Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மகிழ்ச்சி என்பது போராட்டமே?

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மகிழ்ச்சி என்பது போராட்டமே? குளோபல் தமிழ்ச் செய்திகளிற்காக பொன்னிலா:

புலிகளின் தலைமை அழிக்கப்பட்டது குறித்து பல் வேறு கருத்துக்கள் பகிரப்படுகின்றன.

எண்பதுகளில் உருவான போராளிக் குழுக்களிடையே புலிகள் வலுப் பெற்றவர்களாக உருவாகி ஏனைய போராளிக் குழுக்களை வீழ்த்தி தனியொரு அமைப்பாக புலிகள் உருவான போது இந்த சகோதரப் படுகொலைகள் குறித்து எந்தக் கலலையையும் இந்தியா வெளிப்படுத்திக் கொள்ளவில்லை. மாறாக போராளிக் குழுக்களிடையே ஏற்பட்ட மோதலின் பின்னால் இந்தியா இருந்தது. புலிகள் கடந்த காலத்தில் செய்த தவறுகளை ஜனநாயக மறுப்பை ஏராளமான புலம்பெயர் நண்பர்கள் கண்டித்து எழுதி வந்தனர். பெரும்பாலான புலி எதிர்ப்பாளர்கள் இலங்கை அரசு முன்னெடுத்த வன்னி மீதான போரை புலிகளுக்கு எதிரான போராக மட்டுமே பார்த்தனர். புலி எதிர்ப்பால் உருவான கோபத்தைச் செரித்துக் கொள்ள கொல்லப்பட்ட பல்லாயிரம் மக்களின் கொலைகள் குறித்துப் பேச மறுக்கின்றனர். மௌனமாக இருக்கின்றனர். இன்னும் சிலரோ ஈழத்தில் இனப்படுகொலை நடக்கவே இல்லை என்கின்றனர். (எடுத்துக்காட்டு சுசீந்திரன் நேர்காணல் புதுவிசை)

இலங்கை அரசின் வெற்றியை தங்களுக்குக் கிடைத்த வெற்றியாகவும். புலிகளின் தோல்வியை தங்களின் எதிரிகளுக்குக் கிடைத்த தோல்வியாகவும் பார்க்கின்றனர். இந்நிலையில் ஒரு சமூகத்தின் மீது அவலமும் அவ நம்பிக்கையும் கவிழ்ந்துள்ள சூழலில் புலிகளின் தமிழக ஆதரவாளர்கள் குறித்த கேள்விகள் முன் வைக்கப்பட்டாக வேண்டும். ஏனென்றால் அவர்களின் வீழ்ச்சியில் தமிழகத்துக்கு கணிசமான பங்குண்டு என்பதே எனது எண்ணம். அதீதமான நம்பிக்கையை விதைத்து போராட்டத்தை போராட்டமாக மாற்றாமல் சந்தர்ப்பவாத அரசியலுக்கு பயன்படுத்திக் கொண்ட சூழலையும் தமிழகத்தில் பார்க்க நேர்ந்த சூழலில் மிகக்குறுகிய நிலப்பகுதிக்குள் முடக்கப்பட்ட புலிகளை இந்திய நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள் மனதளவில் மிகவும் பாதித்ததும் தெரியவருகிறது.

ஈழத்தில் இனப்படுகொலைக்கு எதிரான ஆதரவுக் குரல் முதன் முதலாக எழுந்தது தமிழகத்தில்தான். அதன் முதல் உணர்வெழுச்சிதான் முத்துக்குமாரின் தீக்குளிப்புத் தியாகம். கருணாநிதி, ஜெயலலிதா என்கிற இருபெரும் அரசியல்வாதிகளையும் சம தூரத்தில் விலக்கி வைத்த முத்துக்குமாரின் மரணசாசனம் அன்றைக்கு அனைத்து அரசியல் தலைவர்களாலும் மறைக்கப்பட்டது. ஏனென்றால் தமிழக ஈழ ஆதரவுத் தலைவர்கள் அனைவருமே ஜெ,கருணாநிதி என்ற இரு அரசியல் தலைமைகளின் கீழும் கூட்டணி வைத்திருந்தனர்.

என் உடலைக் கைப்பற்றி போராட்டத்தை கூர்மையாக்குங்கள் என்ற முத்துக்குமாரின் சாசன வரிகள் வெளியில் அரசியலாவதை ஈழ ஆதரவுத் தலைவர்கள் விரும்பவில்லை.தங்களுக்கு வேண்டியவர்களுக்கு தர்மசங்கடம் ஏற்படும் என்று அதை மறைத்தும் திரித்தும் வாசித்தார்கள். அதிலிருந்த ஜெயலலிதா பற்றிய கருத்தை எடுத்து விட்டு புதிய மரணசாசனத்தை வெளியிட்டனர் சிலர். கருணாநிதி பற்றிய கருத்துக்களை எடுத்து விட்டு வெளியிட்டனர் கருணாநிதியின் ஆதரவாளர்கள். வெகு வேகமாக புதைக்க நடந்த முயw;ச்சிகள் முறியடிக்கப்பட்டு மாணவர்களும் வழக்கறிஞர்களும் முத்துக்குமாருக்கு எழுச்சியான ஒரு வீரவணக்க ஊர்வலத்தை வழங்கியதை சில அரசியல் சக்திகள் விரும்பவில்லை. அல்லது முத்துக்குமாரின் அரசியலை மழுங்கடித்து அதை ஒரு தமிழுணர்வாளரின் வீரமரணம் என சுருக்கிக் கதைத்தனர்.

நெடுமாறன், வைகோ, ராமதாஸ், திருமா, பிஜேபி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி இணைந்ததுதான் இலங்கைத் தமிழர் பாதுகாப்புப் பேரவை. ராமதாஸ் அப்போது காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசில் அதிகாரத்தை பங்கிட்டிருந்தார். வைகோ ஜெயலலிதா கூட்டணியில் இருந்தார். திருமா திமுக கூட்டணியில் இருந்தாலும் காங்கிரஸ் எதிர்ப்பால் அவர் ஈழம் என்ற கொள்கையால் மூன்றாவது அணி அமைக்க விரும்பினார்.ஆனால் கருணாநிதி மீதான விமர்சனங்களை மிக சாதுர்யமாக பிரயோகித்தார். இந்நிலையில் தான் முத்துக்குமாரின் மரணத்தை ஒட்டி எழுந்த அலையில் பொதுவாக தேர்தல் அரசியல்வாதிகளுக்கு எதிரான உணர்வலைகள் கிளர்ந்தது.

கருணாநிதி, வைகோ, ராமதாஸ், திருமா என அனைவரையுமே கடுமையாக கண்டித்தனர் அங்கு திரண்டிருந்தவர்கள். அதன் பல் வேறு வெளிப்பாடுகளை அங்கே கண் கூடாக காண முடிந்தது. திமுகவின் வி.எஸ்.பாபு தாக்கப்பட்டதும் இந்த மனநிலையில்தான். ஈழம் பற்றிக் கருத்துச் சொன்ன ராமதாஸோ அதை கருணாநிதிக்கு எதிராக மடை மாற்றினார். கருணாநிதி துரோகம் செய்து விட்டதாகச் சொன்னார். ஆனால் கடைசி வரை மத்திய காங்கிரஸ் அரசிலிருந்து ராமதாஸ் வெளியேறவே இல்லை. காங்கிரஸ் அரசை கண்டிக்கவும் இல்லை மென்மையாக கோரிக்கைகள் விடுப்பதோடு நிறுத்தியும் கொண்டார். வைகோவோ ஜெயலலிதா மனம் புண்படாதவாறு பேசினார். போர் என்றால் மக்கள் சாகத்தான் செய்வார்கள் என்ற ஜே வின் கருத்தை மௌனமாக கண்டும் காணாமல் விட்டார் வைகோ. திருமாவோ மத்திய காங்கிரஸ் அரசை விமர்சித்தார் ஆனால் கருணாநிதியை ஈழ விவகாரத்தில் அவர் விமர்சிக்கவே இல்லை.

இப்படியாக செய்கூலி சேதாரம் இல்லாமல் நடந்த தமிழகத் தலைவர்களின் ஈழ ஆதரவுப் போராட்டம் கடைசியில் போயஸ்கார்டனில் போய் தேர்தல் ஆதரவோடு முடிந்தது. திருமா காங்கிரஸ் கூட்டணில் சமரசம் செய்து கொண்டு சேர்ந்தார். பாவம் ஈழத் தமிழர்கள் தமிழக மக்களே தங்களுக்காக திரண்டு போராடுவதாகவும் தமிழக தலைவர்கள் தங்களை கைவிட்டு விட மாட்டார்கள் என்று நம்பினார்கள்.

இயல்பாக எழுந்த போராட்டத்தை வீணடித்து அதை ஒரு சடங்காக மாற்றுகிற போராட்டமாக மனுக்கொடுகிற, கோரிக்கை எழுப்புகிற போராட்டங்களாக மாற்றப்பட்டது. அதே நேரம் திமுக தனது ஆதரவாளர்களை வைத்து உருவாக்கிய இலங்கைத் தமிழர் நலப் பேரவைக்கோ யாருக்கு எதிராகப் போராடுகிறோம்? என்ன கோரிக்கை? என்று எதுவும் இல்லாமல் இருந்தது. எல்லா ஊர்வலங்களிலும் திமுக தலைவர்களும் காங்கிரஸ் காரர்களும் சேர்ந்தே ஈழத் தமிழனுக்கான ஊர்வலம் போனார்கள்.

தாழாது... தாழாது தமிழினம் யாரையும் தாழ்த்தாது.... இதுதான் அவர்களின் கோஷம் இதன் பொருள் யாருக்காவது புரிகிறதா? இப்படி மொண்ணையான கோஷங்களை தெருக்களில் எழுப்பிச் செல்வதால் ஈழத் தமிழனுக்கு என்ன விடிவு ஏற்படப் போகிறது என இவர்கள் யாராவது நினைத்துப் பார்த்தார்களா? திமுகவின் இலங்கைத் தமிழர் நலப் பேரவையின் ஒரே நோக்கம் பழ. நெடுமாறன் தலைமையில் உருவாக்கப்பட்டிருக்கும் இலங்கைத் தமிழர் பாதுகாப்புப் பேரவையை உடைக்க வேண்டும் அல்லது அவர்களின் போராட்டங்களை நீர்த்துப் போகச் செய்ய வேண்டும் என்பதுதான். அந்த அமைப்பு நடத்திய ஊர்வலங்களின் கருணாநிதி, ஸ்டாலினைப் புகழ்ந்து கோஷங்கள் ஒலித்ததைத் தவிற ஈழத்தின் மீதான தன் பொறுப்பை தட்டிக் கழிப்பதற்காக பிரபாகரன் மீதும் புலிகள் மீதும் காழ்ப்பைக் கொட்டியதைத் தவிற வேறு எதுவும் செய்யவில்லை கருணாநிதி. ராஜிநாமா நாடகம், உண்ணாவிரதம் என ஒரு நாடகத்தின் பல அத்தியாயங்களாக இவைகள் அரங்கேறிக் கொண்டிருந்தன.

இலங்கைத் தமிழர் பாதுகாப்புப் பேரவையில் திருமா தவிர அப்படியே அந்த அணி அதிமுக கூட்டணிக்குப் போக இதற்குமேல் திமுகவின் இலங்கைத் தமிழர் நலப் பேரவைக்கு அவசியம் இல்லாமல் போனது. அந்தவகையில் அந்த அஸ்திரத்தின் தேவை அவ்வளவே. தவிரவும் நெடுமாறன் தலைமையிலான இலங்கைத் தமிழர் பாதுகாப்புப் பேரவை நீர்த்துப் போகத் துவங்கியது முத்துக்குமார் தீக்குளித்து இறந்த போதே துவங்கிவிட்டது.

இதற்கப்பாலும் திமுக தன் பலதரப்பட்ட ஆதரவாளர்களையும் இலங்கைத் தமிழர்களுக்காக களத்தில் இறக்கியிருந்தது. தமிழகம் முழுக்க சோனியாவின் உருவ பொம்மைகள் எரிக்கப்பட்டது,மத்திய மாநில அரசுகளுக்கு எதிரான உணர்வலைகள் மாநிலம் முழுக்க சட்டம் ஒழுங்கு பிரச்சனையை உருவாக்க போலீஸ் அராஜகத்தின் மூலம் அதை ஒடுக்கியது காங்கிரஸ், திமுக கூட்டணி அரசு. இதற்கிடையில் திமுக தன் அனுதாபிகளை உசுப்பி விட்டு சில பேரணிகளை நடத்தி இளைஞர்களை குழப்பும் வேலையும் நடந்தது. அதற்காக அவர்கள் கண்டு பிடித்த ஒரு கருவிதான் அமைதிப் பேரணி. கோஷங்கள் இல்லை, கோரிக்கைகள் இல்லை யாரையும் திட்டவும் வேண்டாம் அரசியலும் பேச வேண்டாம்... அதனால் அமைதியாக பேரணி செல்வோம் என்று ஈழத் தமிழர்களுக்காக சிலர் பெரும் நிதி உதவியோடு போராடினார்கள். சோனியா, காங்கிரஸ் மனம் புண்படாமல் போராடுகிற இந்த யுத்தியை இன்று தமிழகத்தில் பலரும் செய்து கொண்டிருக்கிறார்கள்.இப்போ

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.