Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வி.முரளிதரன் தமிழ் மக்களுக்கு துரோகம் இழைத்துள்ளார் – அமைச்சர் முரளிதரனின் மனைவி

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தேச நிர்மாண அமைச்சர் விநாயகமூர்த்தி முரளீதரன் என்றழைக்கப்படும் கருணா தமிழ் மக்களுக்கு துரோகம் இழைத்துள்ளதாக அவரது மனைவி வித்தியாவதி தெரிவித்துள்ளார்.

கருணாவின் மனைவியும் மூன்று குழந்தைகளும் சில வருடங்களுக்கு முன்னர் இங்கிலாந்தில் வசித்து வந்தனர், தற்போது ஸ்கொட்லாந்தில் வசித்து வருகின்றனர்.

ஊடக தர்மத்தின் அடிப்படையில் அவரது மனைவி வழங்கிய நான்கு மணி நேர செவ்வியையும் பிரசூரிக்க முடியாது என பிரபல ஆங்கில இணையதளமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

தமிழ் மக்களின் தலைவராக அவர் எவ்வாறு மாறினார் என்ற அடிப்படையை அடியோடு மறந்து விட்டார் என அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.

குடும்ப பிரச்சினைகளைக் கூட கதைக்க முடியாத அளவிற்கு அவர் குழப்பமான சூழ்நிலையில் காணப்படுவதாக தெரிவித்துள்ளார்.

வித்தியாவதி தமிழீழ விடுதலைப் புலிகளின் மகளிர் பிரிவின் சிரேஸ்ட உறுப்பினர் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழீழ விடுதலைப் புலிகளிடமிருந்து பிளவடைந்த போது மிகத் தெளிவான ஓர் குறிக்கோள் காணப்பட்டதாகவும், கருணா அதனை மறந்து செயற்படுவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

கருணா தனது சுயலாப நோக்கங்களுக்காக அரசாங்கத்தின் கைப்பொம்மையாக செயற்பட்டு வருவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அரசாங்கத்தின் சிரேஸ்ட அதிகாரியொருவரே கருணாவை பிழையான பாதைக்கு இட்டுச் சென்றுள்ளதாகவும், தற்போது கருணா அவரது வாக்குகளை வேத வாக்காக எண்ணிச் செயற்பட்டு வருதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

கருணா திருந்துவதற்கு ஒரு மாத கால அவகாசம் வழங்குவதாகவும், அவ்வாறு திருந்த மருத்தால் அவரது சகல ஊழல்களையும் மக்களுக்கு அம்பலப்படுத்த பின்நிற்கப் போவதில்லை என அவர் தெரிவித்துள்ளார்.

Edited by ஜீவா

இவரின் ஒரு பீ.ஏ சிங்களப்பொண்ணு சாந்தி.......ஏதும் நடந்திருக்குமோ...

  • கருத்துக்கள உறவுகள்

வியாழக்கிழமை, 23, ஜூலை 2009 (15:10 IST)

ஈழத்தமிழர் துயரங்களுக்கு கருணாவே பொறுப்பு: மனைவி குற்றச்சாட்டு

வன்னியில் இன்று தமிழர்கள் சந்தித்துள்ள துயர நிலைக்கு எனது கணவர் கருணா தான் பொறுப்பேற்க வேண்டும். விடுதலைப் புலிகள் இயக்கத்திலிருந்து பிரிந்து வந்த பின்னர் அவர் சுயநலவாதியாக மாறி விட்டார் என்று கருணாவின் மனைவி நிரோ எனப்படும் வித்யாவதி குற்றம் சாட்டியுள்ளார்.

கருணாவின் மனைவி வித்யாவதி, புலிகள் இயக்கத்தின் மகளிர் பிரிவில் இடம் பெற்றிருந்தார். அப்போது அவரது பெயர் நிரோ என்பதாகும். கருணா, புலிகள் இயக்கத்திலிருந்து வெளியேறியபோது அவருடன் வித்யாவதியும் வெளியே வந்தார்.

வித்யாவதி தனது மூன்று குழந்தைகளுடன் சில ஆண்டுகளுக்கு முன்பு இங்கிலாந்துக்கு சென்றார். அங்கு அரசியல் புகலிடம் கோரியுள்ளார். தற்போது அகதி அந்தஸ்தில் அவர் ஸ்காட்லாந்தில் தங்கியுள்ளார்.

இந்த நிலையில், ஈழ நிலை குறித்து ஸ்ரீலங்கா கார்டியன் என்ற இணையதளத்திற்கு வித்யாவதி பேட்டி அளித்துள்ளார்.

அதில் தனது கணவர் கருணா, தமிழ் மக்களுக்கு பெரும் துரோகம் இழைத்து விட்டார், தொடர்ந்து இழைத்துக் கொண்டிருக்கிறார். இன்று தமிழர்கள் சந்தித்துள்ள நிலைக்கு அவரே காரணம் என்று பரபரப்பு பேட்டி அளித்துள்ளார்.

வித்யாவதி அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது..

தமிழின தலைவராக தனது கடமைகளை மறந்து செயல்படுகிறார் கருணா. தமிழ் மக்களுக்கு தொடர்ந்து துரோகம் இழைத்துக் கொண்டிருக்கிறார்.

தனது அடிப்படைக் கடமைகளை அவர் சுத்தமாக மறந்து விட்டார். அதில் எந்த சந்தேகமும் இல்லை. தன்னைத் தமிழர்களின் தலைவராக அவர் கூறிக் கொள்கிறார். ஆனால் அந்தக் கடமையிலிருந்து அவர் தவறி விட்டார்.

குடும்பம் தொடர்பான சில விஷயங்களைக் கூட அவரிடம் நான் பேசத் தயங்குகிறேன். அந்த அளவுக்கு குழப்பி விடுகிறார்.

6 ஆயிரம் போராளிகளுடன் விடுதலைப்புலிகள் இயக்கத்தில் இருந்து உயரிய நோக்கத்திற்காக விலகி வந்தோம்.

ஆனால் தனது சுயநலத்திற்காக அரசாங்கத்துடன் இணைந்து கொண்டு, தலையாட்டி பொம்மை போல செயல்பட்டு வருகிறார்.

தமிழ் மக்கள் இன்று சந்தித்து வரும் இன்னல்களுக்கு அவரே பொறுப்பேற்க வேண்டும்.

அரசில் உள்ள சிலர் கருணாவை தவறான பாதையில் வழி நடத்திக் கொண்டிருக்கிறார்கள். ஊரே பற்றி எரிந்தபோது, பிடில் வாசித்துக் கொண்டிருந்த நீரோ மன்னனின் நிலை போல உள்ளது கருணாவின் நிலை.

தன்னைத் திருத்திக் கொள்ள கருணாவுக்கு நான் ஒரு மாதம் அவகாசம் கொடுத்துள்ளேன். அவர் திருந்தாவிட்டால் திரைமறைவில் நடந்த பல ரகசியங்களை அம்பலப்படுத்தப் போவதாக அவரை எச்சரித்திருக்கிறேன். இன்னும் என்னென்ன ரகசிய வேலைகள் நடந்து கொண்டிருக்கின்றன என்பதையும் அம்பலப்படுத்தப் போகிறேன் என்று கூறியுள்ளார் வித்யாவதி.

கருணாவின் மனைவி குறித்து அதிக தகவல்கள் எங்கும் வந்ததில்லை. இப்போதுதான் அவர் முதல் முறையாக மீடியா வெளிச்சத்திற்கு வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

நக்கீரன்

  • கருத்துக்கள உறவுகள்

துரோகம இந்த வார்தைகளெல்லாம் தமிழில் இருப்பது பற்றி உங்களுக்கும் தெரிந்திருப்பதுதான் எமக்கு அதிசயமாக இருக்கின்றது. ஆகட்டுமுங்கோ......... ஆடுங்கோ ஆடுங்கோ.... எத்தனை நாளுக்கு என்று நாங்களும் பார்க்கதானே போகிறோம்.

உயரிய நோக்கத்துடன் விடுதலைப்புலிகளிடம் இருந்து பிரிந்தோம்?

ஆகா ஆகா.......... எல்லா காசோடையும் போய் அப்படியே கோடிசுவரி வழ்கையை எந்த சிரமும் இன்றி வாழலாம் என்பது வெறும் நப்பாசையாகத்தான் இருக்ககும் என்பது இப்போதாவது புரிந்திருக்கின்றதே. உங்களை எடுத்த எடுப்பில் ............... என்று சொல்ல முடியாதுதான்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.