Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சிறிலங்கா தொடர்பான தெளிவு எமக்கு இருந்தனால் ஐ.நா. வாக்கெடுப்பில் கலந்துகொள்ளவில்லை: யசூசி அகாசி

Featured Replies

சிறிலங்கா தொடர்பான தெளிவு எமக்கு இருந்தனால் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை சபை நடத்திய வாக்கெடுப்பில் நாம் கலந்துகொள்ளவில்லை என்று சிறிலங்காவுக்கான ஐப்பானிய சிறப்புத் தூதுவர் யசூசி அகாசி தெரிவித்துள்ளார்.

சிறிலங்காவுக்கு மூன்று நாள் பயணம் மேற்கொண்ட யசூசி அகாசி நேற்று வியாழக்கிழமை நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பின்போது மேலும் தெரிவித்துள்ளதாவது:

இனப்பிரச்சினைக்குத் தீர்வாக அரசியலமைப்பில் உள்ள 13 ஆவது திருத்தச் சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துவதற்கு அரச தலைவர் மகிந்த ராஜபக்ச உறுதியாக உள்ளார்.

இலங்கைக்கான சமாதானக் கட்டமைப்பு, புனர்வாழ்வு மற்றும் புனரமைப்பு தொடர்பிலான ஐப்பானிய பிரதிநிதி என்ற வகையில் எனது பயணம் பயன் உள்ளதாக அமைந்துள்ளது.

இதே தகைமையுடன் சிறிலங்காவுக்கான எனது பயணம் 18 ஆவதாகவுள்ளது. எனது பயணம் இரு நோக்கங்களைக் கொண்டிருந்தது.

ஒன்று மனித உரிமை நிலைமை குறித்துப் பார்வையிடுவது மற்றது எடுக்கப்பட்டு வருகின்ற அரசியல் மறுசீரமைப்பு குறித்து ஆராய்வதற்காகும்.

மனித உரிமை நிலை எனும் போது விடுதலைப் புலிகளுக்கும் சிறிலங்கா படையினருக்கும் இடையிலான மோதலின்போது இடம்பெயர்ந்து முகாம்களில் உள்ள மக்களின் நிலைமை குறித்து பார்வையிடுவதாகும்.

அதேபோன்று பிரச்சினைக்கு தீர்வாக முன்வைக்கப்படுவதற்கு எடுக்கப்படும் அரசியல் மறுசீரமைப்பின் நடவடிக்கை குறித்த அவதானிப்பதாகும்.

தடுப்பு முகாம்களில் உள்ள 60-வயதுக்கும் மேற்பட்டவர்கள் விடுவிக்கப்பட்டு வருகின்றனர். அத்துடன், யாழ்ப்பாணம் மற்றும் திருகோணமலையில் உள்ள இடம்பெயர்ந்தவர்களுக்கு தேவையான தங்குமிட வசதி செய்யப்பட்டு வருகின்றது.

தடுப்பு முகாம்களில் சில குறைபாடுகள் உள்ளன. நீர் வழங்கல் போதுமாகவுள்ள நிலையில் முழுமையாக உள்ளது எனக் கூற முடியாது. அதேபோன்று சுகாதார பராமரிப்பு தொடர்பில் வடக்கில் அடுத்த இரண்டு அல்லது மூன்று மாதங்களில் பருவ மழை தொடங்கி விடும் என்பதால் அதற்கு முன் அவை செய்யப்பட வேண்டும்.

தற்போதைய சூழ்நிலையில் அனைத்துலக நாடுகளுடன் சிறிலங்கா அரசாங்கம் புரிந்துணர்வை ஏற்படுத்துவது தேவையாகவுள்ளது.

இதற்கு அந்த நாடுகளுடன் சிறிலங்கா அரசாங்கம் கலந்துரையாடலை நடத்த வேண்டும்.

முக்கியமாக ஜனநாயகம், சமாதானம் நீதி மற்றும் செல்வச் செழிப்பை ஏற்படுத்த ஏனையவர்களின் உதவியும் ஒத்துழைப்பும் அவசியமாகவுள்ளது.

சிறிலங்காவின் இறைமை சுயாதிபத்தியத்தில் அவர்கள் தலையிடக்கூடாது.

அண்மையில் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை சபையில் சிறிலங்கா வெற்றி பெற்றதற்கு, அதில் உள்ள பல நாடுகள் ஆதவளித்ததே காரணமாகும்.

இந்நிலையில் எதிராக வாக்களித்த நாடுகளும் உள்ளன.

சிறிலங்கா தொடர்பில் ஒவ்வொரு நாடுகளுக்கும் பல்வேறுபட்ட கருத்துக்கள் உள்ளன.

இந்நிலையில் நிலைமை குறித்து கலந்துரையாடி தெளிவுபடுத்த வேண்டியுள்ளது.

சிறிலங்கா நிலைமை குறித்து எமக்கு தெளிவு இருந்ததனால் அதில் நாம் கலந்துகொள்ளவில்லை. இது தொடர்பாக நாம் சிறிலங்காவை புறம் தள்ளவில்லை. எமது நிலைப்பாட்டை சிறிலங்கா ஏற்றுள்ளது.

இந்த வருட இறுதிக்குள் 80 வீதமானவர்கள் மீளக் குடியமர்த்தப்படுவார்கள் என வெளிவிவகாரத்துறை அமைச்சர் ரோகித போகல்லாகம உறுதியளித்துள்ளார். நாம் மீள குடியேற்றத்துக்கு ஏதுவான நடவடிக்கைகளுக்கு உதவத் தயாராகவுள்ளோம்.

2003 ஆம் ஆண்டு பேச்சுவார்த்தையின் போது நாம் 4 பில்லியன் டொலரை அன்பளிப்பு செய்ய முன்வந்தோம். துரதிர்ஸ்டவசமாக புலிகள் இதனை புறக்கணித்தனர்.

நாம் சிறிலங்காவில் சமாதானம் ஏற்படுத்துவதற்கு உதவத் தயாராக உள்ளோம். நல்லிணம் மூலமே சமாதானத்தை அடைய முடியும் என்றார் அவர்.

புதினம்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.