Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கூட்டமைப்பினரின் போர்நிறுத்த கோரிக்கையினை நிராகரித்த இந்தியாவின் நிலைப்பாட்டுக்கு நன்றி - அரசாங்கம் தெரிவிப்பு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

கூட்டமைப்பினரின் போர்நிறுத்த கோரிக்கையினை நிராகரித்த இந்தியாவின் நிலைப்பாட்டுக்கு நன்றி - அரசாங்கம் தெரிவிப்பு

வீரகேசரி இணையம் 4/21/2009 7:59:59 PM -

தமிழ் தேசிய கூட்டமைப்பின் போர்நிறுத்த கோரிக்கையை நிராகரித்த இந்தியாவின் உறுதியான நிலைப்பாடு தொடர்பில் அந்நாட்டுக்கு இலங்கை மனமார்ந்த நன்றிகளை தெரிவிக்கின்றது.

பிராந்திய வல்லரசான இந்தியா ஏனைய நாடுகளின் உள்விவகாரங்களில் தலையிடுவதில்லை என்ற நிலைப்பாட்டில் உறுதியாக இருக்கின்றமை பிராந்தியத்தை மேலும் பலப்படுத்தும் விடயமாகும்.

விரைவில் பசில் ராஜபக்ஷ இந்தியாவுக்கு விஜயம் செய்யவுள்ளார் என்று ஊடகத்துறை அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்த்தன தெரிவித்தார். மேலும் சில தினங்களில் புலிகளிடமிருந்து அனைத்து சிவிலியன்களையும் பாதுகாப்பு படையினர் மீட்டுவிடுவர்.

உலகில் பிரதேசங்களை கைப்பற்றியுள்ள பயங்கரவாத இயக்கங்களை எவ்வாறு தோற்கடிப்பது என்பதற்கு இலங்கை இராணுவத்தினர் சிறந்த முன்னுதாரணத்தை வழங்கியுள்ளனர் என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.

ஊடகத்துறை அமைச்சில் இன்று செவ்வாய்க்கிழமை நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

  • கருத்துக்கள உறவுகள்

கூட்டமைப்பினரின் போர்நிறுத்த கோரிக்கையினை நிராகரித்த இந்தியாவின் நிலைப்பாட்டுக்கு நன்றி - அரசாங்கம் தெரிவிப்பு

உலகில் பிரதேசங்களை கைப்பற்றியுள்ள பயங்கரவாத இயக்கங்களை எவ்வாறு தோற்கடிப்பது என்பதற்கு இலங்கை இராணுவத்தினர் சிறந்த முன்னுதாரணத்தை வழங்கியுள்ளனர் என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.

ஆமா.. சிறீலங்கா இராணுவம் உலக சாதனைதான் செய்திருக்குது. உலகத்தில வேற ஒருத்தரும் இதைச் செய்யல்லப் போல.

அல்ஜீரியாவில் இப்படி நடந்திருக்குது.

கம்போடியாவில் இப்படி நடந்திருக்குது.

கொலம்பியாவில் இப்படி நடந்திருக்குது.

நேபாளத்தில் இப்படி நடந்திருக்குது.

கஷ்மீரில் இப்படி நடந்திருக்குது.

ஆப்கானிஸ்தானில் இப்படி நடந்திருக்குது.

பலஸ்தீனத்தில் இப்படி நடந்திருக்குது.

செச்னியாவில் இப்படி நடந்திருக்குது.

சோமாலியாவில் இப்படி நடந்திருக்குது.

தமிழீழத்தில் 1987 ஒக்டோபர் - 1990 மார்ச் வரை இந்திய அமைதிப்படையால் இப்படி நடத்தப்பட்டிருக்குது.

வெங்காயச் சிங்களவனுக்கு உது தெரியாது போல. நாட்டு நடப்புத் தெரியாதவன் எல்லாம் ஊடகத்துறை அமைச்சர்.

அமெரிக்கா - ஆப்கானிஸ்தானிலும்.. ரஷ்சியா - செச்னியாவிலும். இந்தியா - ஈழத்திலும், காஸ்மீர் மற்றும் பஞ்சாப்பிலும்.. பாகிஸ்தான் - மேற்குக் கிராமங்களிலும்.. சீனா - திபத்திலும் இஸ்ரேல் - பலஸ்தீனத்திலும் செய்த அக்கிரமங்களைப் பகிர்ந்து கொண்டதால சிங்கள இராணுவத்துக்கு இப்படி இன அழிப்புச் செய்ய முடிஞ்சிருக்குது.

புலிகளின் மரபு வழி போர் முறைதான் பலவீனப்பட்டிருக்கிறதே தவிர.. புலிகளின் கெரில்லாப் போர் முறை எப்போதும் எவராலும் நிறுத்தப்பட முடியாதது.

எல்லா நாட்டு மரபு வழி இராணுவமும்/ இராணுவங்களும் போராளிகளிடம் உள்ள இடங்களை பிடிப்பது ஒன்றும் செயற்கரிய செயல் அல்ல. சிங்களவனால முடியாமல் இருந்திச்சு.. இப்ப கெஞ்சிக் கூத்தாடி ஒரு பெரிய இன அழிப்பைச் செய்திட்டான் என்று சொல்லுறதை விட்டிட்டு...???! :huh:

எமது போராட்டம் மீண்டும் கரந்தடிப் படைப் பிரிவாக விரியும். அதேவேளை நாம் சர்வதேச அரங்கில் எமது உரிமைக்கான அறவழிப் போராட்டங்களை எப்போதும் எடுத்துச் செல்வது கட்டாயமாகும். நாம் இரண்டு பரிமானங்களோடு எனி எமது விடுதலைப் போராட்டத்தை நகர்த்திச் செல்ல வேண்டும்.

ஒன்று களத்தில்.. இராணுவ மற்றும் அரசியல் பரிமானத்தோடு.

இரண்டு சர்வதேச அளவில் புலம்பெயர்ந்த மக்களின் உதவியோடு அறவழி அரசியல் போராட்டமாக எமது உரிமைக்குரலை உலகில் தொடர்ந்து ஒலிக்கச் செய்வதன் மூலம்.. சிறீலங்காவின் இந்த இராணுவ ஆக்கிரமிப்பை நிச்சயம் முறியடிக்க முடியும்.

இந்தியா ஈழத்திலும் காஷ்மீரிலும் பஞ்சாப்பிலும்.. அமெரிக்கா சோமாலியாவிலும் ஆப்கானிஸ்தானிலும்.. ரஷ்சியா செச்னியாவிலும்.. சீனா திபத்திலும்.. வென்று விட்டதாக வரலாறில்லை..!

எமக்கான வரலாற்றை புதிய உலக ஒழுங்கோடு ஒட்டிச் சென்று எழுதும் சாணக்கியத்தை நாம் வளர்க்க இந்த இராணுவப் பின்னடைவை எமக்கான முதலீடாக்கி தமிழீழ இலட்சியத்தில் நம்பிக்கை வைத்துப் போராடி பங்களிச்சு மாண்ட எம் மக்களின் மாவீரர்களின் கனவை மெய்ப்பட வைப்பதே ஒவ்வொரு தமிழனின் இறுதி இலட்சியமாக அமைய வேண்டும். அந்தத் தற்துணிவை சிங்களவன் எமக்கு இந்த இனப்படுகொலை மூலமான இராணுவ வெற்றி மூலம் பெற்றுத் தந்திருக்கிறான். :mellow:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

உடன் படுகிறேன். பூச்சியத்திலிருந்து ஆரம்பித்தாலும் பிரயோசனமான பயணம் தான் இது. செய்ய வேணும். இப்ப நடக்கிறதும் இனி சிறி லங்கா ஆட்சியில வன்னியில தமிழருக்கு நடக்கப் போறதும் எங்களிடையே இருக்கிற நடு நிலை வாதிகளையும் போராட்ட நியாயத்தை உணரச் செய்யும். இந்த நெருப்பை தொடர்ந்து எரிய வைக்க அடுத்த இரண்டு தலைமுறையையும் தயார் படுத்தி வைக்க வேணும். தமிழனுக்கில்லாத நிலம் சிங்களவனுக்கும் இந்தியக் கூலிக்கும் புதை நிலமாக மாற வேணும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.