Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

பெருமளவிலான தமிழ் மக்கள் விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசம் நோக்கி இடம் பெயர்ந்து

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

பெருமளவிலான தமிழ் மக்கள் விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசம் நோக்கி இடம் பெயர்ந்து

[பிரித்தானிய நேரம் : April 22nd, 2009 at 21:06]

இலங்கை அரசாங்கத்தின் பிரச்சாரத்திற்கு மாறாக தமிழ் மக்கள் விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசங்களை நோக்கி நகர்கின்றதாக அறியப்படகின்றது. வலைஞர்மடத்தில் தங்கியிருந்த மக்கள் இப்பொழுது முள்ளிவாய்க்கால் பகுதியை நோக்கி நகரத்தொடங்கியுள்ளனர். தமிழீழ விடுதலைப்புலிகளின் அரசியல்துறைப் பிரிவின் பேச்சாளர் இளம்பருதி தெரிவிக்கையில் இன்னும் 200,000 மக்கள் விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியில் இருப்பதாகக் கூறியுள்ளார்.

அதேவேளை இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் ஒரு அவசரக்கூட்டம் ஒன்றை தனது மந்திரிகளுடனும் அதிகாரிகளுடனும் கூட்டி இலங்கைப் பிரச்சனை தொடர்பாகப் பேசியுள்ளார் என பிபிசி செய்தி ஊடாகத் தெரியவருகின்றதுது.

அமெரிக்க அரசாங்கம் இலங்கை அரசிற்கு விடுத்த வேண்டுகோளில் உடனடியாக சர்வதேச கண்காணிப்பாளர்களை போர் நடைபெறும் பகுதிகளுக்கு அனுப்ப இலங்கை அரசு அனுமதிக்க வேண்டும் என கூறியுள்ளது இங்கே குறிப்பிடத்தக்கதாகும்.

கடும் சண்டை காரணமாக பொக்கணை, வலைஞர்மடம் பகுதிகளில் இருந்த மக்கள் விடுதலைப்புலிகளின் பகுதிகளை நோக்கிச் செல்வதாகவும் மிகவும் மோசமாகக் காயமடைந்த 700 பேர் முள்ளிவாய்க்கால் மருத்துவமனை எல்லைக்குள் தங்கியிருப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

இராணுவத்தினரின் கடும் எறிகணைத்தாக்குதலின் மத்தியிலும் படுமோசமாகக் காயப்பட்ட மக்கள் செஞ்சிலுவைச் சங்கத்தின் கப்பலுக்கு மாற்றப்பட்டுள்ளனர்

வன்னியில் தற்பொழுது மருந்திற்கும் உணவிற்கும் பெரும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாகவும் இலங்கை அரசு அத்தியாவசிய பொருட்கள் வன்னிக்குச் செல்வதைத் தடைசெய்துள்ளதாகவும் தெரியவருகின்றது.

அதேவேளையில் இலங்கை சனாதிபதியின் சகோதரர் புதுடெல்லிக்கு ஒரு அவசர விஜயத்தை மேற்கொண்டுள்ளார் என்றும் இந்த விஜயத்தின் போது புலிகளுக்கெதிரான பிரச்சாரத்தையும் தற்போதைய வன்னி நிலைமைகள் பற்றியும் பேசுவார் என எதிர்பார்க்கப்படுகின்றது.

http://www.tamilseythi.com/tamileelam/Moving_220409.html

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.