Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

கடும் சமர் தொடர்கிறது; நேற்றிரவு மட்டும் 5000 மேற்பட்ட எறிகணை வீச்சு;3000 மக்கள் பலி;5000 மேல் காயம்

Featured Replies

கடும் சமர் தொடர்கிறது; நேற்றிரவு மட்டும் 5000 மேற்பட்ட எறிகணை வீச்சு 3000 மக்கள் பலி;5000 மேல் காயம்

ராணுவம் மக்கள் பகுதி மீது கண்மூடித்தனமான ஷெல் வீச்சுகளை மேற்கொள்கிறது; நூற்று கணக்கில் பொதுமக்கள் பலி; ஆயிரக்கணக்கில் இறந்திருக்கலாம் என அச்சம்;நேற்றிரவு மட்டும் 5000 மேற்பட்ட எறிகணைகள் ஏவப்பட்டன;ஒரு மனித பேரவலம் நிகழ்ந்து கொண்டிருக்கிறது;நிகழ போகிறது என்று சொன்னோம்; இப்பொழுது நிகழ்கிறது என்று சொல்கிறோம். சர்வதேசமும் ஐநாவும் நிகழ்ந்து முடிந்துவிட்டது என்ற செய்தியை எதிர் பார்த்து கொண்டா இருக்கிறது என்று கேள்வி எழுப்புகிறார் எமது செய்தியாளர்;அத்துடன் உலக தமிழ் மக்களை உடனடியாக இதனை சர்வதேசத்தின் கவனத்திற்கு கொண்டு வருமாறு எமது செய்தியாளரிடம் பேசிய மக்கள் கதறுகின்றனர்.

Source Link: 5000 Shell in the Safty Zone;More than 3,000 civilians feared slaughtered in a single night

Edited by தேசம்

சர்வதேச ரீதியாகத் தடை செய்யப்பட்டுள்ள கிளஸ்டர் குண்டுகள் மற்றும் பல்குழல் ஏவுகணைகள், பீரங்கிகள் கொண்டு பாதுகாப்பு வலயத்தின் மீது தாக்குதல் நடாத்தி அதனைப் படுகொலைக்களமாக ஆக்கியுள்ளது இலங்கை அரசு. வழமையாக சர்வதேசத்தின் கவனம் சற்றுக் குறைவாக இருக்கும் என்ற காரணத்தினால் இவ்வாறான நடவடிக்கைகளுக்கு வார இறுதி நாட்களையே இலங்கை அரசு தெரிவு செய்வது வழக்கம்.

எதிர்வரும் இந்தியத் தேர்தலில் அரசாங்கம் மாறுவதற்கு முன்னால் போரை முடிவுக்குக் கொண்டு வரும்படி இந்திய அரசாங்கம் கேட்டுக் கொண்டதாலேயே இவ்வாறான ஒரு கொடுரக் கொலை நடவடிக்கையில் இலங்கை அரசாங்கம் இறங்கியிருக்கிறது என்றும், ஒபாமாவின் நிர்வாகத்தில் பயங்கரவாதத்திற்கெதிரான போர் பொதுமக்களுக்கெதிரான போராக கொள்ளப்படுகிறது என்றும் கொழும்பின் அரசியல்வட்டாரங்கள் குறித்துக் காட்டியுள்ளன.

புலிகளுக்கும் இராணுவத்திற்கும் இடையில் கடும் சமர் மூண்டுள்ள நிலையில், மக்கள் செறிவாக வாழும் பகுதிகளை நோக்கி இராணுவம் கடும் எறிகணைத் தாக்குதல்களை நடத்துவதாக கூறப்படுகிறது. முள்ளிவாய்கால் தெற்குபகுதியூடாக முன்னேற முயற்சிக்கும் இராணுவத்தினரை எதிர்த்து புலிகள் கடும் தாக்குதல் மேற்கொண்டுவருவதாக தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை இராணுவத்தினர் வெள்ளமுள்ளிவாய்கால் பகுதியில் தரையிறக்கம் ஒன்றை மேற்கொண்டுள்ளதாகவும் அதிலிருந்து நகரும் படையினரின் துப்பாக்கிச் சூட்டிற்கு பல சிறுவர்களும் முதியோர்களும் காயமடைந்துள்ளதாகவும் அங்கிருந்துவரும் தகவல் தெரிவிக்கின்றது.

முள்ளிவாய்க்காலுக்கான எமது அனைத்துத் தொடர்புகளும் துண்டிக்கப்பட்ட நிலையில் உள்ளது. மேலதிக செய்திகள் எதனையும் பெறமுடியவில்லை.

அங்கு ஒரு இனம் சத்தம் ஏதுமின்றி அழிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது. நாம் என்ன செய்யப் போகிறோம்?? உறவுகளே உடனடியாக உங்கள் தொகுதி பாராளுமன்ற உறுப்பினர்களை தொடர்புகொள்ளுங்கள் இனியும் தாமதித்தால் முள்ளிவாய்க்கால் வட்டுவாகல் பகுதி ஒரு மனிதப் புதைகுழியாக மாறி இலங்கை வரைபடத்தில் இருந்தே அகற்றப்படும் நிலை தோன்றலாம், அங்கு என்ன நடந்தது எவ்வாறு எஞ்சிய மக்கள் கொல்லப்பட்டனர், என்ற வரலாறு நமக்கு தெரியாமல் போகலாம்.

அங்கு என்ன குண்டுகள் பாவிக்கப்படுகின்றன என்பது இதுவரை யாருக்கும் தெரியாது. சிறுவர்களும் குழந்தைகளும் மற்றும் வயோதிபர்களும் அங்கு ஓடமுடியாத நிலையில் முடக்கப்பட்டுள்ளனர். எனவே விரைந்து செயல்படுங்கள் எம் உறவுகளே .. உங்களால் ஆன உதவியை செய்யுங்கோ........

http://www.tamilskynews.com/index.php?opti...0&Itemid=53

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.