Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இன்னும் எங்கள் மனங்கள் மாறவில்லையா!!!!!

Featured Replies

இன்னும் எங்கள் மனங்கள் மாறவில்லையா!!!!!

அன்புத் தமிழ் உறவுகளே இன்னும் எதற்காக வீட்டிற்குள் பதுங்கி

இருக்கிறோம்....முடங்கி இருக்கிறோம்??

இன்னும் எங்களிற்கு தெளிவு ஏற்படவில்லையா?

அல்லது எமக்கு என்ன எங்கள் வாழ்க்கை சரியாக அமைந்து விட்டது

எதற்காக நாம் போய் எங்கள் நேரத்தை வீணாக்குவான் என எண்ணுகிறோமா?

ஏன் சுயநலமாக இருக்கிறோம??; ஏன் பாராமுகமாக இருக்கிறோம்?? அந்த மக்களும் எங்கள்

இரத்த உறவுகள் என்பதை ஏற்றுக்கொள்ள மறுக்கிறோம்??

இன்று புலத்திலே தெருக்களில் இறங்கி போராடும் எம் உறவுகளிற்கு என்ன நடந்தது என்பதை

அறிந்தோமா??

இந்த நிலை தான் சுக வாழ்விற்குள் வாழ்ந்து கொண்டிருக்கும் எங்களிற்கும் வரலாம் ஏனெனில் நாங்கள் நாடற்ரவர்கள் என்பதை மறந்து விடக் கூடாது!!!!. என்ன தான் நாங்கள் எங்கள் வாழ்க்கையை

புலத்திலே நல்ல படியாக?????? அமைத்துக் கொண்டாலும் ஆரம்ப காலத்தில் ஒவ்வொரு தமிழனும்

எங்களின் சுயநிர்ணய போராட்டத்தை அங்கீகரித்தவர்கள் என்பதை மறந்து வாழ்கிறோம் என்ற கசப்பான உண்மையை ஏற்றுக்கொள்ள வேண்டும். வாழ்ககை நிரந்தரம் அற்ரது புலத்தில் வாழ்வதால் நாம் இழப்புக்கள் இன்றி வாழ்ந்து விடலாம் என எண்ணுகிறோமா??ஏன் தமிழர்களாகிய நாங்கள் மட்டும் சுயநலமாகவும் மனித நேய பண்பே இல்லாதவர்களாகவும் உணர்வே இல்லாதவர்களாகவும் இருக்கிறோம்??

இப்படியான மனநிலை கொண்டவர்களாக இருப்பதால் தான் இன்னும் மற்ரவனுக்கு அடிமையாக வாழ்வதை

பெருமையாக எண்ணுகிறோமா??.

இனியும் நாங்கள் எங்களை திருத்திக் கொள்ளமாட்டோமா??

தினம் தினம் மண்ணிலே செத்து மடியும் எம் உறவுகளிற்கு

உயிர்பிச்சை கொடுக்க தெருக்களிலே இறங்கி போராட வரமாட்டோமா??

காலம் தாழ்த்தி கிடைக்கும் நீதி

விளைக்கப்பட்ட அநீதியை விட கொடுமையானது

எங்கேயாவது அறிந்திருக்கிறோமா தன் சொந்த உறவுகளிற்காக நீதி கேட்டு போராட

மன்றாட்டமாகவும் காலிலே விழுந்தும் கண்ணீர் சிந்தியும் இரங்கி இரங்கி தன் சொந்த

உறவுகளை கூப்பிடும் துர்பாக்கிய நிலமையை???

தமிழர்களாகிய நாங்கள் மட்டும் ஏன் இன்னும் இப்படியாக இருக்கிறோம்????

எனவே தயவு செய்து உங்கள் முடிவுகளில் மாற்றங்களை ஏற்படுத்துங்கள்

வன்னி மக்களிற்கு உயிர்ப்பிச்சை கொடுங்கள்......

இந்த வரலாற்று தார்மீக கடமையை செய்ய மறக்கும் மறுக்கும் ஒவ்வொரு தமிழனும்

தன் மனச்சாட்சிக்கு பதில் தரவேண்டியவனாக இருப்பான்........

அதனால் வன்னி மக்களின் அவலங்களை மட்டும்

உங்கள் காதுகளில் ஒலிக்க விடுங்கள்

அவர்களின் போராட்ட வாழ்க்கையின் வரலாற்ரை மட்டும்

உங்கள் மனங்களில் நிறுத்துங்கள்.........

இனியும் தாமதம் வேண்டாம் புறப்படுங்கள் உடனே புறப்படுங்கள்

இது எங்கள் தார்மீக கடமை எங்கள் கடமை.........

வலிக்கும் இதயத்துடன்

தமிழ்மாறன்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.