Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பயங்கரவாதிகளுக்கு உதவிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் மீது விரைவில் வழக்கு தாக்கல் - அரசாங்கம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

25/05/2009, 19:14 [செய்தியாளர் மயூரன்]

பயங்கரவாதிகளுக்கு உதவிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் மீது விரைவில் வழக்கு தாக்கல் - அரசாங்கம்

பயங்கரவாதத்திற்கு உதவிகளை வழங்கிய , வழங்கும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலருக்கு தற்போது நடைமுறையில் உள்ள சட்டங்களுக்கு அமைவாக விரைவில் வழக்குகள் தொடரப்படும் என அரசாங்கத்தின் சிரேஸ்ர பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

தமிழ்க்கூட்டமைப்பு உட்பட பல கட்சிகளின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலர் பயங்கரவாதிகளுக்கு உதவியதாக கடந்த காலங்களில், பெருவாரியன புகார்கள் கிடைக்கப்பெற்று வந்ததையடுத்து அதுகுறித்து ஆராய்ந்த பின்னரே இவ்வாறான தீர்மானம் எடுக்கப்பட்டதாக அந்தப்பேச்சாளர் மேலும் தெரிவித்தார்.

பயங்கரவாதிகளுக்கு ஒத்துளைப்பு வழங்கியது மட்டும் இன்றி இனவாதத்தை தூண்டுவதற்கு சில உறுப்பினர்கள் செயற்பட்டதாகவும் குற்றச்சாட்டுகள் கிடைக்கப்பெற்றுள்ளதால் அதற்கெதிரான சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளவுள்ளதாகவும் அப்பேச்சாளர் மேலும் தெரிவித்தார்.

நன்றி - பதிவு

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

முதலில் இனவாத்தைக் கக்கும் தேராக்களையும், ஜே.வீ.பீ க்காரரையும் பிடித்துப் போடவேண்டும்.வழக்குத் தொடர வேண்டும். அரசபயங்கரவாதத்தை கட்டவிழ்த்து விட்டமைக்காகவும், தமிழினம் மீது, மனித இனமே வெட்கித்தலைகுனியும் விதமாகப் பெரும் கொடுமைகளை விளைவித்து, படுகொலை செய்தமை, அங்கவீனர்களாக்கியமை,பாலியல் வன்கொடுமைகள் செய்தமை, சிறுவர்கள் மற்றும் குழந்தைகளைக் கொன்றமை, உணவு மற்றும் மருந்துவ உதவிகளை போராயுதமாகப் பாவித்தமை, உலகால் தடை செய்யப்பட்ட நச்சுக் குண்டுகள், எரிகுண்டுகள், கொத்தணிக் குண்டுகள் உட்பட நாசகார ஆயுதங்களைப் பாவிக்க உத்தரவிட்ட சிங்களச் சிறிலங்காவின் அரசுத் தலைவர், பாதுகாப்புத்துறைச் செயலாளர், படைத்துறைத் தளபதி சரத்பொன்சேகா ஆகிய மூவரும், தமிழர்களை இனத்துவ அடிப்படையில் பெரும் இனவழிப்பை நடாத்திய பிரதானிகள் என்ற வகையிலே வழக்கைத் தாக்கல் செய்ய வேண்டும்.

;

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரை அச்சுறுத்திப் பணிய வைக்கும் உத்தியாகும். உரியவர்கள் விரைந்து செயற்பட வேண்டும். தமக்கே இந்த நிலையெனில் சாதாரண மக்களது நிலை என்னவென்று கேட்க வேண்டும். உலகத் தலைவர்களுக்கு உடனும் இது தொடர்பாகத் தெரியப்படுத்தி, அவர்களது கவனத்துக்குக் கொண்டுவர வேண்டும். அப்போதுதான் இந்த அரசினது பயங்கரவாதப் பூச்சாண்டியை உடைத்து ஒரு அரசியல் தளத்தை நகர்த்தலாம். தமிழர் தரப்பினது சனநாயகப் பிரதிநிதிகளையே பான் கீ மூனைச் சந்திக்க விடாது தடுக்க முடியுமெனில் இனி என்ன கொடுமைகள் நடைபெறாது. இந்தியாவுக்கு ஓடுவதைவிட அமெரிக்காவிடம் கேட்பதே பொருத்தமானது. கொலைக்குக் காரணமாணவர்களிடம் நீதியை எதிர்பார்க்க முடியாதல்லவா? மேற்கோடு எமது உறவுகளை த.தே.கூ வலுப்படுத்த வேண்டும்.

உடனுக்குடன் தொடர்பாடலை மேற்கொள்ளும் புலமைசார் குழுவொன்றை நிறுவி ஆவண செய்ய முன்வாருங்கள். வாக்களித்த மக்கள் செத்துக் கொண்டிருக்கிறார்கள்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.