Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சுவிஸ் சூரிச்சில் நேற்றுவரை இடம் பெற்ற உண்ணாவிரதம்.

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சுவிஸ் சூரிச்சில் இடம் பெற்ற உண்ணாவிரதம் நேற்று மாலை 9 மணியளவில் முடிவுற்றது. 6 இளைஞர்கள் தன்னிச்சையாக மேற்கொண்ட இந்த உண்ணாவிரதம் மெதுவாக மக்கள் போராட்டமாக மாறத்தொடங்கியது. இவர்களுக்கு சூரிச் பொலிசார் நேற்று மாலை 10 மணிவரை அனுமதி கொடுத்தமையால் அவர்கள் தங்களுடைய போராட்டத்தை நிறுத்தவேண்டிய சூழ்நிலை ஏற்பட்டமையால் அவர்கள் மாலை ஒரு சிறிய எழுச்சி ஊர்வலத்துடன் தங்கள் உண்ணாவிரதத்தை நிறுத்தியுள்ளனர். நேற்றைய பொழுது பேர்ண் மாநிலத்தில் ஒரு பெரிய போராட்டத்துக்கு ஏற்பாடு செய்யபட்டிருந்தும் இந்த ஊர்வலத்தில் ஏறக்குறைய 1000 பேர் வரை கலந்து கொண்டு மக்கள் இவர்களுக்கு ஆதரவு கொடுத்துள்ளனர். சூரிச் பொலிசார் இவர்களுக்கு சில உத்தரவாதங்களை இவர்களுக்கு எழுத்து மூலம் கொடுத்துள்ளதாக கூறியுள்ளனர்

தேவையேற்படும் பட்சத்தில் இவர்கள் மீண்டும் தாம் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட தயார் என்று அறிவித்துள்ளனர். அதிக விளம்பரம் இன்றி தன்னிச்சையாக போராட்டத்தில் ஈடுபட்டாலும் இவர்களுடைய போராட்டம் பெல்வியு ஆற்றங்கரையில் நடாத்தப்பட்டமையால் அதிக வெளிநாட்டவர்களின் கவனத்தை ஈர்ந்துள்ளது.

இவர்களை விளம் பரப்படுத்தி உற்காசம் கொடுக்க தவறிய சுவிஸ் நாட்டு பொறுப்பாளர்களின் மெத்தனப்போக்கு கண்டிக்கத் தக்கது. இவர்களுடைய இணைய முகவரி கொடுப்பதாக கூறியுள்ளனர் கிடைத்ததும் இணைக்கின்றேன்

நேற்றைய தினம்

தேவையான அனைத்தும் தம்மால் செய்யப்பட்டதாகவும்

அதுகுறித்த ஒளித்தொகுப்புகள் இருக்கின்றன என்றும்

இப்படியான நேரத்தில் இவற்றைத் தவிர்க்குமாறும்

சம்பந்தப்பட்டவர்கள் என்னோடு தொடர்பு கொண்டு யாழில் எழுதுமாறு சொன்னார்கள்.

நான் வெளியே இருக்கிறேன்.

விரைவில் அது குறித்த தகவல்களைப் பெற்று எழுதுகிறேன் நடா அவர்களே........

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நன்றி அஜீவன் எனக்கும் அந்தவிடயங்கள் கொஞ்சம் தெரியும். ஆனால் தற்போதைய சூழ்நிலை காரணமாக அதனை கூற விரும்பவில்லை. தற்போது அது ஆரோக்கியமும் இல்லை. அதனால் தயவு செய்து அவற்றை இங்கு இணைக்க வேண்டாம். அந்த இளைஞர்கள் முயற்சி பாராட்ட தக்கது. அவர்களுக்கு தலை வணங்குகின்றேன். உண்ணா விரதம் இருந்தவர்களில் இருவருக்கு வேலையும் பறிபோய்விட்டது. சில சுயநல வாதிகளால் தவறுகள் ஏற்படுகின்றது.

ஆனாலும் காலத்தின் கட்டாயத்தினால் சிலகாலம் மெளனமாக இருப்போம். தம்பிகளே நீங்கள் தாயக உறவுகளுக்காகதானே உண்ணாவிரதம் இருந்தீர்கள். உங்களால் பெருவரியான மக்களிடம் உங்கள் செய்தியை கொண்டு செல்ல விரும்பினீர்கள். அதில் வெற்றி பெற்றுவிட்டீர்கள். அடுத்து வரும் போராட்டங்களிலும் என் பங்கு உங்களுக்கு கிடைக்கும். ஓயவேண்டாம் வெற்றி நிச்சயம். மக்கள் பங்களிப்பு உங்களுக்கு கிடைக்கும் வரை தோல்வி என்பது கிடையாது.

அஜீவன் தயவு செய்து அந்த நிகழ்வின் காணொளிகள் படங்களை மட்டும் இங்கு எடுத்து வாருங்கள். விமர்சனத்துக்கு ஒருகாலம் வரும் அப்போது உங்கள் குரல்கள் ஓங்கி ஒலிக்கட்டும்.

நன்றி நடா

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.