Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வன்னியில் ..... உள்ளி கிலோ 7ஆயிரம் ரூபா;சீனி 1500 ரூபா; தேங்காய் 900 ரூபா; செத்தல் மிளகாய் 9 ஆயிரம் ரூபா

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

வீரகேசரி வாரவெளியீடு - முல்லைத்தீவு மாவட்டத்தில் பாதுகாப்பு அமைச்சினால் பாதுகாப்பு வலயம் என அறிவிக்கப்பட்டுள்ள பகுதிகளில் கடந்த சில நாட்களில் தொடர்ச்சியாக மழை பெய்ததினால் மக்கள் வாழும் கூடாரங்களிற்குள்ளும் மலசல கூடங்களுக்குள்ளும் கிணற்றினுள்ளும் மழை நீர் தேங்கி நிற்கின்றது. இதனால் மக்கள் உணவினை சமைத்து உண்ணக் கூட முடியாதுள்ளது.

எறிகணை தொடர்ந்து விழுந்து வெடிப்பதால் நீர் நிறைந்த பதுங்கு குழிகளில் மக்கள் கூடுதலான நேரம் இருக்கிறார்கள். அத்துடன் இங்கு ஒரு கிலோ சீனி 1500 ரூபாவாகவும், பூடு ஒரு கிலோ 7000 ரூபாவாகவும், செத்தல் மிளகாய் ஒரு கிலோ 9000 ரூபாவாகவும், தேங்காய் ஒன்று 900 ரூபாவாகவும், அரிசி ஒரு கிலோ 250 ரூபாவாகவும், கோதுமை மா ஒரு கிலோ 250 ரூபாவாகவும் விற்பனை செய்யப்படுகிறது. மரக்கறி வகைகள், முட்டை என்பன கிடையாது என முல்லைத்தீவு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி து.வரதராஜா தெரிவித்துள்ளார். முல்லைத்தீவு மாவட்ட சுகாதார நிலைவரம் (6.4.2009 10.4.2009) என்ற தலைப்பில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

முல்லைத்தீவு மாவட்டத்தில் பாதுகாப்பு அமைச்சால் பாதுகாப்பு வலயம் என அறிவிக்கப்பட்ட பிரதேசங்களான முள்ளிவாய்க்கால், வலைஞர் மடம், பொக்கணை, புதுமாத்தளன் போன்ற கிராமங்களில் அதாவது 20 சதுர பரப்பளவில் கிட்டத் தட்ட 300,000 மக்கள் மிகச் செறிவாக வசித்து வருகின்றனர்.

இங்கு தொடர்ச்சியான மழை பெய்து வருகின்றது. இப் பிரதேசம் மிக தாழ்வான இடத்தில் இருப்பதனால் மக்களின் கூடாரங்களுக்குள்ளும் மலசல கூடங்களுக்குள்ளும் கிணற்றிற்குள்ளும் மழை நீர் தேங்கி நிற்கின்றது. இதனால் மக்கள் உணவினை சமைத்து உண்ணக்கூட முடியாதுள்ளது. அத்துடன் கடந்த 48 மணித்தியாலங்களாக தொடர்ந்து எறிகணைகள் வீழ்ந்து வெடித்த வண்ணம் உள்ளன. மக்கள் தமது அன்றாட தேவைகளை பூர்த்தி செய்ய முடியாமல் நீர் நிறைந்த பதுங்கு குழிகளில் கூடுதலான நேரம் இருக்கின்றார்கள்.

வயிற்றோட்டம், ஈரல் அழற்சி போன்ற தொற்று நோய்கள் அதிகமாக பரவும் நிலை காணப்படுகின்றது.06.04.2009 முதல் 10.04.2009 வரை காயமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 922 பேர். இவர்களுள் 163 சிறுவர்கள் உள்ளடங்குவர். இக் காலப் பகுதியில் இறந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 185 பேர். இவர்களுள் 45 சிறுவர்கள் உள்ளடங்குவர். 09.04.2009 மட்டும் 315 பேர் காயமடைந்துள்ளனர்.இங்கு வங்கிகளின் தொழிற்பாடு முற்றாக செயலற்ற நிலையில் காணப்படுவதனால் மக்கள் வைப்புச் செய்த பணத்தினை மீளப் பெற முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்கள்.

இங்கு வசித்து வரும் மக்களுக்கு 5000 மெற்றிக் தொன் உணவுப் பொருட்கள் தேவை இருந்தும் 02.04.2009 ஆம் திகதி கப்பல் முலம் 1000 மெற்றிக் தொன் எமக்கு கிடைத்துள்ளது.அவற்றில் 500 மெற்றிக் தொன் அரிசி இன்று எங்கள் பிரதேசத்தில் பொருட்களின் விலை அதிகரித்து காணப்படுகின்றது. அதாவது சீனி கிலோ 1500.00 ரூபா, பூடு கிலோ 7000, செத்தல் கிலோ 9000.00 தேங்காய் ஒன்றின் விலை 900.00, அரிசி கிலோ 250.00, கோதுமை மா கிலோ 250.000, மரக்கறி வகைகள் பெற முடியாதுள்ளது.

சுகாதாரம்

இங்கு 9 எம்.பி.பி.எஸ். வைத்தியர்கள், 3 உதவி மருத்துவர்களும் கடமையாற்றி வருகின்றனர். புதுமாத்தளன் பிரதேச வைத்தியசாலையில் பிரசவம், சத்திர சிகிச்சை பிரிவு, வெளிநோயாளர் பிரிவு, சிறுவர் விடுதி, கிளினிக் ஆகியன நடைபெறுகின்றன.

அம்பலவன் பொக்கணை வைத்தியசாலையில் வெளிநோயாளர் பிரிவு, முதலுதவி ஆகியன நடைபெறுகின்றன. வலைஞர்மட வைத்தியசாலையில் வெளிநோயாளர் பிரிவு, கிளினிக், முதலுதவி ஆகியன நடைபெறுகின்றன. முள்ளிவாய்க்கால் வைத்தியசாலையில் பிரசவம் பிரிவு, வெளிநோயாளர் பிரிவு, கிளினிக் ஆகியன நடைபெறுகின்றன. இங்கு 6 வலயங்களில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்களில் அNஇ, ஙிஆஇ ஆகியவை நடைபெறுவதுடன் திரிபோசா, சோளன், சோயா, குழந்தைகளுக்கான பால்மாக்கள் என்பன வழங்கப்பட்டு வருகின்றன. இங்கு மருத்துவ மாதுக்கள், சுகாதார தொண்டர்கள், பொது சுகாதார பரிசோதகர்கள் பணியாற்றி வருகின்றனர்.

அம்பலவன் பொக்கணை ஆரம்ப சுகாதார நிலையத்தில் பால்மா, திரிபோஷா என்பன பெறுவதற்காக வந்த தாய்மார்கள், பிள்ளைகள், பொக்கணை வைத்தியசாலை நெளிநோயாளர் பிரிவில் நோயாளிகள் மருந்தை பெறுவதற்காக நின்றபோது வைத்தியசாலை கூரை மீது எறிகணை வீழ்ந்து வெடித்ததில் 10 பேர் இறந்தும் 50 பேர் காயம் அடைந்தும் உள்ளனர். அம்பலவன் பொக்கணை வைத்தியசாலையில் வெளிநோயாளர் பிரிவில் பணிபுரிந்த இரு ஊழியர்கள் காயமடைந்து வைத்தியசாலைக்கு அனுமதிக்கப்பட்டவர்களுள் ஒரு ஊழியர் இறந்துள்ளார்.

முல்லைத்தீவு, கிளிநொச்சி மாவட்டத்தில் கடமையாற்றிக் கொண்டிருந்த 1000திற்கும் மேற்பட்ட ஊழியர்களுள் 1/3 பங்கினர் மட்டும் வேலைக்கு சமூகமளித்து இருந்தனர். ஆனால் வைத்தியசாலைகளில் விழும் எறிகணைத் தாக்குதல்கள், உறவினர், உடன் பிறப்புக்களின் இழப்புக்கள், அச்சம் போன்ற காரணங்களினால் ஊழியர்களின் வரவு குறைவடைந்து வருகின்றது.

08.04.2009 ஆம் திகதி வந்த கப்பலில் வெளிநோயாளர் பிரிவு, கிளினிக் சத்திர சிகிச்சைக் கூடம் போன்றவற்றிற்கு 50 வகையான மருந்துப் பொருட்கள் கிடைக்கப்பெற்றுள்ளது. சந்திரசிகிச்சை மேற்கொள்வதற்கு தேவையான மருந்துப் பொருட்களான ஓஞுடூச்ட்டிண, கூடடிணிணீஞுணtடிணிண குணிஞீடிதட், குச்துச்ட்ஞுtடணிட்டிதட், ஆடூணிணிஞீ ஞச்ஞ் என்பன இன்னும் கிடைக்கப் பெறவில்லை. 09.04.2009 இல் மட்டும் 315 பேர் காயமடைந்துள்ளனர். இவர்களில் 51 பேர் சிகிச்சை பலனளிக்காத நிலையில் இறந்துள்ளனர். மேற்குறிப்பிட்ட மருந்துப் பொருட்கள் இருந்திருந்தால் இவர்களின் பல உயிர்களை காப்பாற்றியிருக்க முடியும். இங்குள்ள கர்ப்பிணித் தாய்மார், பாலூட்டும் தாய்மார், குழந்தைகளுக்கு தேவையான மரக்கறி வகைகள், பழ வகைகள், பால்மாக்கள் போன்றன இல்லாத காரணத்தால் போசாக்கின்மையால் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.

சில சம்பவங்கள் மனதை உருக்குகின்றன. உ+ம்: எறிகணை வீச்சால் தாய் இறந்ததன் காரணமாக இரண்டு மாத குழந்தைக்கு பால்மா இல்லாத காரணத்தினால் 2 வாரங்களாக தேநீர் கொடுத்து குழந்தை மிகவும் நலிவடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

உ+ம்: 2 எறிகணை வீச்சால் தாய் இறந்த நிலையில் பால்மா இல்லாத காரணத்தால் 4 மாத குழந்தைக்கு சோறு ஊட்டப்பட்டுள்ளது. பெருமளவு பிள்ளைகள் தாயை இழந்தும் தந்தையை இழந்தும், தாய், தந்தை இருவரையும் இழந்த நிலையிலும் உள்ளனர். எமக்கு வழங்கப்படுகின்ற திரிபோசா, சோளன், சோயாப் பால்மா என்பன 60 வீதமான கர்ப்பிணி தாய்மார்கள், பாலூட்டும் தாய்மார்கள், குழந்தைகளுக்கு வழங்கவே போதுமானதாக உள்ளது.

ஆரம்ப சுகாதார நிலையங்களில் நடைபெற்ற ஆய்வினூடாக கிடைக்கப் பெற்ற தரவுகளின்படி போசாக்கு மட்டம் குறைந்தவர்கள் 42 வீதத்தில் இருந்து 69 வீதம் ஆக உயர்ந்துள்ளது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.