Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இலங்கை அரசு மாற்று வழிகளை நாட நாம் வழிவகுத்து விடக்கூடாது

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இலங்கை அரசு மாற்று வழிகளை நாட நாம் வழிவகுத்து விடக்கூடாது

* இலங்கைக்கு இராணுவத்தை அனுப்புவது சாத்தியமில்லை சென்னையில் இந்திய பிரதமர் அறிவிப்பு

சுயாதிபத்தியம் கொண்ட நாடொன்றுக்கு இராணுவத்தை அனுப்புவது எளிதான காரியமல்லவென்று தெரிவித்திருக்கும் இந்திய பிரதமர் கலாநிதி மன்மோகன் சிங் இலங்கைத் தமிழர்களின் பிரச்சினைக்கு ஐக்கியப்பட்ட இலங்கைக்குள் சமஷ்டி அடிப்படையிலான தீர்வொன்றையே தாங்கள் விரும்புவதாகக் கூறியிருக்கின்றார்.

சென்னையிலுள்ள தனியார் மருத்துவ மனையொன்றில் அனுமதிக்கப்பட்டிருக்கும் முதல்வர் கருணாநிதியைப் பார்வையிட குறுகிய நேர விஜயமொன்றை மேற்கொண்ட கலாநிதி மன்மோகன் சிங் செய்தியாளர் மகாநாடொன்றிலேயே இவ்வாறு கூறியிருக்கிறார்.

பொதுத் தேர்தலின் பின்னர் தனது சொல்லைக் கேட்கக் கூடிய அரசாங்கம் ஒன்று மத்தியில் வருமேயானால் இலங்கைக்கு இந்திய இராணுவத்தை அனுப்பி தனித் தமிழ் ஈழம் உருவாக்கப்போவதாக அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளரும் முன்னாள் முதலமைச்சருமான ஜெயலலிதா தேர்தல் பிரசாரத்தின்போது கூறியது தொடர்பாக இந்த செய்தியாளர் மகாநாட்டில் இந்தியப் பிரதமரிடம் கேட்கப்பட்டபோது பதிலளித்த இந்திய பிரதமர்;

எது சாத்தியமானது, எது சாத்தியமில்லாதது என்பதெல்லாம் ஊகங்களுக்கு உரிய விடயமென்று நினைக்கின்றேன். ஆனால், வெளிப்படையாகச் சொல்வதானால் இலங்கை விவகாரத்தைப் பொறுத்தவரை சுயாதிபத்தியமுடைய ஒரு நாட்டு விவகாரத்தைக் கையாளுகின்றோமென்பதை மனதில் வைத்துக்கொண்டு அத்தகைய ஒரு நாட்டுக்கு இராணுவத்தை அனுப்புவது எளிதான காரியமல்லவென குறிப்பிட்டார்.

இலங்கைத் தமிழர் பிரச்சினைக்கு தனித் தமிழீழமே தீர்வென்று ஜெயலலிதா கூறியதைத் தொடர்ந்து திராவிட முன்னேற்றக் கழக தலைவர் கருணாநிதி ஈழம் காண முயற்சிக்கப்போவதாக கூறியிருக்கும் பின்னணியிலேயே மன்மோகன் சிங் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

சர்வதேச சட்டங்கள் மற்றும் அவற்றுடன் தொடர்புடைய நிர்ப்பந்தங்கள் எல்லாவற்றையும் இந்த பெரிய பெரிய உறுதி மொழிகள் வழங்குபவர்கள் தெரிந்து வைத்திருக்கின்றார்களென நினைக்கின்றேன்.

இலங்கை தொடர்பில் இந்தியா மேற்கொள்ளக்கூடிய எந்த நடவடிக்கையும் வேறு மாற்று வழிகளை கொழும்பு அரசாங்கம் நாடுவதற்கு வழிவகுத்துவிடக்கூடாது.

இலங்கைப் பிரச்சினைக்கு இராணுவத் தீர்வு காண முடியாது. பேச்சுவார்த்தை மூலமான அரசியல் இணக்க தீர்வொன்றையே காணமுடியும். தற்போதைய தருணத்தில் இலங்கையில் இடம்பெயர்ந்திருக்கும் மக்களுக்கு நிவாரணங்களை வழங்குவதும் போருக்கு முடிவொன்றைக் காண்பதுமே அதிமுன்னுரிமைக்குரிய விவகாரமாகும். இந்த தமிழீழ விவகாரம் எல்லாம் நீண்டகால அடிப்படையிலானவை.

இலங்கைக்குள் தமிழர்கள் கௌரவமானதும் கண்ணியமானதும் சுயமரியாதையுடையதுமான இடமொன்றைப் பெறுவதே முக்கியமானதாகும். பேச்சுவார்த்தை மூலமான அமைதி வழி இணக்கத் தீர்வு ஒன்றினூடாக ஐக்கியப்பட்ட சமஷ்டி அடிப்படையிலான இலங்கைக்குள் தமிழர்களின் நியாயபூர்வமான அபிலாஷைகள் பூர்த்தி செய்யப்பட வேண்டும்.

இராணுவ மோதலல்ல, தமிழர்களுக்கு சமத்துவமான உரிமைகளை வழங்கக்கூடிய அரசியல் இணக்கத் தீர்வு மாத்திரமே இலங்கை நெருக்கடியை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான ஒரே வழியென்பதை இலங்கை அரசாங்கமும் மக்களும் புரிந்துகொள்வதை உறுதிசெய்யவேண்டும்.

இலங்கைத் தமிழர்கள் கௌரவத்துடனும் சமத்துவத்துடனும் வாழ இந்தியா நிச்சயம் உதவி செய்யும். நாங்கள் மிகவும் நிச்சயமற்ற கால கட்டத்தில் வாழ்கின்றோம். எமது அயல் நாடுகளைப் பொறுத்தவரை நாம் எதைச் செய்தாலும் அவையெல்லாம் சுயாதிபத்தியம் கொண்ட நாடுகளென அங்கீகரித்தாக வேண்டுமென்றும் செய்தியாளர் மகாநாட்டில் இந்திய பிரதமர் கூறினார்.

இலங்கையுடனான உறவுகளை இந்தியா ஏன் துண்டிக்க முடியாதென செய்தியாளர் கேட்டதற்குப் பதிலளித்த பிரதமர்;

இந்தியாவுடன் விவகாரங்களைக் கையாள்வதைவிடவும் வேறு மாற்று வழிகளையும் கொண்ட சுயாதிபத்திய நாடுகளுடன் பிரச்சினைகளைக் கையாள்கின்றபோது ஒரு குறுகிய நோக்குடைய அணுகு முறையைக் கடைப்பிடிப்பதன் மூலம் சில சமயங்களில் பரந்தளவிலான தேசிய நலன்களுக்கு ஊறுவிளைத்தும்விடக் கூடுமென்று குறிப்பிட்டார்.

இன்னொரு கேள்விக்குப் பதிலளித்த பிரதமர் மன்மோகன் சிங் இலங்கை இராணுவம் இந்தியாவில் பயிற்சி பெறுவதை ஒத்துக்கொண்டார். அதேவேளை, தாக்குதல் நோக்கத்துக்குப் பயன்படுத்தல் ஆகாதென்ற நிபந்தனையுடன் தற்காப்பு நோக்கங்களுக்கு மாத்திரம் சில உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ளது என்றார்.

இந்திய பிரதமர் சென்னையில் செய்தியாளர் மகாநாட்டில் கூறிய கருத்து குறித்து சென்னைக்கு வெளியே தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டிருந்த ஜெயலலிதாவிடம் செய்தியாளர்கள் தெரிவித்தனர்.

இலங்கைக்கு இராணுவத்தை அனுப்புவது முடியாத காரியம் என்று பிரதமர் மன்மோகன் சிங் தெரிவித்திருக்கின்றாரே என்று கேட்டபோது;

பங்களாதேஷை உருவாக்குவதற்கு முன்னாள் இந்தியப் பிரதமர் இந்திரா காந்தி எந்த அடிப்படையில் இந்திய இராணுவத்தை அனுப்பி வைத்தார் என்பதைக் கலாநிதி மன்மோகன் சிங் விளக்க வேண்டும் என்றார்.

தினக்குரல்

Edited by ஜீவா

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

"நேற்று சென்னையில் பேசிய மன்மோகன்சிங் இலங்கையில் போர்நிறுத்தம் ஏற்பட்டுள்ளதாக சொல்லியுள்ளதாக கலைஞர் தொலைக்காட்சி இரவு செய்தியில் கூறி உள்ளது."

ஆனால் நேற்று மூவாயிரத்துக்கும் அதிகமான மக்கள் பாதுகாப்பு வலையத்தில் வைத்து சிங்கள காட்டுமிராண்டிகளால் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.

ஒருநாட்டின் தலைவரே பொறுப்பற்ற முறையில் தவறான செய்திகளை வழங்குவதை கேட்க யாரும் இல்லை அதைவிட கொடுமை எம் மக்களின் அழிவை வேடிக்கை பார்ப்பதோடு

அதை வைத்து அரசியல் பண்ணும் கேவலமான நிலையில் இந்திய பிரதமர் உள்ளிட்ட அரசியல் கட்சிகள் இருப்பது தான்.

நம் சாவில் அவங்க வாழுறானுங்க

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.