Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பௌத்த மதத்தின் பெயரிலான கருணை யுத்தம் நடத்துவது எப்படி என்று கற்றுக்கொள்ளுங்கள்

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பௌத்த மதத்தின் பெயரிலான கருணை யுத்தம் நடத்துவது எப்படி என்று கற்றுக்கொள்ளுங்கள் ‐ குளோபல் தமிழ்ச் செய்திகளிற்காக றட்ணா:

இலங்கையில் நடைப்பெற்று முடிந்த யுத்தம் என்ற பெயரிலான மாபெரும் மனித அவலத்தினை சிங்கள சமூகம் இன்னும் மனிதாபிமான யுத்தமாகவே பார்க்கின்றது. தமிழ் மக்கள் ஆயிரக்கணக்கில் கொல்லப்பட்டும், அவயங்களை இழந்தும் அகதிகளாக தவிக்கவும் காரணமாக இந்த யுத்தம் மனிதாபிமான யுத்தம் என்று தொடர்ச்சியாக வலியுறுத்தி அதனை சிங்கள மக்கள் மத்தியில் மென்மேலும் திடமாக நம்பவைக்க சிங்கள ஊடகங்கள் பெரும் பங்காற்றுகின்றன.

இன்றைய லங்காதீப பத்திரிகையில் (18) இந்த அரசாங்கத்தின் பங்காளிக் கட்சியான ஹெல உறுமய கட்சியின் முக்கியஸ்தரான உதய கம்மம்பில்ல, இந்த கொடூர யுத்தத்தினை மனிதாபிமான யுத்தமாக நிரூபணம் செய்து ஒரு பத்தியொன்றினை எழுதியிருக்கின்றார். அதன் சுருக்கவடிவ தமிழாக்கத்தினை வாசகர்களுக்காக தருகின்றோம். கருணை யுத்தம் என்று இப்பத்திக்கு தலைப்பிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

"நான் இராணுவக் கட்டுப்பாட்டு பகுதிக்குள் ஓடி வரும் பொழுது மண் குழிக்குள் விழுந்து விட்டேன். நான் அதிலிருந்து மீண்டு வர பெரும் பாடுப்பட்டுக் கொண்டிருந்தேன். அப்பொழுது தூரத்தில் நின்று கொண்டிருந்த படையினர் தாத்தா கலவரப்படாமல் அப்படியே இருங்கள் நாங்கள் வந்து உதவுகின்றோம் என்று கூறினர். அதனைக் கேட்டவுடன் என் கண்கள் என்னை அறியாமலே கலங்கின." புலிகள் அமைப்பின் ஜோர்ஜ் மாஸ்டர் தான் இவ்வாறு கூறினார். அவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் உத்தியோகபூர்வ உரைப்பெயர்ப்பாளர்.

பிரபாகரன் தமிழில் எதைக் கூறினாலும், அதற்கு உப்பு புளி தடவி ஆங்கிலத்திலோ சிங்களத்திலோ கூறுவது தான் இவரது வேலை. படையினர் பற்றி அவர் இதுவரை கூறிய பொய்ப் புனைக் கதைகள் மேற்கு நாடுகளின் கண்களை கலங்கச் செய்திருக்கலாம். எனினும் படையினர் இறுதியில் அவருக்கு செய்த உதவியினால் அவரின் கண்கள் கலங்கி விட்டன. மேற்கத்தேய நாடுகளினால் தோற்கடிக்க முடியாத பயங்கரவாதத்தினை எப்படி இந்த சிறிய வறிய நாடு தோற்கடித்தது என்ற விடயத்தினை ஆராயும் போது தான் ஜோர்ஜ் மாஸ்டரின் கதை இங்கு முக்கியம் பெறுகின்றது.

அப்பாவி தமிழ் மக்களை புலிகளிடம் இருந்து காப்பாற்றும் நடவடிக்கை மூன்று ஆண்டுகளில் நிறைவு பெற்று விட்டது. எனினும் இந்த காலகட்டத்தில் பல நாடுகள் யுத்தத்தில் ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றன. 2001ம் ஆண்டில் ஆரம்பமான தாலிபானுக்கு எதிரான ஆப்கானிஸ்தான் யுத்த்தினை இதற்கு உதாரணம் கூற முடியும். எனினும் வறிய நாடான இலங்கை மூன்றாண்டுகளில் உலகின் மிகவும் பயங்கரமான பயங்கரவாத இயக்கத்தினை அழித்து விட்டுள்ள போதிலும், எட்டு வருடங்களுக்கு மேலாக பலம் வாய்ந்த மேற்கத்தேய நாடுகள் தாலிபான்களுக்கு எதிராக போராடி வருகின்றன.

இந்த வெற்றி நிலையை இலங்கை எய்தியது எப்படி? அதற்கு பிரதான காரணம், இலங்கையில் நிலவும் பௌத்த யுத்த நடைமுறைகளாகும். சிங்களவர்கள் பேராசை கொண்டு எந்தவொரு நாட்டையும் கைப்பற்ற இது வரை முனைந்ததில்லை. இவ்வாறான செயலை திருட்டு என்றே அவர்கள் கருதினார்கள். அதன் படி மேற்கத்தேய நாடுகள் போற்றிப் புகழும் சீசர், அலெக்சாண்டர், நெப்போலியன் ஆகியோர் திருடர்களே. அவர்களிடம் வீரம் இல்லை. பேராசையே இருந்தது. இதனால் மக்களுக்கு பேரழிவு ஏற்பட்டது.

வரலாறு முழுவதும் சிங்களவர்கள் ஆக்கிரமிப்பாளர்களுக்கு எதிராகவே போராடியுள்ளனர். பௌத்த நல்லெண்ணங்கள் காரணமாகவே நாம் இந்த யுத்த வெற்றியினை அடைந்துள்ளோம். புலிகளை அழித்து பழிவாங்கும் எண்ணத்துடன் படையினர் இந்த யுத்த நடவடிக்கையினை ஆரம்பிக்கவில்லை. மக்கள் மீதிருந்த பெரும் கருணையே இதற்கு காரணமாக அமைந்தது. மாவிலாறு வெற்றியின் பின்னர் அப்பாவி தமிழ் மக்களைக் காப்பற்ற படை நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டன. மாறாக இராணுவத்தளபதிக்கோ, பாதுகாப்பு செயலருக்கோ எதிராக புலிகள் மேற்கொண்ட தற்கொலைத் தாக்குதலுக்கு பழிவாங்கும் நோக்குடன் அல்ல. இந்த படை நடவடிக்கைக்கு விடுதலை என்றோ ஜயசிக்குறு என்றோ பெயர் சூட்டவில்லை. மாறாக மனிதாபிமான நடவடிக்கை என்றே பெயர் சூட்டப்பட்டது.

முள்ளில் விழுந்த சேலையை எடுப்பது போல் தான் எமது படையினர் புலிகளிடமிருந்து மக்களை மிக மென்மையாகக் கையாண்டு காப்பாற்றினர். பொது மக்களை புலிகளிடமிருந்து காப்பாற்றிய பின்னர் அவர்கள் அடுத்த படை நடவடிக்கையைப் பற்றி யோசிக்காமல் அவர்களின் நலன்புரி விடயங்கள் பற்றியே யோசித்தனர். குழந்தைகளைப் பராமரிக்க பெண் சிப்பாய்கள் நடவடிக்கை எடுத்தனர். வயோதிபர்களுக்கு படையினர் பிள்ளைகளாக மாறினர். இவையெல்லாம் எங்கள் ஊடகங்களில் செய்திகளாகின. ஆனால் துரதிருஷ்டவசமாக மேற்கத்யே ஊடகங்களுக்கு அவை செய்தியாக தெரியவில்லை.

பொதுமக்களைப் பாதுகாக்க படையினர் தமது உயிரை தியாகம் செய்தனர். புலிகள் மக்களைக் கேடயமாக்கிக் கொண்டதனால் கடந்த ஏப்ரல் மாதம் முதல் படையினரால் கனரக ஆயுதங்களைக் கையாள முடியவில்லை. பொறுமையிழந்து படையினர் புலிகளின் தாக்குதலுக்கு பதில் தாக்குதல் நடத்தியிருந்தால் ஆயிரக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டிருப்பார்கள். அதனால் சர்வதேச நாடுகளின் நேரடித் தலையீடுகள் ஏற்பட வாய்ப்பு ஏற்பட்டிருக்கும். புலிகளின் அந்த எதிர்பார்ப்பு படையினரின் பொறுமையினால் தவிடுபொடியானது.

இந்த தாக்குதலில் பல படையினர் கொல்லப்பட்டாலும் படையினர் பதில் தாக்குதல் நடத்தவில்லை. இதனால் உண்மையில் புலிகள் அல்ல படையினரே பாதுகாவலர்கள் என்பதனை தமிழ் மக்கள் நன்கு உணர்ந்து கொண்டனர். இதனால் உயிரைப் பணயம் வைத்து மக்கள் படையினரிடம் வந்தனர். இதுவே புலிகளின் முடிவின் ஆரம்பமாகியது.

ஆப்கானிஸ்தானில் பொதுமக்கள் இழப்புக்களை பொருட்படுத்தாது மேற்கத்தேய நாடுகள் தாக்குதல் தொடுக்கின்றன. அவர்கள் பொதுமக்கள் மனதை வெல்லுவதை விடுத்து அவர்களை அச்சுறுத்துகின்றனர். பௌத்த யுத்த நடைமுறையினால் போஷிக்கப்பட்ட எம்மிடமிருந்து கற்றுக் கொள்ள பல யுத்த உபாயங்கள் இருப்பதனை இப்பொழுதாவது மேற்கத்தேய நாடுகள் உணர்ந்து கொள்ள வேண்டும்.

www.globaltamilnews.net

அதுதான் சிலர் புத்தம் சரணம் என்று கொண்டுதிரியினம் போல.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஆண்டவா...... முடியல....

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஆண்டவா...... முடியல....

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.