தியும் இப்போது வெளிவந்திருக்கிறது. போரில் காயமுறும் இந்த வீரர்களை தமிழ் மருத்துவர்களை வைத்து சிகிச்சை கொடுத்தால் விசயம் அம்பலமாகிவிடும் என்பதால் இந்த ஏற்பாடு. மேலும் இந்தியாவில் தேர்தல் முடித்து விடுவதற்குள் புலிகளை முடித்து விடவேண்டுமென இந்தியா விரும்புவதாகவும், அதனால் இன்னும் பல நூறு வீர ர்களையும், போபார்ஸ் பீரங்கிகள் உள்ளிட்ட ஆயுதங்களையும், போர்க்கப்பல்களையும் உடனடியாக அனுப்பப் போவதாகவும் தெரிகிறது. இது நடைபெறும் பட்சத்தில் முல்லைத்தீவில் இருக்கும் மக்களில் பாதிப்பேர் கொல்லப்படுவது உறுதி.

இந்தியாவின் உதவியை வைத்துத்தான் சிங்கள ராணுவம் பலரைப் பலிகொடுத்தும் களத்தில் நிற்க முடிகிறது. இதுநாள் வரை தமிழ்நாட்டின் ஓட்டுக் கட்சி அரசியல்வாதிகள் அனைவரும் நொடிக்கொரு தடவை ஈழத்தின் துயரை பேசி நாடகமாடி வந்தார்கள். தற்போது அனைவரும் கூட்டணி, தொகுதிப்பங்கீடு, என பொறுக்கித்தின்ன போய்விட்டதால் எல்லாக் கூட்டணிகளிலும் ஈழத்திற்கு எதிரான துரோகிகளும், எதிரிகளும், சந்தர்ப்பவாதிகளும் நிறைந்திருக்கின்றனர். இதனால் எந்த கூட்டணியும் எதிரிக் கூட்டணியைப் பற்றி ஈழப்பிரச்சினைக்காக புகார் தெரிவிக்க இயலாது.

ஈழத்திற்காக போராடிய வழக்குரைஞர்களை தடியடியாலும், மாணவர்களுக்கு பலநாட்கள் விடுமுறை விட்டும் ஒடுக்கியிருக்கிறது அரசு.

இந்நிலையில் ஈழத்திற்காக இன்றும் குரல் கொடுப்பதும், மக்களிடம் பிரச்சாரம் செய்வதுமான வேலைகள் ம.க.இ.க முதலான புரட்சிகர அமைப்புகள்தான் செய்து வருகின்றன. அதனுடைய அங்கமாக 25.03.09 அன்று சென்னையில் நடந்த ம.க.இ.க பொதுக்கூட்டத்தில் தோழர் முகிலன் வரைந்த கருத்தப்பட கண்காட்சி பலநூறு மக்களை ஈர்த்தது. அந்தக் கருத்துப்படங்களை உங்கள் பார்வைக்கு கொண்டு வருகிறோம். இந்த ஒவியங்கள் புகைப்படங்களாக எடுத்து எமக்குதவிய நண்பர் முத்துக்குமாருக்கு எங்கள் நன்றி.

இந்த ஒவியங்களை முடிந்த அளவு எல்லோரிடத்திலும் சேர்ப்பதற்கு முயலுமாறு கேட்டுக் கொள்கிறோம். ஓட்டுப் பொறுக்கும் தேர்தல் கூச்சலின் நடுவில் ஈழத்திற்கான தமிழகத்தின் மனசாட்சியை தட்டி எழுப்புவதற்கு நமது போராட்டத்தை தொடர்ந்து நடத்துவோம்.

ஓவியங்களை காண : http://vinavu.wordpress.com/2009/03/26/eelam30/

வினவு தளத்திலிருந்து:http://vinavu.wordpress.com/2009/03/26/eelam30/

இதன் மறுமொழிகள்:http://vinavu.wordpress.com/2009/03/26/eelam30/#respond

தொடர்புடைய பதிவுகள்:

ஈழம்: மருது , முகிலன் ஓவியங்கள் !

ஈழம்: “அம்மாவும்” பக்தர்களும் ! கருத்துப்படம் !!

ஈழம்: சோனியாவிடம் பா.ம.க பம்முவது ஏன்? கருத்துப்படம் !!

ஈழம்: ப.சிதம்பரம் என்றோரு ஓநாயின் ஊளை ! கருத்துப்படம் !

ஈழம்: “அம்மாவும்” பக்தர்களும் ! கருத்துப்படம் !!

கருணாநிதியின் இறுதி நாடகம்?

ஈழப் பிரச்சினை : வைகோ விடுதலை!

ஈழம் - இந்தியா முதுகில் குத்துவது ஏன்?

பிற ஈழம் தொடர்பான கட்டுரைகள்/கருத்துப்படங்கள்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வினவு உங்களது கருத்துக்களுக்கு நன்றி

தற்காலத்தில் போரை நடத்துவது இந்திய அரசாங்கமே தவிர வேறெதுவும் இல்லை மறுக்கமுடியாத உண்மையும் கூட

இதற்கு இந்தய மக்கள் தான் பதில்சொல்லவேண்டும் தமிழர்களின் ஒவ்வொரு உயிக்கும் இந்திய அரசாங்கள் நிச்சயமாய் ஒருநாள் பதில் சொல்லவேண்டும்

சிங்களவனைப்பற்றி எத்தனை பாடம் நடத்தினாலும் இந்திய அரசாங்கள் விளங்கப்போறதில்லை வாங்கிக்கட்டினால் தான் தெரியும்

முதலில தன்னுடைய பிரச்சனைகளை பார்க்க கானேல அதுக்க இதுவேற வெட்கமாய் இல்ல வல்லரசு வல்லரசு என்டு கூறத்தான் லாயக்கு

Edited by சேகுவாரா

வணக்கம்,

மிகவும் தத்ரூபமாக சமகால நிகழ்வுகள் பலப்பல கருத்துப்படங்களாக விபரிக்கப்பட்டு இருக்கிறது. மிக்க நன்றிகள்!

உங்களுக்கு ஆட்சேபணை இல்லை என்று நினைத்து கீழ்வரும் உங்கள் கருத்துப்படம் ஒன்றை நேரடியாக இங்கு இணைக்கின்றேன். உங்கள் சேவைகள் தொடரட்டும். நன்றி!

eelam_oviyam_010.jpg

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.