Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இலங்கை விவகாரம் தொடர்பான தமிழகத்தின் நிலைப்பாடு குறித்து அலட்டிக்கொள்ளவில்லை-அமைச்சர் பிரியதர்ஷன யாப்பா

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இலங்கை நிலைவரம் தொடர்பில் தமிழகத்தின் நிலைப்பாடுகளையிட்டு அரசாங்கம் ஒரு போதும் அலட்டிக் கொள்ளப் போவதில்லை. முதல்வர் கருணாநிதியினதும் ஜெயலலிதாவினதும் அரசியல் மோதல்களை நாம் கணக்கில் எடுக்க முடியாது. காங்கிரஸ் கட்சியின் மத்திய அரசுடனான உறவு சுமுகமானதாகவே இருக்கின்றது. அதில் எந்த மாற்றமும் ஏற்படவில்லை என்று அரசாங்கம் அறிவித்துள்ளது. சர்வதேச அழுத்தங்கள் எதுவும் இதுவரையில் அரசின்மீது பிரயோகிக்கப்படவில்லை. யுத்த நிறுத்தமொன்றை அரசு மேற்கொள்ளவில்லை. அப்படி கூறுவது சுத்தப் பொய்யாகும். ஆனால் குறுகிய பிரதேசத்துக்குள் கனரக ஆயுத பாவனையோ பாரிய இராணுவ நடவடிக்கையோ முன்னெடுக்கப்படுவதில்லை என்ற தீர்மானத்தை மட்டும் கொண்டிருப்பதாகவும் அரசாங்கம் கூறியுள்ளது.

அமைச்சரவைத் தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் மாநாடு அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று வியாழக்கிழமை நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு பேசுகையிலேயே அமைச்சர் அனுர பிரியதர்ஷன யாப்பா மேற்கண்டவாறு தெரிவித்தார். இங்கு அவர் மேலும் கூறியதாவது, கடந்த 30 வருட காலமாக வீதியில் நடமாட முடியாத அச்சத்திற்குள் மக்கள் வாழ்ந்து கொண்டிருந்தனர். இதனை எவராலும் மறுக்க முடியாது. ஏனெனில் பயங்கரவாதம் அந்தளவிற்கு தலை தூக்கியிருந்தது. இதனைக் கட்டுப்படுத்துவதற்கோ அல்லது பயங்கரவாதத்தை ஒழித்துக் கட்டுவதற்கோ ஐக்கிய தேசியக் கட்சி திராணியற்றிருந்தது.

ஆனால் இன்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான ஆட்சியில் பயங்கரவாதத்தின் நிலைமை தலைகீழாக மாறிவிட்டது. மக்களிடத்தில் தொற்றிக் கொண்டிருந்த அச்சம் விலகியுள்ளது. இதனால் செல்வாக்குப் பெற்றுள்ள ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு நாட்டின் 80 வீதமான மக்களின் ஒருமித்த ஆதரவு கிடைத்துள்ளது.

அரசாங்கம் பயங்கரவாதத்துக்கு எதிரான யுத்தத்தை நடத்திக் கொண்டிருக்கும் அதேவேளை மனிதாபிமானப் பணிகளும் நடைபெற்று வருகின்றன. யுத்த வலயத்துக்குள் சிக்கியுள்ள மக்களை பாதிப்பு ஏற்படாத வகையில் அவர்களை மீட்டெடுப்பதற்கு அரசாங்கம் தற்போது மாற்று நடவடிக்கைகளையே மேற்கொண்டுள்ளது. அரசாங்கம் ஒரு போதும் தனது பொறுப்பில் இருந்து விலகிச் செயற்பட முடியாது. இதனாலேயே கனரக ஆயுத பாவனை தவிர்க்கப்பட்டுள்ளது. இது அரசாங்கம் கொண்டுள்ள ஒருவித உபாயமாகும். ஆனால் இதனைத் திரிபுபடுத்தி பல்வேறு பிரசாரங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. பயங்கரவாதம் இறுதிக் கட்டத்தை அடைந்திருக்கும்போது யுத்த நிறுத்தம் ஒன்றுக்கு செல்ல வேண்டிய தேவை அரசுக்கு இல்லை. சர்வதேச அழுத்தங்களையடுத்தே யுத்தம் நிறுத்தப்பட்டுள்ளதாக பிரசாரப்படுத்துவதில் அர்த்தமே இல்லை. இடம்பெயர்ந்து வருகின்ற மக்களே தாம் புலிகளிடத்தில் சிக்கி அனுபவித்த வேதனைகள் என்னவென்று கூறுகின்றனர். தயா மாஸ்டர் கூட இன்று சுதந்திரமாக பேசக் கூடியவராக காணப்படுகின்றார். இந்த நிலைமைகளை சர்வதேசம் உணர்ந்து கொண்டுள்ளது. ஐக்கிய நாடுகள் சபை புலிகளின் தன்மைகளை உணர்ந்து கொண்டுள்ளது. அதேபேõல் இலங்கைக்கு விஜயம் மேற்கொள்கின்ற வெளிநாட்டுப் பிரதிநிதிகளும் கூட இங்குள்ள நிலைமைகளை நேரில் கண்டும் அறிந்தும் செல்கின்றனர். அதேபோல் பயங்கரவாதத்துக்கு துணைபோக சர்வதேசம் செயற்படவில்லை என்றும் இங்கு வருகின்ற பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர்.

நிலைமை இவ்வாறிருக்கும் போது இலங்கை மீது சர்வதேசம் அழுத்தம் பிரயோகிப்பதாக கூறுவது பொருத்தமற்றதாகும். மேலும் தமிழக முதல்வர் கருணாநிதி தனது உண்ணாவிரதத்தை முடிவுக்கு கொண்டு வந்தது இலங்கையில் யுத்தநிறுத்தம் அறிவிக்கப்பட்டதாலேயே என்று கூறி தேர்தல் பிரசாரங்களை மேற்கொண்டு வருகின்றார். இதேபோல் எதிர்க்கட்சித் தலைவி ஜெயலலிதாவும் தனது ஒரு பக்க கருத்துக்களை தேர்தல் பிரசாரங்களில் முன்வைத்து வருகின்றார். இவர்கள் இருவருமே அரசியல் மோதல்களில் ஈடுபட்டுள்ளனர். தேர்தல் காலங்களில் பசப்பு வார்த்தைகளை பேசி கேளிக்கையான சிந்தனைகளைத் தூண்டிவிடுவது அரசியல்வாதிகளின் இயல்பு என்பதனை இவர்கள் நிரூபித்துள்ளனர். இவர்களைப் பற்றி நாம் அலட்டிக் கொள்ள முடியாது. தமிழகத்தின் இன்னொரு சாரார் இலங்கையில் நாடு பிளவுபட்டால் இந்தியாவுக்கும் அந்த நிலை ஏற்படக் கூடும் என்ற நிலைப்பாட்டில் உள்ளனர்.

தமிழகத் தலைவர்களின் மத்தியிலேயே இலங்கை பிரச்சினைக்கான கேள்வியும் பதிலும் இருக்கின்றது. எது எப்படி இருப்பினும் தமிழ்நாட்டைப் பற்றி அரசாங்கம் கணக்கில் எடுக்கவில்லை. அது எமக்கு தேவையுமில்லை. காங்கிரஸ் கட்சியின் கீழான மத்திய அரசாங்கத்திற்கும் இலங்கை அரசாங்கத்தற்கும் இடையிலான நீண்ட நாள் உறவு மிகவும் சுமுகமானதாகவே பேணப்பட்டு வருகின்றது. அதுவே எமக்கு போதும்.

வீரகேசரி

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அப்ப என்னாத்துக்கு கனரகஆயுதம் பாவிக்கறதில்லையென்டு சொன்னனீங்கள் ஆனால் நீங்கள் பாவிக்கிறீங்கள் என்பது உன்மை அது ஏன் சொம்மாவாவது சொன்னனீங்கள் தமிழ்நாட்டுக்குபயத்திலதான

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.