Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

[b]என் இனிய தமிழீழ மக்களே...[/b]

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

என் இனிய தமிழீழ மக்களே...

நமக்கு இது போராத காலம் இல்லை. இது நமக்கு புலிகள் கொடுத்துள்ள வைப்பக கருதுங்கள்.

கிட்டத்தட்ட முப்பது ஆண்டு காலம் புலிகள் நம்மை ஆயுதப் போராட்டம் மூலம் நம் தமிழீழ தாயகம் கனவை நிறைவேற்ற போராடினார்கள்... தொடர்ச்சியான போராட்டங்களால் சிங்களவனை செயலிழக்க செய்து வந்தது. காலத்தின் ஓட்டத்தில் அந்தப் போராட்டத்திற்கும் ஒரு ஒய்வு தேவைப்பட்டது. அதலால் புலிகள் போராட்டத்தை நமது கைக்கு கைமாற்றி சென்று உள்ளது..

இப்போது நாம் என்ன செய்ய வேண்டும்...

இது நமக்கான போராட்டம் , இது புலிகளால் முன்னெடுக்கப்பட்ட போராட்டம் , இதை நாம் தொடராவிட்டால் வேறு யார் நமக்காக செய்ய முடியும். நாம் இனி குறை சொல்லவோ , இறந்து போன நம் உறவுகளுக்காக கவலைப் படவோ நேரமில்லை. இப்பொழுது அமைய்தி வழியில் போராடுவோம்... இந்தப் போராட்டத்தின் மூலம் உலக சமுதாயங்களை (சர்வதேசத்தை) நம்மை நோக்கி திரும்பி பார்க்க வைப்போம்...

விடுதலைப்புலிகள் இயக்கம் தீவிரவாத இயக்கமல்ல நமது போராட்டத்தின் ஒரு அங்கம் என்பதை உலக மக்களளுக்கு புரிய வைப்போம்(மிகவும் கவனமாக ஏனெனில் நமக்கு எதிரிகள் அதிகம் மற்றும் விழிப்போடு இருக்கிறான்)...

இப்பொழுது நாம் உறுதி எடுப்போம்...

" அனைவரும் காலவரையற்ற உள்ளிருப்பு போராட்டங்கள், உண்ணாவிரதப்போரட்டங்கள் (தனியாக அல்ல ஒரு படையாக), அமைதி வழி ஊர்வலங்கள் என விடாது தொடருவோம்...(எக்காரணம் கொண்டும் எந்தவிதமான குழப்பங்களுக்கோ, குழப்புபவர்களின் சூழ்ச்சிகளுக்கோ செவி சாய்க்காதீர்கள் )

புலிகள் ஒண்ணும் சும்மா சாதாரணமா வெற்றிகளை அடயல. தொடர்ச்சியான போராட்டங்களும், முன்னெடுப்புகளும் தான் அவர்களின் வெற்றியை தீர்மானித்தன.

இது நம்ம கையில் போராட்டம், நம்மதான் போராடணும்... தொடர்ந்து போராடணும்... நமது தலைவரின் ஓயாத அலைகள் வெற்றி பெற்றது நமது நினைவில் இருக்க வேண்டும்..."

ஒண்ணா போராடுவோம்... ஒரேத் தீர்வு தமிழீழ தாயகம் அடைவோம்...

முற்போக்கு சிந்தனையாளன்.

அறிவு என்ற ஆயுதத்தை கையில் எடுப்போம், தொடர்ந்து போராடுவோம்

  • கருத்துக்கள உறவுகள்

உங்கள் கருத்தை வரவேற்கின்றேன்.

இனவெறிச் சிங்களவனை நாம் "மோடய" என அவனது மொழியிலேயே விழித்தாலும் அது அவனுக்குப் புரிந்தும் புரியாததுபோல் இருந்து, தனது இனத்தின் கொள்கை முன்னெடுப்புக்களுக்கும் எதிர்கலத் திட்டமிடலுக்கும் ஓர் அறிவாளிகள் கூட்டத்தினை உருவாக்கி, அவற்றைக் கண்காணிப்பதற்கு இனப்பற்று நிறைந்த பிக்குக்களை நியமித்து எவரை, எத்தருணத்தில் ஆட்சியில் அமர்த்தலாம் என்பதை முடிவெடுத்து அதற்க்கேற்ப காய்களை இராஜதந்திரரீதியில் நகர்த்தி தாம் தீர்மானித்தவர்களையே பதவியில் அமர்த்தி தனது இலக்கினை அடைவதை இலகுவாக்குகின்றான்.

புலம்பெயர் தேசத்தில் நாம் ஒருமித்த வேலைத்திட்டத்தின் அடிப்படையில் ஒன்றுபடுவோமாகவிருந்தால் அவ்வொன்றுபட்ட கூட்டத்திலும் ஆனந்தசங்கரிகளோ, டக்ளஸ் தேவானந்தாக்களோ, சித்தார்த்தன்களோ, தற்போது இறுதியாக அடையாளம் காட்டப்பட்ட சிவநாதன் கிசோர்களோ நாம் ஒன்றுபடும் ஆரம்ப கட்டத்திலேயே உள்நுழைந்து தகுந்த நேரம் வரும் வரை காத்திருக்கக்கூடும். அன்றேல் கருனா போன்றவர்களை காலக்கிரமத்தில் எதிரியானவன் உருவாக்கக்கூடும் அப்படிப்பட்டவர்களை உருவாக்குவது ஒன்றும் கடினமான வேலையில்லை. அவர்களது புலத்தில் உள்ள அவர்களது உறவுகளுக்கோ அன்றேல் தமக்கு வேண்டியவர்களுக்கோ தேவையானதைச் செய்தாலே நம்மாள் உருகிப்போய்விடுவான். இல்லாதுவிட்டால் அவர்களுக: வோண்டிய பணம் இல்லையோல் ஆனந்தசங்கரியை மடக்க என்ன விலைகொடுக்கப்பட்டதோ அது.

ஆகவே கவனமாக இருங்கள் ஜெயதேவன்களையோ அதுபோன்ற ஏனையோரையோ உள்நுழைய விடாதீ;கள் அப்படி யாராவது நுழைந்திருப்பதை யாராவது அறிந்தால் இருக்கவே இருக்கின்றது இணையத்தளங்கள் அவர்களை அம்பலப்படுத்துங்கள் கூடப்பிறந்த சகோதரனாக இருந்தாலும் முகதாட்சண்யம் பார்க்காதீர்கள்.

மற்றும் நெஞ்சை நிமிர்த்திக்கொண்டு திரியவெண ஒருகூட்டம் வொள்ளையும் சுள்ளையுமாக உடை உடுத்திக்கொண்டு ஊரில் இருந்த நாயக்குட்டியைத் தவிர அம்மிக்குழவிலைக்கூட தான் புலம்பெயர்ந்த தேசத்திற்க்கு இடம்பொயரச் செய்துவிட்டு அவர்களுக்கு தீபம் தொலைக்கட்சி அட்டையிலிருந்து இன்ணேரன்ன பிற சமாச்சாரங்களுடன் கூடிய தொலைபேசி அட்டைகளையும் வீட்டில் உள்ள அங்கத்தவர்களது ரசனைக்குத் தக்கதாக வாங்கி அடுககி வைத்துவிட்டு கூட்டங்களில் தலைச்சாயம் மங்காது, வயசுப்பெண்களில் யார் படிந்துவருவார் என மனக்கணக்கில் வைத்துக்கொண்டு சங்கேத வார்த்தைகளால் கிண்டல் பண்ணியபடி, பகுதிநேரத் தமிழ்த்தேசியம் பேசவும் ஒரு கூட்டம் காத்திருக்கு அவர்களையும் அண்ட விடாதீர்கள்.

இத்துடன் முடிந்து விடவில்லை இன்னும் நாம் பயணம் செய்யவேண்டிய தூரம் நிறையவே இருக்கு

அது எதுவெனில,; எமக்கு நம்பிக்கையான நிறுவனப்படுத்தப்பட்ட நிதியமைப்பு.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.