Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழர்களுக்கு உரிமைகள் வழங்கப்படாவிட்டால் மீண்டுமொரு ஆயுத போராட்டத்தை சந்திக்க நேரிடலாம் : ஓய்வு பெறும் பிரதம நீதியரசர்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தமிழர்களுக்கு உரிமைகள் வழங்கப்படாவிட்டால் மீண்டுமொரு ஆயுத போராட்டத்தை சந்திக்க நேரிடலாம் : ஓய்வு பெறும் பிரதம நீதியரசர்

திகதி: 06.06.2009 // தமிழீழம்

நீதியில் சிங்கள பௌத்தம் என ஒன்று இல்லை. எல்லா இனமும் சமயமும் ஒன்று தான். நான் இனவாதியாக இருக்கவில்லை. " இளைப்பாறிச் செல்லும் பிரதம நீதியரசர் சரத் என். சில்வா மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

"தமிழ் மக்களுக்கு, உகந்த நீதி மற்றும் சமூக கட்டமைப்புகள் மூலம், சட்டத்தின் கீழ் உரிய பாதுகாப்பு அளிக்காவிட்டால் தமிழ் மக்களிடையே ஆயுத மோதலுக்குப் பதிலாக மற்றொரு கிளர்ச்சி வெடிக்கும் சாத்தியம் உள்ளது. சரியான முறையில் தமிழர் உரிமைகள் வழங்கப்படாத பட்சத்தில் மீண்டுமொரு ஆயுத போராட்டத்தை சந்திக்க நேரிடலாம்" எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

பிரதம நீதியரசர் பதவியில் இருந்து நேற்றுடன் விடைபெறுவதை ஒட்டி அவர் நடத்திய செய்தியாளர் மாநாட்டில் அவர் இதனைக் கூறினார். அவர் மேலும் தெரிவிக்கையில், "அரசமைப்பின் 13 ஆவது திருத்தம் போதிய ஆய்வோ, யோசனை செய்தோ இயற்றப்படவில்லை. இந்திய அரசமைப்பைப் பார்த்து அந்தத் திருத்தம் கொண்டுவரப்பட்டது. இந்தியாவுக்கு இது சரியாக இருக்கலாம். இலங்கைக்கு அது ஏற்புடையதல்ல.

பொலிஸ் அதிகாரத்தை பரவலாக்கினால் பொலிஸ் மா அதிபர் அதிகாரம் அற்றவராகவே இருப்பார். மாகாணங்களுக்கு அதிகாரங்களைக் கொடுத்துவிட்டு அவர் சும்மா இருக்க வேண்டும். இதேபோல் காணி விவகாரமும் உயர்வானது. மொத்தத்தில் 13 ஆவது திருத்தம் பல ஓட்டைகளைக் கொண்டது.

இலங்கையில் மாகாணங்களுக்கு சரியான எல்லைகள் வரையறுக்கப்படவில்லை. எல்லைகள் வரையறுக்காமல் எதனையும் செய்யமுடியாது. சரியான முறையில் எல்லைகள் வகுக்க முறையேதும் இல்லை. நீதியில் சிங்கள பௌத்தம் என ஒன்று இல்லை. எல்லா இனமும் சமயமும் ஒன்று தான்.

நான் இனவாதியாக இருக்கவில்லை. இலங்கையன் என்றே செயற்பட்டேன். சகல மக்களின் உரிமைகளும் பாதுகாக்கப்பட வேண்டும். அப்படி பாதுகாக்கப்படாவிட்டால் மோதல்கள் எதிர்காலத்தில் ஏற்படலாம். நலன்புரி நிலையங்களில் உள்ளவர்களை நடமாட அனுமதிக்க வேண்டும். இல்லையேல் சர்வதேசத்தின் கெட்ட பெயரை சம்பாதிக்க வேண்டி வரும்" என்றார்.

சிறீலங்காவின் பிரதம நீதியரசர் சரத் என் சில்வா கடந்த காலங்களில் தமிழ் மக்களுக்கு எதிரான கருத்து நிலைப்பாட்டை கொண்டிருந்தவர் என்பதும், குறிப்பாக வடக்கு - கிழக்கு பிரிப்பை ஆதரித்து தீர்ப்பு வழங்கியவர், சுனாமிக் கட்டமைப்பு, தமிழர் புனர்வாழ்வுக் கழக நிதி முடக்கம் போன்ற பல்வேறு நடவடிக்கைகளில் சிறீலங்கா அரசும் இனவாதிகளும் எதிர்பார்த்த தீர்ப்புக்களை வழங்கியவர் என்ற குற்றச்சாட்டுக்கள் இவர் மீது உள்ளன.

இந்நிலையில் இவ்வாறான ஒரு கருத்தை இவர் வெளியிட்டுள்ளார். எனினும், சிறீலங்காத் தலைமை நீதிபதியே இவ்வாறு தமது நாட்டு அரசை கடுமையாக விமர்சிக்கும் வகையில் பேசியிருப்பது இலங்கையில் மட்டுமல்ல சர்வதேச ரீதியிலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சங்கதி

  • கருத்துக்கள உறவுகள்

விடுதலைப்புலிகள் இலங்கையின் நீதிமன்றத்திற்குள் ஒரு துப்பாக்கிப் பிரயோகத்தைக் கூட மேற்கொள்ளவில்லை சரத் என் சில்வா:

cjbatti.jpg

கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களில் விடுதலைப்புலிகளின் நீதிமன்றங்கள் இருந்த போதிலும், அவர்கள் இலங்கையின் நீதிமன்றத்திற்கு மதிப்பளித்ததாக பிரதம நீதியரசர் சரத் என் சில்வா தெரிவித்துள்ளார்.

தமிழ் மக்கள் ஒரு கௌரவமான இனப்பிரிவினர். அவர்கள் சட்டத்திற்கு மாத்திரமல்லாது மற்றவர்களின் உரிமைகளுக்கும் மதிப்பளித்தனர்.

விடுதலைப்புலிகளின் இலங்கையின் நீதிமன்ற முறைமைக்கு மதிப்பளித்தனர். விடுதலைப்புலிகள் இலங்கையின் நீதிமன்றத்திற்கு ஒரு துப்பாக்கி பிரயோகத்தைக் கூட மேற்கொள்ளவில்லை.

விடுதலைப்புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனுக்கு சட்டரீதியாக பாரிய பாதிப்புகளை ஏற்படுத்தி தான் யாழ்ப்பாணத்திற்கு சென்று நீதிமன்றத்தை திறக்க முடிந்தது எனவும் சரத் என் சில்வா கூறியுள்ளார்.

கொழும்பில் நேற்று நடைபெற்ற ஊடக மாநாட்டில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

http://www.globaltamilnews.net/tamil_news....10368&cat=1

  • கருத்துக்கள உறவுகள்

சிறீலங்காவின் பிரதம நீதியரசர் சரத் என் சில்வா கடந்த காலங்களில் தமிழ் மக்களுக்கு எதிரான கருத்து நிலைப்பாட்டை கொண்டிருந்தவர் என்பதும், குறிப்பாக வடக்கு - கிழக்கு பிரிப்பை ஆதரித்து தீர்ப்பு வழங்கியவர், சுனாமிக் கட்டமைப்பு, தமிழர் புனர்வாழ்வுக் கழக நிதி முடக்கம் போன்ற பல்வேறு நடவடிக்கைகளில் சிறீலங்கா அரசும் இனவாதிகளும் எதிர்பார்த்த தீர்ப்புக்களை வழங்கியவர் என்ற குற்றச்சாட்டுக்கள் இவர் மீது உள்ளன.

எல்லாருக்கும் பதவியில் இருக்கும் போது அதனை பயன்படுத்தி ஒன்றும் செய்யத் தெரியவில்லை , பென்சன் எடுத்து வீட்டுக்கு போகும் போது தான் ஞானம் பிறக்குது .

Edited by தமிழ் சிறி

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.