Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இறந்தவர்களின் எண்ணிக்கை தொடர்பான குறைந்த மதிப்பீடு ஐநாவின் திட்டமிட்ட செயல்

Featured Replies

இலங்கையில் தமது இருப்பை நிலை நிறுத்துவதற்காக இலங்கை சார்பாக செயற்பட முனைப்பு, நம்பியார் இலங்கையிலுள்ள அதிகாரிகளுக்கு உத்தரவு, பிரான்ஸ் செய்தித் தாள் ஒன்று இச் செய்தியை வெளியிட்டது.

UN deliberately downplaying civilian death toll in order to stay in SL

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இலங்கையில் தமது இருப்பை நிலை நிறுத்துவதற்காக இலங்கை சார்பாக செயற்பட முனைப்பு, நம்பியார் இலங்கையிலுள்ள அதிகாரிகளுக்கு உத்தரவு, பிரான்ஸ் செய்தித் தாள் ஒன்று இச் செய்தியை வெளியிட்டது.

UN deliberately downplaying civilian death toll in order to stay in SL

உண்மைதான். ஐக்கிய நாடுகளின் சபை என்பது, பன்னாட்டு ஆதிக்க சக்திகளின் வணிக முகவராக மாறி நெடுநாட்களாகிறது. நாம்தான் கணிக்க தவறி விட்டோம்.

தொண்ணுறுகளில் நடந்த ஈராக் போர் ஐநாவின் அனுமதி இல்லாமலேதான் நடந்தது. ஏனெனில் மேற்குலகிற்கு எண்ணெய் தேவைப்பட்டது. ஆப்கானிஸ்தான் மீது நடத்தப்பட்ட போரும் ஐநாவின் அனுமதி இல்லாமல்தான் நடந்தது. அமெரிக்கர்களுக்கு தங்கள் நாடு மக்களை திருப்தி படுத்த வேண்டியிருந்தது.

கிழக்கு தைமூர் பிரிக்கப்பட்டத்து அதன் எண்ணெய் வளத்தை கருத்தில் கொண்டுதான்.

தமிழ் ஈழத்தில் என்ன இருக்கிறது? அவர்களை பொறுத்த வரை, லாபமில்லாத ஒரு வேலையில் , அதுவம் வேறு வேலை இல்லாவிட்டால் மட்டுமே, ஏனோ தானோ என்று ஈடுபடுவார்கள். அதற்குள் நீதி கேட்டவன் செத்தே போயிருப்பான், ஈழ தமிழர்கள் இருபதாயிரம் பேர் கடற்கரையில் சாட்சியமின்றி கொல்லப்பட்டதை போன்று.

மன சாட்சியுள்ள ஒன்றிரெண்டு ஊடகங்கள், சவக்குழியை தோண்டி உண்மை என்னவென்று கண்டுபிடிக்க முயலக்கூடும். அதனாலும் பலனேதும் இருக்கபோவதில்லை.

விடுதலை போரில் நீதி, நேர்மை மட்டும் போதாது. வாணிபம் செய்யவும் தெரிந்திருக்க வேண்டும். "உன் விடுதலைக்கு நான் உதவினால் எனக்கு என்ன தருவாய்?" என்றுதான் வருபவன் எல்லாம் நினைப்பான். நாம் சாப்பிடும்போது நாய்க்கும் ஒரு கவளம் போடுவதில்லையா, அதை போன்று போடாமல் காரியம் ஆகாது. இலங்கை போட்ட எலும்புத்துண்டுக்கு இந்திய ஊடகங்களும், பன்னாட்டு ஊடகங்களும், அரசுகளும் வாலாட்டும் அழகுதான் என்னே?!

அது போன்று எலும்பு துண்டுகளை நாம் வீசியிருந்தால், உலகின் தொன்மையான் குடிக்கென்று ஒரு நேர்மையான அரசு அமைந்திருக்கும்.

கட்டபொம்மன், காக்கை வன்னியன், எல்லாளன் என்று நேர்மையான ஆனால் வாணிபம் செய்யதெரியாமல் வீழ்ந்த நல்லவர்களின் பட்டியல் நீளம்.

  • கருத்துக்கள உறவுகள்

Edited by kuddipaiyan26

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஐநா சபை, இலங்கை போரில் கொல்லப்பட்ட அப்பாவி மக்களின் எண்ணிக்கையை, இலங்கையை திருப்திபடுத்துவதற்காக வேண்டுமென்றே குறைத்து கூறியது.

பிரான்சிலிருந்து வெளிவரும் "லே மொண்டே" என்னும் பத்திரிகை," ஐநா சபையானது இலங்கை அரசாங்கத்தை திருப்தி படுத்த வேண்டும் என்பதற்காக, விடுதலை புலிகளுடன் நடந்த போரில் கொல்லப்பட்ட அப்பாவி பொது மக்களின் எண்ணிக்கையினை வேண்டுமென்றே குறைத்து கூறியுள்ளது" என்று செய்தி வெளியுட்டுள்ளது.

"பிரான்சு 24" என்னும் செய்தி நிறுவனத்தின் நிருபர் டோனி தொட்ட் கூற்றின்படி ,

பெயர் வெளியிட விரும்பாத ஐநா அதிகாரிகள், பான் கீ மூன் உட்பட ஐநாவின் உயரதிகாரிகள் இலங்கையில் ஐநாவின் செயல்பாடுகள் தொடருவதற்காகவும் இலங்கை அரசாங்கத்தை அவமானப்படுத்துவதை தவிர்ப்பதற்காகவும் அதிகளவிலான பொது மக்கள் உயிரிழந்தது பற்றி வாய் மூடி மௌனியாக இருந்தார்கள் என்று தெரிவித்துள்ளனர்.

"லே மொண்டே" பத்திரிகையில் இந்த செய்தியினை எழுதிய பிலிப்பே போலோபின்

ஐநாவின் வளங்கள் பற்றா குறையினால் இந்த அளவுக்கு குறைவான விபரங்கள் கிடைத்தன என்று தான் நம்ப வில்லை என்று ஐநாவின் உயரதிகாரிகளை மேற்கோள் காட்டி "பிரான்சு 24" நிறுவனத்திடம் பேசும்போது கூறினார். அவர்களுக்கு முக்கியமான விடயம், இலங்கையினை விட்டு வெளியேறாமல் இருக்க வேண்டும் என்பதே.

( இலங்கையில் சீன , பாகிஸ்தானிய, அமெரிக்க உளவாளிகள் இந்தியா பற்றிய உளவு தகவல்களை சேகரிப்பதற்காக எப்போதும் உண்டு. இவர்கள் ஐநா அதிகாரிகள் என்ற போர்வையிலும் வருவது உண்டு. இலங்கையினை விட்டு ஐநா வெளியேற வேண்டும் என்று இலங்கை நீண்ட நாட்களாகவே கூறி வந்துள்ளது, ஐநாவின் மனித உரிமைகள் அமைப்பு இலங்கையில் அலுவலகம் திறப்பதற்கு இன்றுவரை அனுமதி கொடுக்கப்படவில்லை என்பது கவனிக்கத்தக்கது. நீ உன் உளவு வேலையினை மட்டும் பாரு, நான் என் கொலை வேலையை பார்க்கிறேன் எனபது இலங்கையின் வாதம். இதை பற்றி கவலைப்பட வேண்டிய இந்தியா இலங்கைக்கு உதவுவது தனக்கு தானே குழி தோண்டி கொள்வதற்கு சமம். விடுதலை புலிகளும், நண்பன் யார், எதிரி யார் என்று இந்தியா இனம் காண வேண்டும் என்று நீண்ட நாட்கள் கோரி வந்துள்ளனர்)

சாட்சிகள் எதுவும் இல்லாமல் இலங்கை இந்த போரை நடத்துவதாக குற்றம் சாட்டப்பட்டது. இலங்கையின் வட பகுதியில் நடந்த போர் பகுதிக்கு சர்வதேச ஊடகங்களும் உதவி அமைப்புகளும் செல்வதற்கு தடை செய்யப்பட்டன.

"பெரும் எண்ணிக்கையிலான மக்கள் போரில் கொல்லப்படுவது எங்களுக்கு தெரிந்ததே இருந்தது"

"லே மொண்ட" செய்திகளின்படி, இலங்கையில் நடைபெற்ற போரில் உயிரிழக்கும் மக்கள் பற்றிய சரியான கணக்கை பேணுவதற்காக வல்லுனர்கள் குழு ஒன்று அமைக்கப்பட்டதாகவும், அவர்கள் தரும் தகவலில் ஒரு சிறு பகுதி மட்டுமே ரகசியமாக கசியவிடப்பட்டதாகவும் தெரிய வருகிறது.

இவ்வாறு கசியவிடப்பட்ட , கொல்லப்பட்ட மக்களின் எண்ணிக்கையானது, மே மாதம் மத்தியில், இலங்கை அரசு விடுதலை புலிகளுக்கு எதிரான போரில் வெற்றி பெற்று விட்டதாக அறிவிப்பதற்கு முன்பு வரை, சுமார் 7700 ஆகும். அதன் பிறகும் தொடர்ச்சியாக மக்கள் கொல்லப்பட்டுகொண்டேயிருந்தா

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.