Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

அச்சுறுத்தலையடுத்து 'உதயன்' அலுவலகத்துக்கு இராணுவப் பாதுகாப்பு

Featured Replies

யாழ்ப்பாணத்தில் இருந்து வெளிவரும் 'உதயன்' நாளேட்டில் பணிபுரியும் அனைவரும் இன்று 30 ஆம் நாளுடன் அங்கிருந்து வெளியேறிவிட வேண்டும் எனவும் நாளேடுகளின் முகவர்கள் இன்றுடன் 'உதயன்' நாளேட்டினை விற்பனை செய்வதை நிறுத்திக்கொள்ள வேண்டும் எனவும் எச்சரிக்கப்பட்டதையடுத்து 'உதயன்' நாளே அலுவலகத்துக்கு இராணுவப் பாதுகாப்பு போடப்பட்டிருப்பதாக யாழ்ப்பாணத்தில் இருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன.

குடாநாட்டில் உள்ள நாளேட்டு விற்பனையாளர்களுக்கு கடந்த சனிக்கிழமை காலை விநியோகிக்கப்பட்ட துண்டுப் பிரசுரங்களில் 'உதயன்' நாளேடு தொடர்ந்தும் பயங்கரவாதத்துக்கே துணை போவதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

'நாட்டைக் காக்கும் தமிழர் கூட்டணி' என்ற பெயரிலேயே இந்தப் பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டுள்ளது.

பயங்கரவாதத்துக்கு 'உதயன்' நாளேடு தொடர்ந்தும் துணைபுரிவதால் அதனைப் புறக்கணிக்குமாறு மக்களிடம் கேட்டுள்ள இந்த அமைப்பு, 'உதயன்' நிறுவனத்தில் பணிபுரியும் அனைவரும் இன்று 30 ஆம் நாளுக்கு முன்னதாக அதில் இருந்து வெளியேறிவிட வேண்டும் எனவும் எச்சரித்திருக்கின்றது. இல்லை எனில் பாரிய விளைவுகளை எதிர்கொள்ள வேண்டிவரும் எனவும் அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த எச்சரிக்கையையடுத்து 'உதயன்' நிர்வாகத்தினர் காவல்துறை, இராணுவம் மற்றும் அரசாங்கத்திடம் இது தொடர்பாக முறைப்பாடு செய்திருக்கின்றனர். இந்த முறைப்பாட்டைத் தொடர்ந்தே இராணுவத்தினர் 'உதயன்' நாளேட்டின் அலுவலகத்துக்குப் பாதுகாப்புப் பணியில் இப்போது ஈடுபடுத்தப்பட்டிருப்பதாக குடாநாட்டுச் செய்திகள் தெரிவிக்கின்றன.

இராணுவப் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருக்கின்ற போதிலும் அச்சம் காரணமாக அங்கு பணிபுரியும் பல பணியாளர்களும் ஊடகவியலாளர்களும் கடந்த இரண்டு நாட்களாகப் பணிக்கு வரவில்லை என செய்திகள் தெரிவிக்கின்றன.

இதன் காரணமாக பலத்த சிரமங்களின் மத்தியிலேயே கடந்த இரண்டு நாட்களாக நாளேடுகளை தாம் வெளியிட்டதாக 'உதயன்' நிர்வாகத்தினர் தெரிவித்திருக்கின்றனர்.

'உதயன்' நாளேடு அச்சுறுத்தலுக்குள்ளாவது இதுதான் முதல் தடவையல்ல. 2006 ஆம் ஆண்டு 'உதயன்' அலுவலகத்துக்குள் அத்துமீறிப் பிரவேசித்த ஆயுதக்குழு ஒன்றினால் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூடு மற்றும் தாக்குதல்களில் அங்கு பணிபுரியும் இருவர் கொல்லப்பட்டிருந்தார்கள். பலர் படுகாயமடைந்தனர். அலுவலகமும் பலத்த சேதமடைந்தது.

கடந்த வாரம் குடாநாட்டு நாளேடுகள் மூன்றும் வீதியில் வைத்து எரியூட்டப்பட்ட சம்பவத்தையடுத்தே இப்போது 'உதயன்' நிறுவனத்துக்கு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது. குடாநாட்டில் உருவாகியிருக்கும் இந்த அச்சநிலை குறித்து ஊடக அமைப்புக்கள் பெரும் அதிர்ச்சியடைந்திருக்கின்றன.

நாடு கடந்த அரசாங்கம் ஒன்றை அமைப்பதற்கு விடுதலைப் புலிகள் மேற்கொண்டுள்ள முயற்சிகளைக் கண்டிக்கும் அறிக்கை ஒன்றை இந்த வார தொடக்கத்தில் 'நாட்டைக் காக்கும் தமிழர் கூட்டணி' என்ற இந்த அமைப்பு யாழ்ப்பாணத்தில் இருந்து வெளிவரும் நாளேடுகளுக்கு கொடுத்திருந்தது.

இருந்தபோதிலும் யாழ். நாளேடுகள் எதுவும் இதனைப் வெளியிடாததால் ஆத்திரமடைந்த இந்த அமைப்பினர் நாளேடுகளின் ஆசிரியர்களையும் கடுமையாக எச்சரித்திருந்தனர். அந்தப் பின்னணியிலேயே குடாநாட்டு ஏடுகளின் பிரதிகள் வீதிகளில் வைத்து எரிக்கப்பட்டன.

இப்போது அதே குறிப்பிட்ட அமைப்பினரால் 'உதயன்' நாளேட்டுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டிருப்பது குடாநாட்டு ஊடகத்துறை சார்ந்தவர்களிடையே பெரும் பீதியை ஏற்படுத்தியிருக்கின்றது.

புதினம்

  • கருத்துக்கள உறவுகள்

29/06/2009, 13:31 [யாழ் செய்தியாளர் சிறீதரன்]

உதயன் பத்திரிகைக்கு மிரட்டல் விடுப்பவர்கள் படைப் புலனாய்வாளர்களே

யாழ் குடாநாட்டில் இருந்து வெளிவரும் உதயன் பத்திரிகைக்கு “நாட்டை காக்கும் தமிழர் கூட்டமைப்பு” என்ற பெயரில் கொலை அச்சுறுத்தல் விடுத்து சிறீலங்கா படைப் புலனாய்வாளர்களால் துண்டுப்பிரசுரம் ஒன்று அனுப்பி வைக்கப்பட்டிருந்தது.

உதயன் பணியாளர்கள், செய்தி ஆசிரியர்கள் மற்றும் பிராந்திய செய்தி முகவர்கள் அனைவரும் வரும் 30ஆம் நாளுக்கு முன்னர் அனைத்து பதவிகளிலும் இருந்து விலக வேண்டும் எனவும், தவறினால் மரண தண்டனை வழங்கப்படும் எனவும் இதில் எச்சரிக்கப்பட்டுள்ளது.

யாழ் தேர்தலில் போட்டியிடும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு எதிராக வெளியிடப்பட்ட துண்டு பிரசுரம் ஒன்றை, யாழ்ப்பாணத்தில் இருந்து வெளியாகும் அனைத்து பத்திரிகைகளும் வெளியிட மறுத்திருந்த பின்னணில் கொலை அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.

ஊரெழுவில் தலைமை முகாம் கொண்டு இயங்கும், சிறீலங்கா படைப் புலனாய்வாளர்களே “நாட்டை காக்கும் தமிழர் கூட்டமைப்பு” என்ற பெயரில் இதுவரை நாட்களும் யாழ்ப்பாணத்தில் அறிக்கை வெளியிட்டு வந்தனர்.

தமிழ் இளைஞர்கள் மூலம் துப்பாக்கி முனையில் பத்திரிகைகள் மிரட்டப்பட்டு, சிறீலங்கா படையினரது அனாமதேய துண்டு பிரசுரங்கள் வெளியிடப்பட்டு வந்தன.

முன்னைய காலங்களில் படைப் புலனாய்வாளர்களின் ஏவல்களை செய்து வந்த சுகந்தீபன் என்னும் புலனாய்வாளர் யாழ் மருந்துவ பீடத்துக்கு அண்மையில் வைத்து கடந்த வருடம் சுட்டுக் கொல்லப்பட்டதை தொடர்ந்து, படைப் புலனாய்வாளர்களின் செயற்பாடுகள் சற்று குறைவடைந்திருந்தன.

ஆரம்பத்தில் யாழ் பாடசாலை மாணவர்கள், ஆசிரியர், மற்றும் அதிபர்களின் பெயர்களைக் குறிப்பட்டு, துண்டு பிரசுரம் வெளியிட்டதுடன், சில மாணவர்கள் கடத்திச் செல்லப்பட்டதுடன், மேலும் பலர் படுகொலை செய்யப்பட்டிருந்தனர்.

இதனைத் தொடர்ந்து பல்கலைக்கழக மற்றும் பாடசாலை மாணவர்கள் சிலரை இந்த அமைப்பின் பெயரால் சிறீலங்கா படைப்பு புலனாய்வாளர்கள் தொடர்ந்து அச்சுறுத்தி வந்திருந்தனர்.

இந்த நடவடிக்கைகளை ரஞ்சித் என்னும் யாழ் நகர படைத் தலைமையக படைப்புலனாய்வு அதிகாரியே வழி நடத்தி வருவதுடன், துணைப்படை ஈ.பி.டி.பி குழுவினருக்கும் நெருங்கிய தொடர்பு இருக்கின்றமை சுட்டிக்காட்டத்தக்கது.

http://www.pathivu.com/news/2439/54//d,view.aspx

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.