Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

முதல்வர் உண்ணாவிரதம் காலம் கடந்த நடவடிக்கை: ராமதாஸ்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

எல்லாம் முடிந்தது, என்று இலங்கை அரசு அறிவித்து கொக்கரித்து கொண்டிருக்கும் நேரத்தில் போரை நிறுத்த வேண்டும் என்று வலியுறுத்தி தி.மு.க. தலைவர் கருணாநிதி உண்ணாவிரதம் இருக்கிறார். முறைப்படி அனுமதி பெறாமல் எல்லா ஊர்களிலும் தி.மு.க.வினர் திடீர் உண்ணாவிரதம் மேற் கொண்டிருக்கிறார். சாலை மறியல்களும் நடத்தப்படுகிறது.

பேருந்துகள் மறித்து நிறுத்தப்படுகின்றன, தேர்தல் முடிவுகள் எப்படி அமையப்போகிறது என்பதை முன் கூட்டியே உணர்ந்து மக்களின் கவனத்தை தங்கள் பக்கம் ஈர்ப்பதற்காக இந்த திடீர் போராட்டம் எனும் ஆயுதத்தை கையில் எடுத்திருக்கிறார்கள்.

இது காலம் கடந்த நடவடிக்கை. 3 மாதத்திற்கு முன்பாவது போரை நிறுத்தி இருந்தால் ஒரு வேளை பல்லாயிரம் ஈழத் தமிழர்களின் உயிரை காப்பாற்றியிருக்க முடியும். அப்போதெல்லாம் பாய்வது போல பேசுவதும், பிறகு பதுங்குவதுமான நிலையை மேற்கொண்டு வந்தார். இலங்கை இறை யாண்மை மிக்க நாடு, எனவே அதன் உள் விவகாரத்தில் ஓரளவுக்குத்தான் தலையிட முடியும் என்று சொல்லி இந்தியப் பேரரசின் செயலற்ற தன்மைக்கும், கடமை தவறியப் போக்குக்கும் விளக்கவுரை எழுதிக் கொண்டிருந்தார்.

இந்திய பேரரசும் பேசி வருகிறோம். வேண்டுகோள் விடுத்திருக்கிறோம், கவலைத் தெரிவித்திருக்கிறோம் என்று சொல்லி வந்ததே தவிர போரை நிறுத்து என்று எச்சரிக்கை விடவில்லை. இந்த அவகாசத்தை பயன்படுத்திக் கொண்ட இலங்கை அரசு அனைத்து வகையான உதவிகளையும் பெற்று ஈழத்தமிழர்களை கொன்று குவித்து போரில் வெற்றி என்று பிரகடனம் செய்து கொண்டிருக்கிறது. எல்லாவற்றையும் முடித்து விட்டோம் என்று இலங்கை அரசு சொல்லிக் கொண்டி ருக்கிறது. எனவே, இனி போரை நிறுத்துவதற்கு அங்கு ஒன்றுமில்லை.

ஈழத் தமிழர்களின் உரிமைப்போராட்டத்தை நசுக்க இலங்கை அரசு இது வரையில் 3 லட்சம் தமிழர்களை கொன்று குவித் திருக்கிறது. உலகில் எந்தவொரு பகுதியிலும் நடந்திராத இந்த இனப்படுகொலைக்குக் காரணமான இலங்கை அதிபர் ராஜபக்சே, அவரது சகோதரர் பாது காப்புத்துறைச் செயலாளர் கோதபாய ராஜபக்சே, ராணுவ தளபதி பொன்சேகா ஆகியோர் மீது போர் குற்றங்களுக்காக சர்வதேச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்து அவர்களை குற்றவாளிக் கூண்டில் நிறுத்தி பூடான் அதிபருக்கு தண்டனை வழங்கப்பட்டதைப் போன்று இவர்களுக்கும் தண்டனை பெற்றுத்தர இந்தியா நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை இனி ஓங்கி ஒலிக்க வேண்டும்.

இதையெல்லாம் விடுத்து, போரில் எல்லாம் முடிந்தது என்று இலங்கை அரசு அறிவித்துக் கொண்டிருக்கும் நேரத்தில், போரை நிறுத்த வேண்டும் என்று காலம் கடந்த உண்ணாவிரதம் இருப்பது இலங்கை தமிழர் பிரச்சினையில் இதுவரையில் நடத்திய கண்துடைப்பு நாடகத்தின் உச்சகட்டக்காட்சி (கிளைமாக்ஸ்) என்றுதான் தமிழக மக்கள் கருதுவார்கள் என்று கூறியுள்ளார்

http://www.alaikal.com/news/?p=15646

Edited by kuddipaiyan26

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.