Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

இடம்பெயர்ந்தோர் நலனில் சிவில் அதிகாரிகள் அசண்டை; யாழ் முகாம்களில் மக்கள் வேதனை!

Featured Replies

வன்னியிலிருந்து இடம்பெயர்ந்து யாழ்ப்பாணம் தென்மராட்சி பாடசாலைகளில் தங்கியிருந்த மக்கள் கொடிகாமம், கச்சாய் ராமாவில் முகாமுக்கு மாற்றப்பட்ட மறுதினமே கடும் மழை பெய்து மக்கள் பெரும் துன்பங்களுக்கு முகம்

கொடுத்ததாக முகாம் சென்று திரும்பியவர்கள் தெரிவிக்கின்றனர். இந்த மக்களுக்கு வேண்டிய உதவிகள் உடனடியாகச் செய்துகொடுக்கப்படவில்லை என்றும் அவர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.

வன்னியிலிருந்து இடம்பெயர்ந்து சாவகச்சேரி இந்துக் கல்லூரி, மீசாலை திருநாவுக்கரசு வித்தியாயலம் உள்ளிட்ட பாடசாலைகளில் தங்கியிருந்த 804 குடும்பங்களைச் சேர்ந்த 2,435 பேர் கடந்த 16ம் திகதி சனிக்கிழமை கொடிகாமம், கச்சாய், ராமாவில் இடைத்தங்கல் முகாமுக்கு மாற்றப்பட்டனர். தற்காலிகமாக அமைக்கப்பட்ட கொட்டில்களில் அவர்கள் குடும்பம் குடும்பமாகத் தங்கவைக்கப்பட்டனர்.

சாவகச்சேரி மகளிர் கல்லூரி மற்றும் வடமராட்சியிலுள்ள சில பாடசாலைகளில் தங்கியிருந்த இடம்பெயர்ந்தவர்களும் இந்த முகாமுக்கு மாற்றப்படவிருப்பதாக யாழ் அரசாங்க செயலக வட்டாரங்கள் தெரிவிந்திருந்தன.

எனினும்,மக்கள் இந்த முகாமில் குடியேற்றப்பட்ட இரண்டு தினங்களில், திங்கட்கிழமை இரவு பெய்த கடும் மழை காரணமாக முகாம் பகுதி பெருமளவு வெள்ளத்தில் மூழ்கியதாக அங்கு சென்று திரும்பியவர்கள் தகவல் தெரிவித்தனர். இதனால் அங்குள்ள மக்கள் பெரும் துன்பங்களை அனுபவித்து வருவதாக அவர்கள் கூறினர்.

போதிய முன்னேற்பாடு செய்யப்படவில்லை

பாடசாலைகளில் தங்கியிருந்த இடம்பெயர்ந்தவர்களை ஒரு நிரந்தரமான இடத்தில் தங்கவைக்கும் நோக்கில் ராமாவில் இடைத்தங்கல் முகாம் ஏற்பாடு செய்யப்பட்டதாக அரச செயலக வட்டாரங்கள் தெரிவித்தன. எனினும், மக்களை அங்கு அழைத்துச் செல்வதற்கு முன்னர் போதிய அடிக்கட்டுமான வசதிகள் செய்யப்படவில்லை என்று முகாம் சென்று திரும்பிய உதவிப் பணியாளர்கள் எமக்குத் தகவல் தெரிவித்தனர்.

10 X 10 அடி அளவு கொண்ட ஓலைக் குடிசைகளில் ஒவ்வொரு குடும்பமும் தங்கவைக்கப்;பட்டிருப்பதாகவு

  • கருத்துக்கள உறவுகள்

கேட்பதற்கு இனி யாரும்(புலிகள்)இல்லை. எனவே இனி அரச ஊழியர்களின் ஆட்டம் தொடங்கும். இனி அவர்கள் ஐந்தாம் படையாவர். மாவட்ட ஊர் பேதங்கள் தலைவிரித்தாடும். இவற்றைக் களைய வேண்டுமாயின் துணிய வேண்டும். சாவது ஒருமுறை என்று தட்டிக் கேட்காவிடின் இந்தக் கோடரிகாம்புகள் கொழுப்பெடுத்தாடும். ஆனால் காலம் மாறும். அப்போது இந்த அலட்சியப் போக்குடையோர் அவலப்பட நேரிடும்.

அரச ஊழியர்காள் அவலப்பட்டோருக்கு உதவுவீர்களா? அல்லது அதிலெதைச் சுருட்டலாம் என்று கணக்குப் போடுகிறீர்களா?

இனனும் நாங்கள் எதை இழக்க வேன்டும் எனறு இந்த சர்சதேச நாடுகள் எதிர் பார்க்கின்றதோ கடவுளே உனக்கும் கண் இல்லையா?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.