Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பிரபகாரன் உயிருடன் இருக்கிறார்; தமிழ் மக்களின் நம்பிக்கையை இழந்தது இலங்கை; தமிழர் பிரச்சனையில் இந்தியா முக்கிய பங்கு வகிக்க வேண்டும்

Featured Replies

பிரபகாரன் உயிருடன் இருக்கிறார்; தமிழ் மக்களின் நம்பிக்கையை இழந்தது இலங்கை; தமிழர் பிரச்சனையில் இந்தியா முக்கிய பங்கு வகிக்க வேண்டும்.

தமிழ் நெட்ற்கு திரு பத்மநாதன் செவ்வி

Pathmanathan_TamilNational.jpg

Pirabakaran alive; SL lost trust & confidence of Tamils; India has a crucial role to play

Edited by தேசம்

Selvarasa_Pathmanathan_02.jpg
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தமிழீழத் தேசியத் தலைவர் அவர்கள் பாதுகாப்பாக இருக்கின்றார்.

தமிழீழத் தேசியத் தலைவர் அவர்கள் பாதுகாப்பாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழீழ விடுதலைப் புலிகளின் அனைத்துலக இராசரீக உறவுகளுக்கான பிரதிநிதி செல்வராஜா பத்மநாதன் பிரித்தானியாவின் சனல் 4 (Channel 4) தொலைக்காட்சிக்கு இன்று மாலை 7:00 மணியளவில் தொலைபேசி வாயிலாக அளித்த செவ்வியில் இதனைத் தெரிவித்தார்.

http://www.meenagam.org/wp-content/uploads...an_18052009.mp3

பாதுகாப்பு காரணங்களுக்காக அவர் எங்கிருக்கின்றார் என்ற விபரத்தை வெளியிட முடியாது எனவும் பத்மநாதன் கூறினார்.

வவுனியா தடுப்பு முகாம் உண்மை நிலையை நேரடியாகச் சென்று அனைத்துலகிற்கு வெளிச்சமிட்டுக்காட்டி சனல் 4 (Channel 4) தொலைக்காட்சின் செய்தியாளர் நிக் பற்றன் வோஸிற்கு ((Nick Patton Walsh) வழங்கிய செவ்வியிலேயே பத்மநாதன் இதனைக் கூறினார்.

மூலம்: மீனகம்.கொம்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இந்து சமுத்திரப் பிராந்தியத்தின் பூகோள முக்கியத்துவம் சார்நிலையில் முதன்மைபெறும் இந்தியாவுடன் இணைந்து, ஈழத்தமிழ்மக்கள் பிரச்சனைக்குத் தீர்வு காண விடுதலைப்புலிகள் விரும்புகின்றார்களென விடுதலைப்புலிகளின் சர்வதேச ராஜரீகத் தொடர்பாளர் பத்மநாதன் தெரிவித்துள்ளார். 'தமிழ்நெற்' இணையத்தளத்துக்கு இன்று அவர் வழங்கிய செவ்வியிலேயே இதனைக் குறிப்பிட்டுள்ளார். இச் செவ்வியில் அவர் தெரிவித்திருக்கும் கருத்துக்களின் சாராம்சத் தொகுப்பினைச் சுருக்கமாகத் தருகின்றோம்.

இந்தியாவிற்கும் ஈழத்தமிழமக்களுக்குமான சமூக கலாச்சார நெருக்கங்கள் அதிகமாகவிருப்பதனால், அவர்களோடு இனைந்து இப்பிரச்சினையை அணுகுவதில் தடையேதுமிருக்கப் போவதில்லை எனவும் குறிப்பிட்டார். இதன்படி தமிழக அரசியற் கட்சிகளுடன் இணைந்தும் செயற்பட முடியுமெனவும் குறிப்பிட்டார். தற்போது தமிழ்மக்களுக்கு ஏற்பட்டிருக்கக் கூடிய சூழ்நிலையானது மிகவும் துரதிஸ்டமானது.

வன்னியில் நிகழ்ந்துள்ள இந்த இனப்படுகொலைகள் தமிழினத்திற்கு மிகப்பெரிய துயரத்தைக் கொடுத்திருக்கிறது. இதன் காரணமாக உலகெங்கும் பரந்து வாழும் தமிழமக்கள் ஒரு பொதுவேலைத்திட்டத்தில் இணைந்து பணியாற்றும் பக்குவத்தைத் தந்திருக்கிறது. இந்நிலையில் , சிங்களமக்களும், சிங்கள அரசும், தாம் பெற்றுக் கொண்ட இராணுவ வெற்றிகளின் அடிப்படையில் சிந்திப்பார்களானால், அது இனங்களுக்கிடையேயான சம அந்தஸ்தைப் பாதிக்கும். ஏற்கனவே அப்படியான நிலையினை அரசியல்வாதிகள் உருவாக்கி வைத்ததினால்தான், தமிழ்மக்கள் ஒடுக்கப்பட்ட மக்களாக உணரப்பட்டார்கள். அதனாலேயே போராடும் எண்ணம் பெற்றார்கள்.

இப்போதுள்ள சூழ்நிலையில் மீளவும் அப்படியானதொரு அவமரியாதைச் சூழ்நிலையைத் தோற்றுவிக்காதிருப்பது அவசியம். அப்படியானதொரு துர்ப்பாக்கிய நிலை மறுபடியும் வந்துவிடக் கூடாதென்பதே தற்போது விடுதலைப்புலிகள் அமைப்பினதும் தலமையினதும் அக்கறையும் கவலையுமாதகவுள்ளது. இந்த யுத்தத்தினால் சிங்கள அரசின் மீது தமிழ்மக்கள் ஒட்டு மொத்த நம்பிக்கையை இழந்திருக்கின்றார்கள். இழக்கபட்ட நம்பிக்கைகள் மீளக்கட்டியெழுப்பப்படுவது மிக மிக அவசியம்.

ஈழத்தமிழமக்களின் அரசியற் செயற்பாடுகளில், இப்போதிருக்கும் அமைப்புக்களும் தமிழர் நலன்கள் குறித்துப் பயனிக்கத் தொடங்கியவர்கள்தான். அதே சிந்தனையோட்டத்தில் அவர்கள் தொடர்ந்தும் பயணிப்பார்கள் என நம்புகின்றோம். நடந்து முடிந்த யுத்தத்தின் இறுதித் தருணங்களில், வெள்ளைக் கொடியோடு போனவிடுதலைப்புலிகளின் முக்கிய உறுப்பினர்கள் சிலர் கண்டூடித்தனமாகச் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்கள். விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் தற்போது உயிரோடும் உடல்நலத்தோடும் இருக்கின்றார். அவருடனான தொடர்பைப் பேணும் ஒருவராக நான் மட்டுமே செயற்படுகின்றேன் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

http://ww1.4tamilmedia.com/index.php/2009-...-05-19-00-08-10

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இந்தியா பங்கு வகித்தனால் தானே இவ்வளவு கொடூரமும் நடந்தேறியிருக்கிறது. இனிமேலும் இந்தியா தலையீடு வேண்டுமா?.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.