Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பெங்களூரில் ஈழத்தமிழர் உயிர்த்தெழு நாள்

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பெங்களூரில் ஈழத்தமிழர் உயிர்த்தெழு நாள்

உலக தமிழ் இளைஞர் வழிகாட்டும் தளம் என்ற அமைப்பின் சார்பில் ஈழத்தமிழர் உயிர்த்தெழு நாள் நிகழ்ச்சி பெங்களூர் தமிழ்ச்சங்கத்தில் நேற்று நடந்தது. இலங்கையில் தமிழர்களுக்கு சமஉரிமையை பெற்று தரும் பொறுப்பை இந்தியா ஏற்க வேண்டும் என்பதை வலியுறுத்தி நடந்த இந்த கூட்டத்துக்கு சங்க தலைவர் மீனாட்சி சுந்தரம் தலைமை தாங்கினார்.

கூட்டத்தில், தமிழ் திரைப்பட இயக்குனர் வேலு பிரபாகரன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

தமிழுக்கு வரலாற்றில் மிகப்பெரிய நாகரீகம், பண்பாடு, கலாசாரம் உள்ளது. இதற்கு சான்றுகளும் உள்ளன. ஆனால், உலகில் தமிழன் மிகவும் தரம் தாழ்ந்த நிலையில் உள்ளான். ஏன் இந்தியாவிலேயே தமிழன் தரம் தாழ்ந்து உள்ளது. அறிவு, கலாசாரம், பண்பாடு போன்ற எல்லாவற்றிலும் நாம் தாழ்ந்து இருக்கிறோம். இதற்கு தமிழக தலைவர்கள்தான் காரணம்.

கர்நாடகம், ஆந்திரம், கேரளா போன்ற அனைத்து மாநிலங்களிலும் கருத்து சுதந்திரம் உள்ளது. ஆனால் இது தமிழகத்தில் கிடையாது. மற்ற மொழி படங்களில் அரசியல் தலைவர்களை பற்றி கேலி செய்தால், அது அப்படியே வெளி வருகிறது. ஆனால் தமிழகத்தில் அரசியலை பற்றி கேலி செய்தால் அந்த படமே வெளிவராது. கருத்து உரிமை இல்லாத மாநிலம் தமிழ்நாடு.

இலங்கை தமிழர் தலைவர் செல்வநாயகம் தமிழ்நாட்டுக்கு வந்து தங்களுக்கு உதவி செய்ய வேண்டும் என்று பெரியாரிடம் கேட்டார். அதற்கு பெரியார், `நானும் அடிமை, நீயும் அடிமை, அப்படி இருக்கும்போது எப்படி உதவி செய்ய முடியும்’ என்று சொன்னார். இன்னும் நமது விடுதலையை கூட நாம் பெற முடியவில்லை. இதுபோன்ற நிலையில் மற்றவர்களுக்கு எப்படி உதவி செய்ய முடியும்.

இந்த அவலத்தை போக்க தமிழர்கள் மத்தியில் சாதியை ஒழிக்க வேண்டும். அப்போதுதான் நமது இனம் ஒன்றுபடும். உலகில் வேறு எங்கும் சாதிகள் கிடையாது. இதை நாம் எல்லாம் சிந்திக்க வேண்டும். மிகப்பெரிய இனத்தின் எழுச்சியை கர்நாடகத்தில் தொடங்குவீர்கள் என்று எனக்கு நம்பிக்கை உள்ளது. தமிழ் ஈழம் மலர வேண்டும். பல லட்சம் பிரபாகரன் வருவார்கள். அது நடக்கும்.

இவ்வாறு இயக்குனர் வேலு பிரபாகரன் கூறினார்.

இந்த கூட்டத்தில், பெங்களூர் தமிழ்ச்சங்க செயலாளர் தாமோதரன், சங்க முன்னாள் தலைவர் ராசு மாறன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

http://www.meenagam.org/?p=5109

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.