Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

தமிழின வரலாறு எதிர் பார்த்த காலம்.

Featured Replies

இன்று உலக நாடுகள் எங்கும் உலகத்தில் எப்போதும் நிகழ்ந்திராதவாறு புலம் பெயர்வாழ்தமிழர்களினால் மேற்கொள்ளப்படும்காலவரையறைய

  • கருத்துக்கள உறவுகள்

மக்கள் புரட்சி வெடிக்கட்டும்

உலகெங்கும் பரந்து வாழ்கின்ற தமிழர்கள் ஒன்றுசேர்வதுகண்டு தமிழன எதிரியானவன் மிரட்சியடைகிறான். இவனது அண்மைக்கால உளரல்களிலிருந்தே அவ்விடையம் வெளிப்படுகின்றது. இதனுடன் புலமபெயர் சமுதாயம் திருப்தியுற்று எதிர்காலத்தில் எம்மைநாமே வியந்து காலப்போக்கில் நாம் வாழாவிருந்துவிடுவோம் எனும் கணிப்பதனில் உலக வல்லரசுகளது ஊதுகுழல்களாகிய செயதித்தொடர்வு சாதனங்கள்இ முருகதாஸ் அவர்களது ஈகையை செய்தியையே வெளிவிடாது வாழாவிருந்துவிட்டுஇ வேடிக்கை பார்த்து விட்டு இப்போது மட்டும் கரிசனையுள்ளோர் போல் பிராந்திய வல்லரசுகளில் காலஅட்டவணைக்கேற்றாற்போல் கருத்துகளை வெளியிடுகிறர்கள். இவர்களது மயக்கும் வார்தைதணை நம்பி கடந்தகாலம் போல் கள்ளுண்ட வண்டுகளாக ஓய்து கிடந்தோமானால் ஈழத்தில் ஓர் தமிழுயிரும் மிஞ்சாதன்றோ!

பிரித்தானியாஇ பிரிந்தே இருந்து முழுமையான உரிமைகளுடன் வாழ்ந்துவந்த எம்மை எமது விருப்பம் அறியாது இணைத்து விட்டே நாடேகினர். இருமனங்களமறியாது இணைத்த நீயே இப்போது பிரித்துவிடு என உலகின் ஜனநாயகத்தை உதாரணமாகக் கொண்டதும்இ உலகின் பழமைவாய்த பாராளுமன்ற அமைப்பானதுமான பிரித்தானிய பாராளுமன்ற முன்றலில் தமிழினம் வோண்டி நிற்கின்றது. இப்பெரெளுர்ச்சியை அடியொற்றி உலகில் எங்கெல்லாம் வாழ்கிறாணே அங்கெல்லாம் தமிழன் வெகுண்டெளும் நேரம் இப்போது வந்து விட்டது. இதன் முடிவுரையாக தமிழீழத்தின் மலர்வு எமை அண்மித்து விட்டது. இப்போது இறுக்க மூடப்பட்டிருந்த கதுவுகள் ஒவ்வென்றூக திறபட ஆரம்பித்து விட்டது. இத்துடன் ஓய்து விடாதே தமிழா.... புலம்பெயர் தேசத்தில் நீ செய்கின்ற புரட்சி யாழ்குடாநாட்டிற்கு எப்போது பரவுகிறதோஇ அப்போது தான் நீ வெற்றி பெறுவாய் என்பதை நீ எண்ணிக்கொள்.

மொட்டைத்தலைக்கும் முளங்காலுக்கும் முடிச்சுப் போடுவதாய் நீ நினைத்துவிடாதே எமது விடுதலை விருட்சத்தின் பெரும் நெருப்பு அங்கேதான் கனன்று கொண்டிருக்கின்றது. அங்கு ஊமையாக உறங்கிக்கிடக்கும் எரிமலையை பிரளயமாக மாற்றும் பூகம்பமாக நீயே இருக்கப் போகின்றாய். பல்லாயிரக்கணக்கான மாவீரர்களது ஆகுதீகள் இன்னமும் அணைந்து விடவில்லை. புலம்பெயர் தேசத்தில் இருந்து நீகொடுக்கும் புரட்சிப் பூவை கரத்தினில் பற்றிட அவை காத்திருக்கின்றன.

யாழ்மண்ணில் தான் தமிழீழத்தின் வாயிற்கதவு திறந்து கொள்ளும். அதுமட்டிற்கும் புலம்பெயர் தேசத்து தமிழுறவே ஓய்துவிடாதே நல்லதேரு புலரும் வேளையில் நானும் வருவேன் லண்டன் மாநகரம் நோக்கிஇ அவ்வேளையில் உலகின் அனைத்து நாடுகளிலும் வாழ்கின்ற தமழினமும் என்னுடன் சேர்ந்தேவருவார்கள்.

பிரித்தானியாவின் தலைநகர் லண்டனில் பலலட்சம் தமிழர்கள் ஒன்றுசேர்ந்து தொடர்சியாக தமது போராட்டத்தினை முன்னெடுக்கம் நாள் அண்மித்து விட்டது. எமது தேசியத்தை முதன்முதலில் ஐரோப்பாவில் தடைசெய்தது பிரித்தானியாவே ஆகவே தொடங்கிவைத்தவன் எவணே அவனே இப்புதிரின் முடிச்சினையும் அவிழ்த்து விடவேண்டியவன்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.