Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வணங்காமண் கப்பல் நடுக்கடலில் தவிப்பு - செஞ்சிலுவை சங்கம் உதவி

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

வணங்காமண் கப்பல் நடுக்கடலில் தவிப்பு - செஞ்சிலுவை சங்கம் உதவி

on 28-06-2009 21:20

Published in : செய்திகள், இந்தியா

சென்னை துறைமுகத்திற்கு வரவோ, இலங்கை செல்லவோ இசைவு இல்லை - வணங்காமண் கப்பல் நடுக்கடலில் தவிப்பு - செஞ்சிலுவை சங்க உதவியுடன் பணியாளர்களுக்கு உதவ நடவடிக்கை - இலங்கையில் உள்ள பாதிக்கப்பட்ட தமிழகளுக்கு இடர் உதவிப் பொருட்களை ஏற்றிக் கொண்டு வந்த வணங்காமண் கப்பல் 17-ஆவது நாளாக நேற்றும் சென்னை துயைமுகத்துக்கு அப்பால் நடுக்கடலில் தத்தளித்துக் கொண்டு இருக்கிறது. இந்த கப்பலில் உள்ள பொருட்களை இலங்கையில் இறக்குவதற்கு அனுமதி கோரி மனிதம் அறக்கட்டளை நிருவாகிகள் தில்லியில் செஞ்சிலுவைச் சங்க அமைப்பினருடன் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.

இலங்கையில் போரால் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு வழங்குவதற்காக ஐரோப்பாவைச் சேர்ந்த தமிழ் மக்கள் 884 மெட்ரிக் டன் எடையுள்ள மருந்து, உணவு, துணிகள் போன்றவற்றை கேப்டன் அலி என்ற கப்பலில் ஏற்றி இலங்கைக்கு அனுப்பி வைத்தனர். கப்பல் தலைவர், மாலுமிகள், சிறப்புப் பணிணானர்கள் உட்பட 13 பேருடன் இந்தக் கப்பல் இம்மாத தொடக்கத்தில் இலங்ககை;குச் சென்றது. ஆனால், இனவெறி பிடித்த சிங்கள அரசு அந்தக் கப்பலில் உள்ள பொருட்களை இறக்கி அப்பாவித் தமிழ் மக்களுக்கு வழங்க மறுத்து விட்டது. இலங்iகியில் இருந்து திருப்பி அனுப்பப்பட்ட வணங்காமண் கப்பல் கடந்த 12ஆம் தேதி இந்தியக் கடல்; எல்லைக்குள் வந்தது. சென்னை துறைமுகத்துக்குள் கப்பலைக்கொண்டுவர துறைமுக அதிகாரிகள் மறுத்து விட்டனர். இதனால் துறைமுகத்தில் இருந்து 10 கடல் மைல் தொலைவில் இக்கப்பல் நிறுத்தப்பட்டுள்ளது. அரசில் கட்சிகள் மற்றும் மனிதநேய அமைப்புகள் கண்டனக்குரல் எழுப்பியபிறகே இந்த கப்பலில் இருப்பவர்களுக்கு தேவையான தண்ணீர் மற்றும் குடி நீரை துறைமுக அதிகாரிகள் அனுப்பி வைத்தனர்.

இக்கப்பலில் உள்ள பொருட்களை மீண்டும் இலங்கைக்கு அனுப்பி வைக்க அனுமதி கிடைத்துவிடும் என்று சட்டப்போரவையில் தமிழக முதலமைச்சர் கலைஞர் நம்பிக்கையோடு வாக்குறுதியளித்தார். ஆனால் இதுவரையிலும் அந்த அனுமதி கிடைக்கவில்லை.

இந்நிலையில் கப்பலில் உள்ள பொருட்களை மீண்டும் இலங்கைக்குக் கொண்டு சென்று இறக்க அனுமதிக்க வேண்டும். அல்லது சென்னை துறைமுகத்தில் இந்தப் பொருட்களை இறக்கிவிட்டு கப்பலை திரும்பிச் செல்ல அனுமதிக்க வேண்டும் என்று கோரி மனிதம் அறக்கட்டளை செயல் இயக்குநர் அக்னி சுப்பிரமணியம் நேற்று புதுதில்லியில் செஞ்சிலுவைச் சங்க (இந்திய பிரிவு) தலைமைச் செயலாளர் அகர்வாலைச் சந்தித்து மனு அளித்தார். இந்த விசயத்தில் செஞ்சிலுவைச் சங்கம் தலையிட்டு உடனடி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். கப்பலில் சிக்கித் தவிப்பவர்களுக்கு தேவையான வசதிகளை செய்து கொடுக்க ஏற்பாடு செய்ய வேண்டும் என்றும் அக்னி சுப்பிரமணியம் கேட்டுக் கொண்டுள்ளார்.

செஞ்சிலுவைச் சங்க உதவியோடு வெளியுறவுத்துறை, கப்பல் போக்குவரத்துத்துறை பன்னாட்டு செஞ்சிலுவைச் சங்கம் ஆகியவற்றின் உயரதிகாரிகளைச் சந்தித்து, இந்த விவகாரத்தில் உடனடி நடவடிக்கை மேற்கொள்ள வலியுறுத்தப் போவதாகவும் அவர் கூறினார்.

சித்திரவதை: இதனிடையே வணங்காமண் கப்பலை ஆய்வு செய்த தமிழக உளவுத்துறையினர் சில நாட்களுக்கு முன்பு மனிதம் அறக்கட்டளையின் நிருவாகி ஒருவரை விசாரணைக்காக அழைத்துச் சென்றுள்ளனர். பின்னர் அவரை கமுக்க இடத்தில் அடைத்து வைத்து விசாரணை நடத்தினார்கள். அப்போது சித்திரவதை செய்துள்ளனர் என்று மனிதம் அறக்கட்டளையில் செயலாற்றி வரும் ஒருவர் கூறினார்.

செவ்வாய்க்கிழமை சென்னை வரும் : சென்னை துறைமுகத்திலிருந்து 10 கடல் மைல் தொலைவில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள வணங்காமண் கப்பல் ஓரிரு நாட்களில் சென்னை துறை முகத்திற்கு வந்து சேரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்குத் தேவையான ஆவணங்களை தயாரிக்கும் பணிகள் நடைபெற்று வருவதாகவும், அப்பணிகள் முடிவடைய இன்னும் ஓரிரு நாட்கள் ஆகும் என்றும் வணங்காமண் கப்பலுமக்குச் சொந்தமான இம்பீரியல் ஷிப்பிங் நிறுவத்தின் சென்னை அதிகாரி கிருட்டினமூர்த்தி தெரிவித்துள்ளார். இப்பணிகள் முடிவடைந்து வரும் செவ்வாய்க்கிழமையன்று வணங்காமண் கப்பல் சென்னை துறைமுகம் திரும்ப வாய்பிருப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

- தமிழ் ஓசை நாளிதல் - 28.06.2009

TNC

Last update : 28-06-2009 21:20

http://www.adhikaalai.com/index.php?option...6&Itemid=52

  • கருத்துக்கள உறவுகள்

கப்டன் அலி கப்பலின் சரக்குகள் சென்னையில் தரையிறக்கப்படவுள்ளது :

கப்டன் அலி கப்பலின் சரக்குகள் சென்னையில் தரையிறக்கப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

சென்னையில் தரையிறக்கப்பட உள்ள கப்படன் அலி கப்பல் நிவாரணப் பொருட்கள், இந்திய சர்வதேச செஞ்சிலுவைச் சங்க கிளையின் ஊடாக இலங்கைக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளது.

நிவாரணப் பொருட்கள் இந்திய செஞ்சிலுவைச் சங்கம் ஊடாக இலங்கை அகதிகளுக்கு அனுப்பி வைக்கப்படும் என கப்பலின் பேச்சாளர் அர்ஜூனன் எதிர்வீரசிங்கம் தெரிவித்துள்ளார்.

நிவாரணப் பொருள் கப்பல் இலங்கை கடற்பரப்பிற்குள் அனுமதிக்கப்படும் என்ற உத்தரவாதம் அளிக்கப்படாமையினால் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்திய இலங்கை அரசாங்கங்களின் நிபந்தனைகளுக்கு கட்டுப்பட்டு நிவாரணப் பொருட்களை வழங்கத் தயார் என கப்டன் அலி கப்பல் நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர்.

கொல்கொத்தாவிலிருந்து கப்பலொன்று தருவிக்கப்பட்டு அந்த கப்பலின் ஊடாக இந்த நிவாரணப் பொருட்கள் அனுப்பி வைக்கப்படவுள்ளன.

http://www.globaltamilnews.net/tamil_news....11273&cat=1

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.