Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சிறிலங்கா அரசுக்கு நேபாளம் ஆதரவு வழங்கியது கண்டனத்துக்குரியது: நேபாள மனித உரிமை அமைப்புக்கள்

Featured Replies

இன அழிப்பு மற்றும் போரியல் குற்றங்கள் தொடர்பான சுயாதீன விசாரணைகள் தேவை என ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் சபை மேற்கொண்ட சிறப்பு விவாதத்தில் நேபாள அரசாங்கம் சிறிலங்காவுக்கு ஆதரவாக செயற்பட்டது கண்டனத்திற்குரியது என நேபாள தேசிய மனித உரிமைகள் ஆணைக் குழு மற்றும் உரிமைகள் கண்காணிப்பகம் ஆகியன தமது அறிக்கையில் தெரிவித்துள்ளன.

இது தொடர்பாக அவற்றின் அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

இன அழிப்பு மற்றும் போரியல் குற்றங்கள் தொடர்பான சுயாதீன விசாரணைகள் தேவை என ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் சபை மேற்கொண்ட சிறப்பு விவாதத்தில் நேபாள அரசாங்கம் சிறிலங்காவுக்கு ஆதரவாக செயற்பட்டது வருந்ததக்கது.

நேபாளத்தின் இந்த நடவடிக்கை போரியல் குற்றம் தொடர்பாக விசாரணைகள் தேவை என ஐரோப்பிய ஒன்றியம் கொண்டுவந்த தீர்மானத்தை தோற்கடித்துள்ளது. ஓரு ஜனநாயக நாடு மனித உரிமைகளை நிலைநாட்ட தவறியதற்கு எதிரான குரலை இந்த நடவடிக்கை தடுத்துள்ளது.

சிறிலங்காவுக்கு நேபாளம் ஆதரவு வழங்கியது கண்டனத்துக்குரியது. ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை சபையின் தீர்மானத்திற்கு எதிராக நேபாளம் செயற்பட்டுள்ளது.

ஊடகத்துறையும் ஐக்கிய நாடுகள் சபையின் அதிகாரிகளும் இறுதி போர் நடைபெற்ற பகுதிக்கு அனுமதிக்கப்படாத போதும், அங்கு நடைபெற்ற வன்முறைகள் தொடர்பான விசாரணைகள் தேவை என்ற தீர்மானத்தை நேபாளம் முறியடித்துள்ளது.

மனித உரிமைகளுக்கு எதிரான நிலைப்பாட்டை எடுத்ததனால் நேபாளம் தவறிழைத்துள்ளது. இன அழிப்பு நடைபெற்றதாக அறிக்கைகள் வெளியாகிய நிலையில் சிறிலங்கா அரசாங்கம், சுயாதீன விசாரணைக் குழுவை நிராகரித்துள்ளதை நாம் புரிந்து கொள்ளவேண்டும். சிறிலங்கா அரசாங்கம் சில உண்மைகளை மறைக்க முற்படுகின்றது.

நேபாள அரசாங்கம் எதன் அடிப்படையில் சிறிலங்காவுக்கு ஆதரவுகளை வழங்கியது? அல்லது நேபாளத்தின் நிலைப்பாட்டிற்கான விளக்கம் என்ன? என்பது தொடர்பாக எமது அமைப்பும் அனைத்துலக மனித உரிமை அமைப்புக்களும் இணைந்து செயற்பாடுகளில் ஈடுபட்டு வருகின்றன என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதினம்

சிறிலங்காவுக்கு நேபாளம் ஆதரவு வழங்கியது கண்டனத்துக்குரியது. ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை சபையின் தீர்மானத்திற்கு எதிராக நேபாளம் செயற்பட்டுள்ளது

அப்பதான் உங்களுடைய அரசு உங்களின் மனித உரிமைகளை மீறும்பொழுது ,சிறிலங்கா நேபாள அரசுக்கு ஆதரவாக வாக்களிக்கும்

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கைக்கு நேபாளம் ஆதரவு:நேபாள மனித உரிமை அமைப்புக்கள் கண்டனம்

on 14-06-2009 04:41

Published in : செய்திகள், உலகம்

இன அழிப்பு மற்றும் போரியல் குற்றங்கள் தொடர்பான சுயாதீன விசாரணைகள் தேவை என ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் சபை மேற்கொண்ட சிறப்பு விவாதத்தில் நேபாள அரசாங்கம் சிறிலங்காவுக்கு ஆதரவாக செயற்பட்டது கண்டனத்திற்குரியது என நேபாள தேசிய மனித உரிமைகள் ஆணைக் குழு மற்றும் உரிமைகள் கண்காணிப்பகம் ஆகியன தமது அறிக்கையில் தெரிவித்துள்ளன. இது தொடர்பாக அவற்றின் அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது :

இன அழிப்பு மற்றும் போரியல் குற்றங்கள் தொடர்பான சுயாதீன விசாரணைகள் தேவை என ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் சபை மேற்கொண்ட சிறப்பு விவாதத்தில் நேபாள அரசாங்கம் சிறிலங்காவுக்கு ஆதரவாக செயற்பட்டது வருந்ததக்கது.

நேபாளத்தின் இந்த நடவடிக்கை போரியல் குற்றம் தொடர்பாக விசாரணைகள் தேவை என ஐரோப்பிய ஒன்றியம் கொண்டுவந்த தீர்மானத்தை தோற்கடித்துள்ளது. ஓரு ஜனநாயக நாடு மனித உரிமைகளை நிலைநாட்ட தவறியதற்கு எதிரான குரலை இந்த நடவடிக்கை தடுத்துள்ளது.

சிறிலங்காவுக்கு நேபாளம் ஆதரவு வழங்கியது கண்டனத்துக்குரியது. ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை சபையின் தீர்மானத்திற்கு எதிராக நேபாளம் செயற்பட்டுள்ளது.

ஊடகத்துறையும் ஐக்கிய நாடுகள் சபையின் அதிகாரிகளும் இறுதி போர் நடைபெற்ற பகுதிக்கு அனுமதிக்கப்படாத போதும், அங்கு நடைபெற்ற வன்முறைகள் தொடர்பான விசாரணைகள் தேவை என்ற தீர்மானத்தை நேபாளம் முறியடித்துள்ளது.

மனித உரிமைகளுக்கு எதிரான நிலைப்பாட்டை எடுத்ததனால் நேபாளம் தவறிழைத்துள்ளது. இன அழிப்பு நடைபெற்றதாக அறிக்கைகள் வெளியாகிய நிலையில் சிறிலங்கா அரசாங்கம், சுயாதீன விசாரணைக் குழுவை நிராகரித்துள்ளதை நாம் புரிந்து கொள்ளவேண்டும். சிறிலங்கா அரசாங்கம் சில உண்மைகளை மறைக்க முற்படுகின்றது.

நேபாள அரசாங்கம் எதன் அடிப்படையில் சிறிலங்காவுக்கு ஆதரவுகளை வழங்கியது? அல்லது நேபாளத்தின் நிலைப்பாட்டிற்கான விளக்கம் என்ன? என்பது தொடர்பாக எமது அமைப்பும் அனைத்துலக மனித உரிமை அமைப்புக்களும் இணைந்து செயற்பாடுகளில் ஈடுபட்டு வருகின்றன என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

TNC

Last update : 14-06-2009 04:41

http://www.adhikaalai.com/index.php?option...9&Itemid=52

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சிறிலங்காவிற்கு நேபாள அரசு தெரிவித்து வரும் ஆதரவு குறித்து, நேபாளத்தில் கண்டனம் எழுந்துள்ளது. நடந்து முடிந்துள்ள யுத்தத்தில் சிறிலங்கா அரசு மேற்கொண்டுள்ள யுத்தக் குற்றங்கள் தொடர்பாக, ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் சபை மேற்கொண்ட சிறப்பு விவாதத்தின் போது, சிறிலங்கா அரசுக்கு ஆதரவாக நேபாள அரசாங்கம் செயல்பட்டது கண்டனத்திற்குரியது என நேபாள தேசிய மனித உரிமைகள் ஆணைக் குழு மற்றும் உரிமைகள் கண்காணிப்பகம் ஆகியன தமது கண்டனங்களைத் தெரிவித்துள்ளன.

இது தொடர்பாக இவ்வமைப்புக்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில், தெரிவிக்கப்படுவதாவது:

போரியல் குற்றம் தொடர்பாக விசாரணைகள் தேவை என ஐரோப்பிய ஒன்றியம் கொண்டுவந்த தீர்மானத்தை தோற்கடிக்க நேபாளம் உதவியுள்ளது. இது , ஒரு ஜனநாயக நாடு மனித உரிமைகளை நிலைநாட்ட தவறியதற்கு எதிரான குரலை ஒடுக்கும் செயலாகும். சிறிலங்காவுக்கு நேபாளம் ஆதரவு வழங்கியது கண்டனத்துக்குரியது.

இது உண்மையில் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை சபையின் தீர்மானத்திற்கு எதிராக நேபாளம் செயற்பட்டுள்ளது என்றே கருதவேண்டியுள்ளது. இது குறித்து மேலும் அவ்வறிக்கையில் தெரிவிக்கப்டும் போது, ஊடகத்துறையும் ஐக்கிய நாடுகள் சபையின் அதிகாரிகளும் இறுதி போர் நடைபெற்ற பகுதிக்கு அனுமதிக்கப்படாத போதும், அங்கு நடைபெற்ற வன்முறைகள் தொடர்பான விசாரணைகள் தேவை என்ற தீர்மானம் தோற்கடிக்கப்ட்டிருக்கிறது.

இத்தகைய மனித உரிமைகளுக்கு எதிரான செயற்பாட்டை ஆதரித்துள்ளமையால், நேபாளம் தவறிழைத்துள்ளது. இன அழிப்பு நடைபெற்றதாக அறிக்கைகள் வெளியாகிய நிலையில் சிறிலங்கா அரசாங்கம், சுயாதீன விசாரணைக் குழுவை நிராகரித்துள்ளதை நாம் புரிந்து கொள்ளவேண்டும். சிறிலங்கா அரசாங்கம் சில உண்மைகளை மறைக்க முற்படுகின்றது என்பது இதன் மூலம் தெளிவாகின்றது.

இந்நிலையில், நேபாள அரசாங்கம் எதன் அடிப்படையில் சிறிலங்காவுக்கு ஆதரவுகளை வழங்கியது? அல்லது நேபாளத்தின் நிலைப்பாட்டிற்கான விளக்கம் என்ன? என்பது தொடர்பாக எமது அமைப்பும் அனைத்துலக மனித உரிமை அமைப்புக்களும் இணைந்து செயற்பாடுகளில் ஈடுபட்டு வருகின்றன என அவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன.

http://ww1.4tamilmedia.com/index.php/2009-...rt-human-rights

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.