Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

கனத்த இதயம்

Featured Replies

கனத்த இதயம்

இன்று கனத்த இதயத்துடன் கண்விழித்த எனக்கு, என் இதயம் அடிபட்டு நொந்து கிடப்பதையும், அதன் வலியையும் உணரக்கூடியதாக இருந்தது. எதுவரை இது தொடரப்போகிறது. ஈழத்தமிழனின் வலிமையை அழித்துத் துடைக்கவும், உலகத் தமிழனின் ஆற்றலை முடமாக்கவும் எங்கள் பிராந்திய வல்லரசு சிங்கள ஏகாதிபத்தியத்துடன் இணைந்து வித்தை காட்டிவிட்டது. இதையும் ஒரு சுனாமியாக உலகத் தமிழினம் ஏற்றுக் கொள்ளப் போவதில்லை. போராட்டத்தின் ஒவ்வொரு கட்டத்திலும் விசேடமாக இந்திய இலங்கையின் கூற்றுப்படி நாலாம் கட்ட ஈழப்போரின் இறுதிக்கட்டத்தில் இந்த வல்லரசுகள் செய்த, செய்து கொண்டிருக்கும் திருவிளையாடல்களை மறைக்க இப்போதும் பிரபாகரனின் கதை என்னும் படம் காட்டிக் கொண்டு இருக்கிறார்கள். தமிழகத்திற்கு நல்ல படம் காட்டிய அநேகர் விழித்துக் கொண்டனர். இனிமேலும் தமிழினத்தின் இந்த கனத்த இதயங்கள் இப்படிப்பட்ட படங்களைப் பார்த்து நம்பப் போவதுமில்லை மயங்கப்போவதுமில்லை.

காலத்தின் கையில் கடமையை ஒப்புவிக்காமல் ஓயவிடாமல் செயலாற்ற வேண்டும். ஆற்றல் மிகுந்தவர்களெல்லாம் கைகொடுக்க வேண்டும். இன்று நடந்து கொண்டிருக்கும் ஈழத்தமிழினத்தின் போராட்ட வரலாறுகளையும,; அன்றொரு சிவபக்தன் இராவணனை இராமாயணத்தில் கொச்சைப் படுத்தியது போல புது மாயணம் எழுதிவிடுவார்கள். கம்பனைப் போல் நம்மவர்கள் கூட கவிதை பாடிவிடுவார்கள். காசுக்காக எதையும் செய்யும் கூட்டம் எம்மவரிடம் உண்டு. உண்மைகள் எல்லாம் ஆதாரங்களுடன் ஆவணப்படுத்த வேண்டும். இறுதி நேரத்தில் நிகழ்ந்த சம்பவங்கள் யாராவது தப்பிப் பிழைத்து வந்திருந்தால் அறிந்து அவற்றையும் பதிவுசெய்ய வேண்டும். கண்மூடி இருந்த சர்வதேசத்தையும் சதிகாரர்களையும் உலகுக்கு அம்பலப்படுத்த வேண்டும்.

உலகில் எங்கெல்லாம் தமிழர்கள் வாழ்கின்றார்களோ அவர்களெல்லாரும் இந்தத் தமிழினப் படுகொலையைக் கண்டு துடித்துப்போனாhர்கள். இதைத் தடுத்து நிறுத்துமாறு அந்தந்த நாடுகளிடம் கெஞ்சி மன்றாடினார்கள். வீறுகொண்டெழுந்த மாணவ சமுதாயம் ஓயாமல் போராடியது. இன்றும் போரராடிக்கொண்டிருக்கிறது. இந்த மாணவ சமுதாயம் ஒட்டாவா பாராளுமன்றத்தின் முன் எங்கள் மக்களைக் காப்பாற்றும்படி முழந்தாள்படியிட்டு வேண்டியது கவனஈர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த அனைவர் உள்ளங்களையும் கசிந்துருக வைத்தது. ஆட்சியாளர்கள் இதை எல்லாம் கணக்கில் எடுக்கவில்லை. சில நாடுகள் ஒப்புக்குச் சில காரியங்களைச் செய்தார்கள். உள்ளத்தூய்மையுடன் செய்தார்களோ அது ஆண்டவனுக்கு வெளிச்சம். மௌனமாக இருந்தவர்கள் ஏன்? . ஒரு பிராந்திய வல்லரசுக்குப் பணிந்தார்களா? அல்லது வர்த்தக நோக்கங்கள் பாதிக்கப்படுமென எண்ணினார்களா? பூனைக்கும் நாய்க்கும் நீங்கள் இரங்குவது என்ன பம்மாத்தா? அமைதிக்காக உலகில் ஒரு ஐ.நா சபை ஏன்? எல்லா நாடுகளிலுமுள்ள பெரும்பாண்மை மக்கள் சேர்ந்து சிறுபாண்மை மக்களை அழிக்கவும், அடிமைப்படுத்தவும் மட்டும்தானா?; இல்லை எண்ணை வளத்துக்கும் பண பலத்துக்கும் மட்டும்தானா குரல் கொடுப்பீர்கள்?

கொலையும் குற்றுயிருமாயிருக்கும் எம்மக்களுக்கு மருந்து கட்டக் காத்திருக்கும் கொலைகாரக் கும்பலே உன் சண்டித்தனத்தை ஒரு சிறிய இனத்திடம் காட்டிவிட்டாய். உன்னிடம் தன் சண்டித்தனத்தைக் காட்ட ஒருவன் காத்திருக்கிறான் என்பதை மறந்துவிடாதே. அது நிகழும்வரை நான் உயிர் வாழ அருள்வேண்டுகின்றேன்.

ஒன்று மட்டும் எனக்குத் தெரிகிறது. எழுச்சி கொண்ட இந்த மாணவ சமுதாயத்தின் உணர்ச்சி வெள்ளம் இனிமேல் சும்மா இருக்கப் போவதில்லை.

ஆக்கம்: ம. செபஸ்தியாம்பிள்ளை

22.05.09

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.