Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

கதிரைக் கனவுகளால் எங்களைச் சாகடிக்காதீர்கள்--ஈழநாடு

Featured Replies

தமிழீழக் கனவோடு வாழ்ந்த பல்லாயிரக் கணக்கான மக்கள் பலி கொள்ளப்பட்டுவிட்டார்கள். அந்த இலட்சியத் திற்காகப் போராடிய போராளிகளும், தளபதிகளும் சுட் டெரிக்கப்பட்டு விட்டார்கள்.

உயிருக்குப் போராடிய காயமடைந்த மக்களையும் போராளிகளையும் காப்பாற்றவென்ற வேட்கையுடன் மானத்தோடு மாவீரராகும் தத்துவத்தையும் கைவிட்டு, சரணடைய முற்பட்ட அரசியல் துறைப் பொறுப்பாளர் நடேசனும், சமாதானச் செயலகப் பணிப்பாளர்

புலித்தேவனும் கூட வெள்ளைக் கொடியுடன் சுட்டுக் கொல்லப்பட்டு விட்டார்கள். எல்லாமே சுடுகாடாக்கப்பட்டு சாம்பல் மேடாகக் காட்சி தருவதை ஐ.நா.வின் பொதுச் செயலர் பான் கி மூனும் வானிலிருந்து பார்வையிட்டுச் சென்றுவிட்டார்.

வன்னியில் தப்பிப் பிழைத்தவர்கள் முட்கம்பி வேலிச் சிறைக்குள் அடிமைச் சின்னமாக, அடுத்த வேளை உண வுக்கு எதிரியின் கையைப் பார்க்கும் இழி நிலைக்கு உட் படுத்தப்பட்டு உள்ளார்கள். அங்கும் இளம் வயதினர் வடி கட்டப்பட்டு, வதை முகாம்களுக்கு கொண்டு செல்லப்படுகின்றனர். சரணடைந்த போராளிகளின் நாட்கள் எண்ணப்படுகின்றன. ஆனாலும், சர்வதேசங்கள் இன்றுவரை ஆக்கபூர்வமாக எதையும் செய்யவில்லை. தமிழீழ விடுதலைப் போராட் டத்தை பயங்கரவாதமாகச் சித்தரித்து சிங்கள சிறிலங்கா நடாத்திய பரப்புரைகளை ஏற்று, விடுதலைப் புலிகளைத் தமது நாடுகளில் தடை செய்ததன் மூலம் இந்த இனப் படுகொலையில் பங்கு வகித்த உலக நாடுகள் தமிழினத்தின் அத்தனை அழிவு களுக்குப் பின்னரும் தமிழர்களுக்கான நீதியை வழங்க முன்வரவில்லை.

வீதியிலிறங்கிப் போராடுகின்றோம்... உண்ணாவிரதங்கள் இருக்கின்றோம்... கண்ணீர் விட்டுக் கதறுகின்றோம்... 'எஞ்சியுள்ள எமது மக்களையாவது சிங்கள இனவாத அரசின் இன அழிப்பிலிருந்து காப்பாற்றுங்கள்...' என்று. உவ்வொரு மணித் துளிகளாக... நாட்களாக... வாரங்க ளாக... காலம் கடந்து செல்கின்றதே தவிர வேறேதும் நடப்பதாகத் தெரியவில்லை. 'தமிழர்கள் தோற்கடிக்கப்பட்டார்கள்' என்று சிங்களம் மீண்டும் ஒரு கொண்டாட்டத்திற்கு நாள் குறித்துள்ளது. பாதுகாப்பை இழந்த தமிழர்கள் மீது சிங்களனின் காறித் துப்பல்கள்... குனிந்த தலையுடன் அதைத் துடைத்துவிட்டு நகரத்தான் அவர்களால் முடிகின்றது. தமிழ்ப் பெண்கள் நடு ரோட்டில் பாலியல் துன்புறுத்தல்களுக்குள்ளாகி

ஐயோஓஓஓஓஓஓஒ................. யாருக்கு சொல்லி இதை அழுகிறது???????????

பேனை தூக்கிய கைகளே எம் முதுகை கொத்தியதை யார் அறிவர்

ஐயோஓஓஓஓஓஓஒ................. யாருக்கு சொல்லி இதை அழுகிறது???????????

அதிரடிக்கும் தேனிக்கும் நெருப்புக்கும் சொல்லி அழுங்கோ.... :)

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அஞ்சலி செய்வதற்கும் பதவிக்கதிரைகளுக்கும் அலையும் நண்பர்களே, ராஜபக்ச குடும்பம் எமது மக்களினதும் போராளிகளினதும் குருதியில் நனைந்தபடி வெற்றிவிழாக் கொண்டாடுகிறான். நாங்கள் எங்களுக்குள் இன்னும் அறிக்கைப்போரினால் பிளவுபடப்போகிறோமா? நெருப்பாக எரிந்துகொண்டிருந்த புலம்பெயர் உறவுகளின் போராட்டங்கள் உங்களின் அறிக்கைப் போரினால் கொஞ்சம் கொஞ்சமாக மழுங்கடிக்கப்படுகின்றன என்பதை உணருங்கள். தலைவரினதும் அரசியல் போராளிகளினதும் இறுதிக்கட்ட நிகழ்வுகள் பற்றிய கேள்விகள் சந்தேகங்கள் நிறையவே உள்ளன. ஆனால் சீழ்வடியும் புண்ணைச் சீண்டி இன்னும் நாறவைக்க விரும்பவில்லை. சிறைப்பிடிக்கப்பட்ட அல்லது சரணடையவைக்கப்பட்ட அரசியல் போராளிகளை விடுவித்தால் நிறைய உண்மைகள் வெளிவரும். அதற்கா வேலைகளில் அனைவரும் விரைவாக ஈடுபடுவோம்.

சிறைப்பிடிக்கப்பட்ட அல்லது சரணடையவைக்கப்பட்ட அரசியல் போராளிகளை விடுவித்தால் நிறைய உண்மைகள் வெளிவரும்.

சிறை பிடிக்கப்பட்ட அரசியல் போராளிகள் மட்டுமல்ல ........... எனைய போராளிகளும், பொதுமக்களும் விடுவிக்கப்பட்டால் நிறைய வரும் ..........

கதிரைகள்/சுகபோகங்களை காப்பாற்ற இங்கு ஒரு கூட்டம் ......... உண்மைகளை மறைக்கிறது! தமிழர்களின் போராட்டத்தை அடுத்த கட்டத்துக்கு கொண்டு செல்ல தடை போடுகிறது!! ......... மொத்தத்தில் எம் இனத்தை அழிவுப் பாதைக்கு கொண்டு செல்கிறது!!!!!!!!!!!!!

இன்று நாம் விடும் தவறுகள், நாளை எங்கள் தலைமையை எம் பிணங்களை திண்டு ஏப்பம் விடும் டக்லஸ்/கருணா போன்றவர்களிடம் ஒப்படைக்கப் போகிறோம்!!!

சிறைப்பிடிக்கப்பட்ட அல்லது சரணடையவைக்கப்பட்ட அரசியல் போராளிகளை விடுவித்தால் நிறைய உண்மைகள் வெளிவரும்.

இங்கு லண்டனில் எமது அரசியல் பிரிவு பொறுப்பாளராக இருந்த நடேசண்ணாவின் சகோதரர்களும், மகனும் இருக்கிறார்கள். அவர் இறப்பதற்கு சில நாளிகைகளுக்கு முன் கூட அவர்களுடன் சற்றலைற் போனில் கதைத்தவராம். அவர்களிடம் போய் கேளுங்கள் நிறைய உண்மைகள் வரும்!!!

இங்கு யாழ்களத்தில் கூட இருக்கும் சில ஊடகவியலாளர்களிடம் அரசியல் பிரிவு, புலனாய்வுப்பிரிவு, உடபட அனைத்துப் பிரிவுகளை சேர்ந்தவர்களும் இறுதி நேரம் வரை கதைத்தவர்களாம்!! கேளுங்கள் நிறைய உண்மைகள் வரும்!!!!!!!!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.