Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஐக்கிய நாடுகளின் மனிதாபிமான உதவி பற்றிய அறிக்கை – 09 ஜூலை 2009

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஐக்கிய நாடுகளின் மனிதாபிமான உதவி பற்றிய அறிக்கை – 09 ஜூலை 2009

இலங்கையில் போர் முடிவுக்கு வந்து 6 வாரங்கள் ஆன நிலையில் ஐ.நா அமைப்பானது வவுனியா, யாழ்ப்பாணம், திருகோணமலை தடுப்பு முகாம்களில் தமது சேவையைத் தொடந்து செய்து வருகிறது.

மிகப்பெரிய தொகையான அதாவது கிட்டத்தட்ட 280,000 மக்கள் தங்கியுள்ள முகாம்களில் அநேக வசதிகள் மேம்படுத்தப்படவேண்டி இருக்கின்றபோதும் சில வசதிகள் சீர் செய்யப்பட்டுள்ளன.

அரசாங்கம், இலங்கையின் சகல பாகங்களிலும் உள்ள மக்கள் மற்றும் ஏனைய அரசு சாரா நிறுவனங்கள் ஆகியவை கொடுத்த உதவிப் பொருட்களை முகாமில் உள்ள மக்களுக்கு ஐ.நா அமைப்பு விநியோகித்து வருகிறது. பெரும்தொகை மக்கள் உள்ள இந்த முகாம்களில் சில சிக்கல்கள் உடனும் தீர்க்கப்படக்கூடியவை எனினும் பல சிக்கலான பிரச்சனைகள் உள்ளன. இவை அனைத்துக்கும் ஒரே தீர்வு மக்களை சொந்த இடங்களில் மீளக் குடியமர்த்துவதாகும்.

இடம்பெயர்ந்த மக்களுக்கான குடியிருப்புகளை வழங்கும் அனைத்து நிறுவனங்களையும் தொடர்புபடுத்தும் அமைப்பான எஸ்.சி.சி (SCC) இற்கு யூ.என்.ஹெச்.சி.ஆர் தலைமை வகிக்கிறது. பெருந்தொகையான மக்கள் இடம்பெயர்ந்து வந்த மே மாதத்தில் இருந்து அரசுடன் மிக நெருக்கமாக பணியாற்றும் இந்த அமைப்பின் பங்காளர்கள் கிட்டத்தட்ட 22,000 அவசர குடியிருப்புகளையும், 21,000 தற்காலிக கூடாரங்களையும் கட்டியுள்ளார்கள்.

குறிப்பிட்ட கால இடைவெளிகளில் சில மக்களை வேறு இடங்களில் குடியேற்றுவதன் மூலம் வவுனியா முகாம்களின் சனநெருக்கமானது குறைக்கப்பட்டு வருகிறது. அதன்போது ஒரே குடும்பத்தைவரை ஒன்றாக இணைப்பதற்கும் இலகுவில் தாக்கத்துக்குள்ளாகக் கூடிய மக்களுக்கு நீர், சுகாதாரம், மருத்துவ வசதிகள் என்பன அருகில் இருக்கக் கூடியதான குடியிருப்புகளை அமைப்பதற்கும் அரசுடன் இணைந்து யு.என்.ஹெச்.சி.ஆர் செயற்படுகிறது. எஸ்.சி.சி ஆனது அவசர குடியிருப்புகள் அமைப்பதில் உதவி செய்யும் வேளை மறு நிறுவனங்கள் நீர், சுகாதாரம் போன்றவற்றைச் செய்வதன் மூலம் அரசுக்கு உதவி செய்கின்றன.

ஆரம்ப கால இடம்பெயர்வின்போது மக்கள் பாடசாலைகள், பொது நிலையங்கள் என்பவற்றில் தங்கினார்கள். அவர்களைத் தற்காலிக இருப்பிடங்களுக்கு மாற்றுவதிலும் ஐ.நா இணைந்து பணியாற்றுகிறது.

முகாம்களில் உள்ள 280,000 மக்களுக்கும் போதியளவு நீரும் சரியான சுகாதார வசதிகளும் கிடைக்கின்றன என்பதை உறுதிப்படுத்துவது மிக அவசியம். ஆனால் மக்கள் அதிகமாக இடம்பெயர்ந்து வந்த ஏப்பிரல், மே மாதங்களில் இந்த வசதிகளைச் செய்து கொடுப்பது மிகழும் சிக்கலாக இருந்தும் கூட மிக அதிகளவான முன்னேற்றம் அந்த நாட்களிலேயே முகாம்களில் செய்து கொடுக்கப்பட்டது.

யுனிசெஃப், ஐ.நா, மற்றைய அரச சாரா நிறுவனங்கள் என்பவற்றுடன் இணைந்து அரசு கிட்டத்தட்ட 8,761 மலசல கூடங்களையும், இடைத்தங்கல் கூடாரங்களையும் வவுனியா, யாழ்ப்பாணம், திருகோணமலை ஆகிய மாவட்டங்களில் கட்டிக் கொடுத்துள்ளது. இதற்கு தேவையான நீர் மல்வத்த ஓயாவில் இருந்து குழாய்கள் வழியாக எடுக்கப்பட்டன. அந்த குழாய்கள் மூலமே இப்போதும் மெனிக் பார்ம் நீர் தேவை பெரும்பாலும் பூர்த்திசெய்யப்படுகிறது. நீரைச் சுத்திகரிக்கும் வசதிகள் முகாம், மருத்துவமனை ஆகிய பகுதிகளில் செய்யப்பட்டு பின்னர் குடிநீர் விநியோகிக்கப்படுகிறது. அதேவேளை தண்ணீர் வண்டி, ஜீப் என்பவற்றிலும் குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது. முகாம்களில் நோய்ப்பரவலைத் தடுப்பதற்காக மேலும் சில மலசல கூடங்கள், கிணறுகள், கழிவுகளை அகற்றும் வசதிகள் என்பனவற்றை நிர்மாணிப்பது பற்றி இப்போது திட்டமிடப்பட்டு வருகிறது.

http://www.meenagam.org/?p=5444

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.