Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இனப்பிரச்சினையைத் தீர்க்கும் திறமை நோர்வேயிடம் இல்லை: இலங்கை அரசு

Featured Replies

பேச்சுவார்த்தைகள் மூலம் இலங்கையின் இனப்பிரச்சினையைத் தீர்ப்பதற்கான உதவிகளைச் செய்யும் திறமை நோர்வேயிடம் இல்லையென இலங்கை அரசாங்கம் தெரிவித்துள்ளது.

நோர்வேயின் ‘இனப்பிரச்சினைத் தீர்வு’ முயற்சிகள் தோல்வியடைந்துள்ளபோதும் சர்வதேச சமூகத்தில் தம்மை அனுசரணையாளர்களாகக் காண்பிப்பதற்கு நோர்வே முயற்சிப்பதாக ஊடகத்துறை அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபயவர்த்தன கூறினார்.

இலங்கைக்கு எதிரான பயங்கரவாத நடவடிக்கைகளில் விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்கள் ஈடுபடுவதற்கு நோர்வே சுதந்திரமாக இடமளித்திருப்பதால், இதனால் அந்த நாட்டின் மீது இலங்கை கொண்டிருந்த நம்பிக்கை இழக்கப்பட்டிருப்பதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை ஒஸ்லோவிலுள்ள இலங்கைத் தூதரகம் மீது நடத்தப்பட்ட தாக்குதல் தொடர்பாகக் கருத்துத் தெரிவித்த அமைச்சர், தமது நாட்டிலுள்ள இலங்கைத் தூதரகத்துக்குப் பாதுகாப்பு வழங்காத ஒரு நாட்டிடமிருந்து என்ன வகையிலான உதவிகளை எதிர்பார்க்க முடியும் எனக் கேள்வியெழுப்பினார்.

“விடுதலைப் புலிகள் தொடர்பாகவும், தமது நாட்டில் பயங்கரவாத நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றமை குறித்தும் நோர்வே மெத்தனப் போக்கைக் கடைப்பிடிக்கின்றது என்பது அனைவரும் அறிந்த விடயம். மோதலுக்கு நிதி சேகரிப்பதற்கும் மேலாக இலங்கைக்கு எதிராக விடுதலைப் புலிகள் பிரசாரங்களையும், கூட்டங்களையும், ஆர்ப்பாட்டங்களையும் அங்கு நடத்துகின்றனர். விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்கள் இவ்வாறான சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபட அனுமதிப்பதுடன், விடுதலைப் புலிகளுக்கு வாழ்வளித்துக்கொண்டு போர்நிறுத்தம் அமுல்படுத்தப்பட வேண்டும் என நோர்வே, இலங்கையை வலியுறுத்துகிறது. என்ன வகையிலான முரண்பாட்டுத் தீர்வு இது?” என அமைச்சர் தெரிவித்தார்.

பொதுமக்களை விடுவித்து, இலங்கை அரசாங்கப் படைகளிடம் சரணடைய வேண்டுமென விடுதலைப் புலிகளை வலியுறுத்துவதையே நோர்வே தற்பொழுது செய்ய வேண்டும் என அவர் குறிப்பிட்டார்.

சுதந்திரமான அரசியல் தீர்வு: நோர்வே

விடுதலைப் புலிகளுக்குச் சார்பாகச் செயற்படுவதாக முன்வைக்கப்படும் குற்றச்சாட்டை மறுத்திருக்கும் நோர்வே, இலங்கை அரசாங்கத்துக்கும், விடுதலைப் புலிகளுக்கும் இடையில் சுதந்திரமான செயற்பாடுகள் மூலமே இனப்பிரச்சினை தீர்க்கப்பட வேண்டும் எனக் கூறியுள்ளது.

நோர்வே வெளிவிவகார அமைச்சுக்கு வெளியே நடந்த ஆர்ப்பாட்டத்தின் போது ஆர்ப்பாட்டக் காரர்கள் மத்தியில் உரையாற்றிய நோர்வேயின் பிரதி வெளிவிவகார அமைச்சர் ரேய்மன்ட் ஜொஹான்சன் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

http://www.tamilskynews.com/ http://www.tamilskynews.com/ http://www.tamilskynews.com/

சாமாதானம் என்ற பேயரில் தமிழருக்கு நோர்வே செய்த கொடுமைக்கு சிங்களவந்தானே சாச்சி அதுதான் அவன் அதை திருப்பிக்கொடுக்கிறான். இது இந்தியாவுக்கும் ஒரு பாடமாகுமா?

  • கருத்துக்கள உறவுகள்

சாமாதானம் என்ற பேயரில் தமிழருக்கு நோர்வே செய்த கொடுமைக்கு சிங்களவந்தானே சாச்சி அதுதான் அவன் அதை திருப்பிக்கொடுக்கிறான். இது இந்தியாவுக்கும் ஒரு பாடமாகுமா?

ஏன் அண்ணா

நாமே எல்லாத்தையும் போட்டுக்கவுத்து விட்டு......

மற்றவர்களை நோவதேன்???????

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.