Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

தமிழக உறவுகளே! ஓட்டுப் போடமுன் ஒரு நிமிடம்...! [பருத்தியன்]

Featured Replies

நம் ஈழ மக்களின் துன்பங்களை, சொந்த மண்ணிலேயே அகதிகளாகி அவர்கள் படும் அவலங்களை வார்த்தைகளில் வரித்துவிடும் வல்லமை எழுத்துக்களுக்கு கிடையாது. ஆனாலும் சொல்லியே ஆகவேண்டும் என்ற கட்டாயத்தில் மனந்திறந்த வரிகளோடு முயற்சிக்கின்றேன்... மனம் நிறைந்த வலிகளுடன்.

கொலைவெறிச் சிங்களத்தின் கொடூரக் கரங்களுக்குள் சிக்குண்டு சின்னாபின்னமாகின்றது ஈழதேசம். வளம் நிறைந்த நம் மண் இன்று குண்டுமழையில் குளித்து நம் உறவுகளின் குருதியில் சிவந்துபோய்க் கிடக்கின்றது. நம் வாழ்விடங்கள் எல்லாம் பாழாக்கப்பட்டு அங்கு பாம்பும் பகையும்தான் குடியிருக்கின்றன.

வாரிக்கொடுத்த கைகளெல்லாம் அறுத்தெறியப்பட்டு அநாதரவாய் தெருவில் சிதறிக் கிடக்கின்றன. ஓடியுழைத்த கால்களெல்லாம் ஒடிக்கப்பட்டு ஊனமாகி திராணியற்று நிற்கின்றனர் நம் ஈழ உறவுகள்.கொடுத்தே பழகிய அந்தக் கரங்கள் இன்று கையேந்தி நிற்கின்றன ஒரு நேர கஞ்சிக்காக...!

பிஞ்சுக் குழந்தைகள் என்றும் பாராமல் துண்டு துண்டாய் பிய்த்தெறிகின்றன எறிகணைகள். கருவில் வளரும் தளிரைக் கூட அவை விட்டு வைக்கவில்லை . எறிகணைகளுக்குத்தான் தெரியுமா அவை பிஞ்சா தளிரா என்று? கற்புக்கே கற்பு கற்பிக்கும் ஈழத்தின் பெண்மை அங்கு சீரழிக்கப்படுகிறது.சிங்கள இராணுவத்தினால் கதறக் கதற கற்பழிக்கப்படும் பெண்கள் படும் கொடுமையை கல்நெஞ்சம் கொண்டவர்கூட கண்கொடுத்து பார்க்கமாட்டார். பாலியல் வல்லுறவு , காணாமல்போதல், சித்திரவதைகள், படுகொலைகள், பட்டினிச்சாவு, பதுங்குகுழி வாழ்வு என்பவைதான் ஈழத்தமிழரின் இன்றைய உடைமைகள். என்ன கொடுமையிது !!!

ஈழ உறவுகளின் அழுகுரலில் ஆர்ப்பரிக்கின்றது வங்கக்கடல். அவலந்தந்த கண்ணீரில் மூழ்கின்றது முல்லைக் கடல். வந்தோரை வரவேற்று வாழவைக்கும் வன்னிமண், பேரவலம் வந்தேறி பரிதவித்து நிற்கின்றது . வீரம் செறிந்த அந்த மண்ணுக்கும் மக்களுக்கும் இது சோதனைக் காலம். பெருந்துயர்படிந்த வேதனைக் கோலம்.

பேரன்புமிக்க தமிழக உறவுகளே! உங்கள் உறவுகளுக்கு இப் பேரவலத்தினைக் கொடுத்த அந்த பாவிகள் யார்?

சிங்களம் என்றுதான் பதில் வரும். உண்மைதான்! ஆனால் சிங்களம் மட்டுமல்ல. சிங்கள வல்லாதிக்கத்துடன் கூட்டுச்சேர்ந்த பல சக்திகளுங்கூட. அதில் பிரதானமாய் இந்தியா இருப்பது நமக்கெல்லாம் பேரதிர்ச்சி. நம் துயர்துடைக்கும் என்று நாம் நம்பியிருந்த இந்தியாவே நம் உறவுகளை அழிக்க பேராதரவு கொடுத்து நிற்கின்றது சிங்கள அரசிற்கு.

எங்கள் அவலங்களைப் பார்த்து தாங்கொணாமல் நீங்கள் துடிப்பதை எங்களால் புரிந்துகொள்ள முடிகின்றது பாசமிகு தமிழக உறவுகளே!

தினந்தினம் அநியாயமாய் செத்து மடியும் ஈழத்தமிழ் உறவுகளின் பிணங்களைப் பார்த்து நீங்கள் பதைபதைப்பது நம் கண்களில் தெரிகின்றது. தானாடாவிட்டாலும் தசையாடும் என்பார்கள். தமிழீழத்தின் பிஞ்சுக் குழந்தைகளின் சிதறிய உடல்களைப் பார்த்து கல்நெஞ்சங்கள் கூட கரைந்துதான் போயின. உணர்வுள்ள உங்கள் உள்ளங்கள் உடைந்து வெதும்பின. கண்ணீர் கொப்பளிக்க கதறியழுத ஈரமான உள்ளங்கள் எத்தனையோ. எல்லாவற்றிற்கும் மேலாக, தங்களையே தீயிற்கு ஆகுதியாக்கிய முத்துக்குமார் வழிநடந்த தியாகவீரர்கள் பலர். ஆர்ப்பாட்டங்கள் ,பேரணிகள்,மனிதச்சங்கிலிகள்,உ

  • கருத்துக்கள உறவுகள்

தமிழர்கள் தெளிவாகத்தான் உள்ளோம். ஆனால் எங்களின் உணர்வுகளை மதித்து எடுத்து செல்லவேண்டிய அரசியல் தலைவர்களின் ஒற்றுமை எங்கே? இத்தேர்தலில் சரியான தீர்ப்பை வழங்க தீர்மானிக்க உதவுபவை கடந்த காலத்தில் அக்கட்சியின் செயல்பாடுகள்.

தி.மு.க - முதுகில் குத்திய துரோகக் கட்சி

அ.தி.மு.க - சந்தர்ப்பவாத கட்சி- இப்போது விழுந்து விழுந்து ஈழத்தை ஆதரிக்கும் செல்வி, நாளை வெற்றிபெற்றவுடன் அதே காங்கிரஸ் கட்சியுடன் சேராதென்பதற்கு என்ன உத்திரவாதம்?

ஈழ ஆதரவு கட்சிகளான ம.தி.மு.க, ப.ம.க, திருமாவின் கட்சி ஆகியவை தனியணி அமைத்து களத்தில் இறங்கியிருந்தால் நிச்சயம் அனைத்து தொகுதியிலும் வெற்றி பெறமுடியும்... செய்தார்களா இவர்கள்?

தமிழர்களின் பிணக்குவியலை பார்த்தும், சுயநலத்தின் பின்னணியில் சேரும் கூட்டு எவ்வாறு எமக்கு நம்பிக்கையையும், எம் வாக்குகள் தமிழர்களை காப்பாற்ற உதவுமென பாமரத் தமிழனுக்கு மிதமிஞ்சிய குழப்பத்தையே தருகிறது.

மிகச்சரியான தெரிவு என்பதைவிட, இருக்கும் கட்சிகளில் தீமை குறைவாகவுள்ள, உணர்வுபூர்வமாக கொடுக்கும் வாக்குகள், ஈழத்தமிழரைக் காப்பாற்றும் என நம்பிக்கை தரும் கட்சியே இத்தேர்தலில் வெற்றி பெற வாய்ப்புகள் அதிகம். அவ்வவகையில் பார்த்தால் கருநாயின் துரோகம் மற்றும் அதிரடியாக, கவர்ச்சிகரமாக சவால்களையும், உறுதிமொழிகளையும் அள்ளிவீசுவதையும் பார்க்கும்போது, வேறுவழியின்றி செயா கட்சியின் வெற்றி வாய்ப்பே அதிகமாக தெரிகிறது.

.

Edited by ராஜவன்னியன்

  • தொடங்கியவர்

உண்மைதான் ராஜவன்னியன். ஜெயலலிதா வெல்லவேண்டும் என்பதைவிட கருணாநிதியின் வெறுப்பேற்றும் நடவடிக்கைகளால் திமுக-காங்கிரஸ் கூட்டணி தோற்கடிக்கப்பட வேண்டும் என்ற எண்ணமே மேலோங்கியுள்ளது.

ஜெ வோடு வைகோ மற்றும் ராமதாஸ் உள்ளது சற்று பலந்தான் அதிமுக விற்கு.

எதுவானாலும்,காங்கிரஸ் மத்தியில் ஆட்சியமைக்காமல் இருந்தாலே போதும்.

Edited by பருத்தியன்

  • தொடங்கியவர்

திமுக மேல் மக்களுக்குள்ள கோபம் போதும்...

காங்கிரஸ்-திமுக கூட்டணி தோற்பதற்கு.

அதனால், வாக்குகளை விலைபேசும் நடவடிக்கையில் திமுக மும்முரமாயிருக்கிறதா தகவல் வருகின்றது.

விலைபோகுமா தமிழகம்[தமிழினம்]???

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.