Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

புலிகள் தோற்கடிக்கப்பட்டார்களென்று தொடரும் ஆதிக்கவாதக் காய்ச்சல்

Featured Replies

விடுதலைப்புலிகளை இலங்கையின் ஆயுதப்படைகள் இராணுவரீதியாக வெற்றி கொண்டதன் பின்னர் தொடருகின்ற வெற்றிவிழாக் கொண்டாட்டங்களின் எழுச்சியின் அபாயம் குறித்து ஐ.நா. சபையின் பொதுச்செயலாளர் பான் கி-மூன் எச்சரித்திருக்கிறார்.

பயங்கரவாதம் என்று எதனை மக்கள் கிரகித்துக்கொண்டு அதனைப் பொறுத்துக் கொண்டிருந்தார்களோ, அச் செயல்கள் நிறைவு பெற்றதனால் அடைந்த நிம்மதியின்

வெளிப்பாடாக, “பயங்கரவாதத்தின் முடிவு” என்பதனை அவர்கள் கொண்டாடக் கூடும். அதேவேளையில், ராஜபக்ஸ அரசு இந்த வெற்றியினூடாக அதன் அரசியல் பயணத்தில் பெரிய விளைவுகளைப் பெற்றுக் கொள்கிறது. எனவே தன்னை இன்னும் பிரபலப்படுத்துவதற்காக வெற்றியின் உற்சாகம் தரும் மெல்லிய புறத்தோற்றத்தை சடுதியாகப் போர்த்திக் கொள்கிறது.

அதேசமயம் பெரும்பான்மை சமூகத்தில் இருக்கும் ஆதிக்கவாத, நவ-பாசிச சக்திகளும் தங்களுடைய வாய்ப்புக்களைத் தங்க வைத்துக்கொள்வதற்காகவும் தலைமையின் மறைக்கப்பட்ட துர் நிகழ்ச்சி நிரலை அமுல்படுத்துவதற்காகவும் தேசபக்தி என்ற வண்டியில் ஏறிக்கொள்கிறார்கள்.

இன்னும், பெரும்பான்மை சமூகத்தினரின் நியாயமான பலர், மேல்மட்டங்களில் உள்ள பலர் அறிந்தோ அறியாமலோ இந்த அலையில் அகப்பட்டுள்ளார்கள்.

இன்றைய இந்த வெற்றிக் களிப்புக் காட்சிகள், நாங்கள் ஏற்கனவே பார்த்த காட்சிகளை நினைவுபடுத்துவதாக அமைகின்றன. அதாவது, 1999-2000 ஆண்டுகளில் விடுதலைப்புலிகளின் “ஓயாத அலைகள்” நடவடிக்கைகள் ஏற்படுத்திய வெற்றிகளை புலம்பெயர் தமிழர்கள் எப்படிக் கொண்டாடினார்களோ அந்தக் காட்சிகளை நினைவூட்டுகின்றன.

தற்போது இருண்டு போயிருக்கின்ற மேகங்களின் நடுவே மின்னற் கீற்றாகத் தெரிவது, தற்போதைய வெற்றிக்களிப்பின் அலைகளுக்குள் இழுத்துச் செல்லப்படுவதைத் திட்டவட்டமாக நிராகரித்துக் கொண்டிருக்கின்ற பெரும்பான்மை சமூகத்தினரில் சிலர்தான். இவர்களில் சிலர் இலங்கை மக்களுக்கு முன்னால் பாரிய பொறுப்புகள் காத்திருக்கின்றன என்று உணர்கிறார்கள். அத்துடன் இந்தக் கொச்சையான வெற்றிக் கொண்டாட்டங்கள் எதிர்காலத்தில் இன்னும் பிரச்சினைகளை உருவாக்கக்கூடும் என்றும் உணருகிறார்கள்.

இப்படிப்பட்டவர்களில் ஒருவர்தான் உபாலி கூரே. இவர் நன்கு அறியப்பட்ட தொழிற்சங்கவாதியும் மனித உரிமைகள் செயற்பாட்டாளருமாவார். இலங்கை வர்த்தக சங்கத்தின் முன்னாள் உறுப்பினர். லங்கா சமசாஜக் கட்சியின் முக்கிய உறுப்பினராக இருந்து வெளியேறியவர். உபாலி கூரே ஒரு சட்டத்தரணி. தற்போது இங்கிலாந்தில் வசிக்கிறார். இவர் இலண்டன் பல்கலைக்கழகமொன்றில் சட்ட விரிவுரையாளராகப் பணிபுரிகிறார். அத்துடன் ஜனநாயத்திற்கும் நீதிக்குமான மையத்தில் தன்னை இணைத்துக் கொண்டுள்ளார்.

இவருடைய பெறாமகன் ஒருவரும் இந்த வெற்றிக் களியாட்டத்தில் சிக்குண்டவர். அவருடைய வீறாப்பான, வெற்றிக் களிப்பான அபிப்பிராயங்கள் இவருடைய FACEBOOK இல் இருந்ததைக் கண்ணுற்ற உபாலி அவருக்கு ஒரு கடிதம் எழுதினார். அக்கடிதத்தில் இப்படிக் குறிப்பிடுகின்றார்: “ஆதிக்கவாதக் காய்ச்சலினால் நீயும் பீடிக்கப்பட்டுப் போயிருக்கிறாய் என்பது கண்கூடாகத் தெரிகிறது” என்று. மேலும் இந்தப் பொருத்தமற்ற வெற்றிக் களிப்பு கொண்டு வரப்போகும் அபாயங்களைக் குறிப்பிட்டும் அக் கடிதத்தை உபாலி எழுதி இருந்தார்.

உபாலியின் கடிதத்தின் சாராம்சத்தை அவருடைய பெறாமகன் புரிந்துகொண்டு அவருக்கு நன்றி தெரிவித்துப் பதிலளித்ததோடு மட்டும் நிற்காமல் தன்னுடைய நண்பர்களுக்கும் இக் கடிதத்தைத் தெரியப்படுத்தி இருக்கிறார். சில நண்பர்களுடைய அபிப்பிராயத்தைத் தன்னால் மாற்ற முடிந்திருப்பது குறித்து மீண்டும் உபாலிக்கு அவர் நன்றி தெரிவிக்கின்றார்.

இந்தக் கடிதங்களை எனக்கு ஒரு நண்பர் அனுப்பி இருந்தார். இன்றைய இக்கட்டான காலகட்டத்தில் உபாலி கூரேயினால் சுட்டிக் காட்டப்பட்ட விடயங்கள் முக்கியமானதெனக் கருதியதால் அவற்றை ஏனையவர்களுக்கும் தெரியப்படுத்த வேண்டும் என்று எனக்குத் தோன்றியது.

இங்கு உபாலியினது கடிதம் முழுமையாகவும் அவருடைய பெறாமகனின் பதிலின் ஒரு பகுதியும் பிரசுரிக்கிறேன். அவருடைய பெறாமகன் அடையாளம் காட்டப்படவில்லை.

இது ஒரு ஆரோக்கியமான விவாதத்தைத் தூண்டும் என்றும் ஆக்கபூர்வமான கருத்துப் பரிமாற்றங்களை ஏற்படுத்தும் என்றும் நம்புகிறேன்.

DBS. JAYARAJ

-----------

உபாலி கூரேயின் கடிதம்

அன்புள்ள பெரிய மருமகனுக்கு

உன்னுடைய பெயரை இங்கு தவிர்த்திருக்கிறேன். ஏனெனில் இந்தக் கடிதத்தின் நோக்கம் உன்னைத் தொல்லைப்படுத்துவதோ அன்றி உன்னைச் சிறுமைப்படுத்துவதோ அல்ல. உன்னுடைய FACEBOOK இல் வெளியாகியிருந்த வீறாப்பும் வெற்றிக் களிப்பும் கொண்ட அபிப்பிராயங்கள் எனது கவனத்தை ஈர்த்தன. அவற்றை மீளவும் நான் இங்கு சொல்ல எண்ணவில்லை. ஆனால், விடுதலைப்புலிகள் மீதான இராணுவரீதியான வெற்றியைத் தொடருகின்ற ஆதிக்கவாதக் காய்ச்சலினால் நீயும் பீடிக்கப்பட்டிருக்கிறாய் என்பது வெளிப்படையாகத் தெரிகிறது. கடந்த சில மாதங்களாக இலங்கையில் நடந்த நிகழ்வுகள்பற்றி, உன்னைப் போன்ற கல்வியும் அறிவும் கொண்ட ஒரு இளைஞனிடம் இருந்து இதைவிட ஒரு விமர்சனப் பாங்கான பகுப்பாய்வை நான் எதிர்பார்த்திருந்திருக்கவே

  • கருத்துக்கள உறவுகள்

இவர்(திரு உபாலி கூரே) போன்றவர்களோடு நாம் தொடர்புகளைப் பேணி சிங்களவர்களிடையேயுள்ள நடுநிலையான சிந்தனையாளர்களையும் எம்மோடு ஏதாவது ஒரு தளத்தினூடாக இணைப்பது அவசியமானது.ஏனெனில் இன்றைய சூழலில் எம் தலைவரது கூற்றிற்கமைய அறிவினது செயற்பாட்டுக் களமாகப் புலம் மாறவேண்டும். இதற்காக ஒரு குழுவொன்றை அமைத்தால் கூடத் தப்பில்லை.குறிப்பாக பிரிட்டன் தமிழர் பேரவையானது ஒரு மைய அலகாகத் திகழ்வதால் அவர்கள் இது போன்ற விடயங்களையும் முன்னெடுப்பது பொருத்தமானது.

இதனூடாக ஒரு கருத்தியல் தளமொன்றைக் கட்டமைப்பதனூடாக எதிர்காலத்தில் பெரும் சிக்கல்களைக் கூட தளர்த்த முடியும் என எதிர்பார்க்கலாம்.

Edited by nochchi

  • தொடங்கியவர்

சிங்களவர்களிலும் மிக நல்லவர்கள் இருக்கிறார்கள்,நமது பிரச்சனைக்கு ஒரு காரணம் வட இலங்கையின் தமிழ் தேசிய வாதமும், தென் இலங்கையின் அதி தீவிர சிங்கள் தேசியவாதமும்தான்,இவைகளை களைய வேண்டும்,

தமிழர்களிலும்,சிங்களவர்களில

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.