Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நாளை பிரித்தானியாவில் சரித்திரம் படைக்க வாரீர் - சாவிலும் வாழ்வோம் சரித்திரம் படைப்போம்

Featured Replies

நாளை பிரித்தானியாவில் சரித்திரம் படைக்க வாரீர் - இது ஒரு திருப்புமுனையாக அமையட்டும்

அன்பின் யாழ் கள உறவுகளே

சிங்கள இனவெறி அரசு இன்று தமிழ் மக்கள் மீதான பாரிய இன அழிப்பினை தொடங்கிவிட்டது. மக்கள் பாதுகாப்பு வலயம் நோக்கி நகர முயற்சிகள் எடுப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இது ஒரு பேர் அழிவையே உருவாக்கும். இந்நிலையில் எமது போராட்டம் இன்னும் உக்கிரமடைய வேண்டும்.

நாளை லண்டனில் நடைபெறும் பேரணிக்கு லட்சகணக்கில் அணிதிரள்வோம். எமது பலத்தினை மீண்டும் நிரூபிப்போம். இம்முறை அனைத்து ஊடகங்களும் தாமாகவே வருவார்கள். அவர்கள் எமது உண்மைகளை ஊர் அறிய வைப்பார்கள்.

தயவு செய்து உங்கள் உறவினர் நண்பர்களுக்கு இச்செய்தியை சொல்லி லண்டனில் சரித்திரம் படைப்போம்.

பயங்கரவாதம் பயங்கரவாதம் என்று சொல்லும் உலகிற்கு தற்பொழுது விளங்கும் அல்லது விளங்கட்டும் இது ஒரு விடுதலை போராட்டம் என்று.

தமிழரின் தாகம் தமிழீழ தாயகம்

சாவிலும் வாழ்வோம் சரித்திரம் படைப்போம் நிச்சயம் வெல்வோம்

உங்கள் தமிழ் உறவு

தேசம்

கடந்த வார மக்கள் எழுச்சிகளின் தொகுப்பு

டென்மார்க் புரட்சி

Edited by தேசம்

  • கருத்துக்கள உறவுகள்

தாமதிக்கும் ஒவ்வொரு நிமிடமும் எதிரிக்கு சந்தர்ப்பமாகவும், தழிழனுக்கு மரண இடியாகவும் அமையப்போகின்றது.

அனைவரும் கலந்து கொள்ளுங்கள்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அணிதிரண்டு வாருங்கள்

யார் இவர்கள்? எங்கிருந்து வந்தார்கள்?

இப்போது இலண்டன் வீதிக்கே வந்துவிட்டார்களே எதற்காக?

இலண்டனென்ன உலகத்தமிழினமே இன்று வீறுகொண்டு எழுந்துவிட்டது

சிறீலங்கா அரசின் தமிழின அழிப்பைக்கேட்டு

பொறுத்தது போதும் பொங்கியெழு தமிழா என்று பொங்கிவிட்டார்களே எதற்காக?

எழிலாக வாழ்ந்த எம்தமிழ் மக்களின் அவல நிலையைக்கேட்டு ஓடிவந்தார்

அழிப்பதற்கென்றே அரசாளும் அரக்கனைக் கண்டிக்க ஓடிவந்தார்

எம்மண்ணில் இரத்த ஆறு ஓடுவதை உலகத்தின் காதுகளில்

உரத்துச் சொல்வதற்காக ஒன்றாக அணிதிரண்டார்

இலண்டனில் ஓடும் “தேம்ஸ்” நதிக்கரையிலே

நாம் இதுவரை நதியாகவே இருந்தோம்.

ஆனால் இப்போது

கடலாக மாறிவிட்டோம் என்பதைக் காட்ட வந்தார்

உணர்வலைகளை உள்ளத்தே தாங்கி

உலகத்தின் உயர் வீதியிலே ஒன்றாக நடக்கின்றாரே எதற்காக?

உலகமே! உன் நீதியெங்கே?

உலாவரும் தொடர்புச் சாதனங்களே!

உங்கள் வாயை இறுகப் பொத்தியவர் யார்?

உங்களை மௌனிக்கச் சொன்னவர் யார்?

உங்கள் கைகளில் விலங்கிட்டவர் யார்?

என்று இன்னும் எத்தனையோ கேள்விகளை

இங்கே உரத்துக் கேட்க வந்தனரா?

வல்லரசுகளே! தன்னாட்டு மக்களையே பலிக்கடாக்களக்கும்

கொலைகார அரசுகளின் தலைமைத்துவம்

அங்கேயிருப்பது இன்னும் கண்களுக்குத் தெரியவில்லையா?

குடியிருந்த பூமியே கொலைக்களமாக மாறியிருக்கும்

கொடுமையை வேறெங்கேனும் கண்டதுண்டா?

ஒடுக்கப்பட்டு ஒடுக்கப்பட்டு ஆற்றாமல்தான்

எம் உரிமையைக் கேட்டெழுந்தோம்.

எமதுரிமையை நாம் கேட்பதில் என்ன தவறு?

அடக்குமுறை செய்யும் அரக்கரை அணைப்பதெப்படி நியாயம்?

உண்மைகளை மறைத்து உரிமைகளைப் பறித்து

உறவுகளின் உயிர்களைப் பறிப்பதை

நிறுத்தச் சொல்ல யாருமில்லையா?

ஆயிரம் ஆண்டுகள் ஆண்டுவந்த எம்மண்ணை

மீண்டும் ஆளநினைப்பதில் என்ன குற்றம் கண்டீர்?

எட்டப்பர்களும் இரக்கமற்ற மனித மிருகங்களும்

இனத்துரோகிகளும் வாழும் மண்ணில்

மனிதநேயத்தை எதிர்பார்ப்பது தவறுதான்.

ஏதுமறியாப் பாலகரை கர்ப்பிணிப்பெண்களை

இளைஞர்களை முதியோர்களை அப்பாவிமக்களை

எறிகணைகள் வீசி அழிப்பது என்ன நியாயம்?

துடிக்கத் துடிக்க எம்பாலகரைக் கொன்றுவிட்டு

எப்படிச் சென்று தம்பாலகரை அணைப்பர்?

கால்களும் கைகளும் அற்ற ஏதுமறியாப் பிஞ்சுகளின்

கண்ணீர் கட்டாயம் உங்களின் கருவறுக்கும்.

கணவனை மனைவியை குழந்தையை உடன்பிறந்தவரின்

உயிர்களைக் குடிக்கும் உங்களின்

பரம்பரையை பழிபாவம் பலகாலம் பின்தொடரும்.

ஈவிரக்கமற்றவன் எதிரி என்பதற்கு இவர்களே சாட்சி.

இப்படி உலகில் எங்குமே நிகழ்ந்ததில்லை.

எமது மண்காணும் கொடுமைகள்போல் எம்மண்ணும் கண்டதில்லை.

கணணியும் இணையமும் கைத்தொலைபேசியும்

கைகோர்த்தாடும் காலத்தே

கற்கால மனிதராய் காட்டுக்குள் வாழ்வெங்கே?

கருணையைப் போதித்தவர் கால்தொழுபவர்

கழுத்தை நெரிப்பவர் ஆனது இங்கேதான்.

பொய்களை மெய்யென்று போதிப்பவர்கள்

பிறந்ததும் இந்தப் பாழ்நிலத்தில்தான்.

ஓர் இனத்தை அழிப்பது எப்படியென்று

உலகத்திற்கே பாடம் சொல்பவர்கள் இவர்கள்தான்.

என்றெல்லாம் எழுதிக் காட்டியும் உரக்கக் கத்தியும்

உலகிற்குச் சொல்லவும் வீதியெங்கும் வந்துவிட்டார்.

அங்கே, வாய்க்கு உணவில்லை நோய்க்கு மருந்தில்லை

உடுக்க உடையில்லை படுக்க இடமில்லை

துணையாக இருந்த உறவெல்லாம்

தொலைந்துபோன இடம்தெரியவில்லை

அணைப்பதற்கு யாருமேயில்லை

ஆறுதல் கூற எவருமில்லை

யாருக்கு யார் ஆறுதல் கூறுவது?

இங்கே, உலகமே அதிசயிக்கும் வகையில் ஒன்றாகிவிட்டார்கள்

ஆண்ட மண்ணின் ஆறாத்துயர் அகலும்வரை

மீண்டும் மீண்டும் வருவார்கள்

உணர்வு அலைகளை உதிரத்தே தாங்கிபடி

உரிமைகளை வென்றெடுக்கும் வரை

இவர்கள் ஓயமாட்டார்கள் இது உறுதி.

உரும்பிராய்க்கவி

  • கருத்துக்கள உறவுகள்

தாமதிக்கும் ஒவ்வொரு நிமிடமும் எதிரிக்கு சந்தர்ப்பமாகவும், தழிழனுக்கு மரண இடியாகவும் அமையப்போகின்றது.

இன்றைய நிகழ்வில் கலந்து கொள்ள அணிதிரண்டு வாருங்கள்

நாங்களும் வெளிக்கிட்டாச்சு

வருபவர்கள் தேசியக்கொடியை மறக்காதீங்க

மழை வரும' போலுள்ளதால் குடையையும் மறக்காதீங்க.

ஒருத்தர் கையிலும் தேசியக்கொடி இல்லையே???

திரும்பவும் லண்டனில் தடையா?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.