Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழர்களை அழிக்க சிறிலங்கா அரசுக்கு இந்தியா உதவினால்... தனி ஈழம் அமைக்க தமிழர்களுக்கு உதவுவோம்: இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கத் தலைவர்கள் பேச்சு

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஏற்கனவே மோதி நொந்துபோய் உள்ளோம் ,மீண்டும் முயற்சி செய்து பார்கலாம்....யானையின் தும்பிக்கயுக்குள்ள எறும்பு போய் யானைக்கு அலுப்புகொடுப்பதுபோல

புத்தன்,

இந்த மாதிரியான செயல்கள் ஒரு சில சிற்றின்ப திருப்தியை வேண்டுமானால் கொடுக்கலாம். ஆனால் தேசிய தலைவரின் குறிக்கோளை அடைய கைகொடுக்காது

இது மேலும் தமிழக தமிழர்களுக்கும், ஈழத்தமிழர்களுக்கும் உள்ள வேறுபாட்டை அதிகப்படுத்தும்

அப்படியும் தொல்லை கொடுக்க வேண்டுமென்றால், இலங்கை அரசுடன் சேருவதை விட்டுவிட்டு

புலம்பெயர் தமிழரின் வாரிசுகள் ஐரோப்பாவிலோ அமெரிக்காவிலோ பெரிய பதவிகளில் அமர்ந்து அரசியல் தொல்லை கொடுக்கலாம். நல்ல பலனை கொடுக்கக்கூடும்

இதற்கு புலம்பெயர் தமிழரின் விஞ்ஞான,பொருளாதார கட்டமைப்பு பின்புலமாக செயல்படவேண்டும்

மேலும் புலம்பெயர் தமிழக தமிழரின் உதவியும் கிடைத்திட்டால் இதை மேலும் வேகப்படுத்தலாம்

இந்தியாவின் கனவான நிரந்தர பாதுகாப்பு சபை உறுப்பினர் பதவியை அடைவதை தடுத்து நிறுத்தலாம்

இதையுமே ஏழு கோடி தமிழரின் பலத்தோடு செய்தால் இன்னும் நல்ல பலன்கள் கிட்டலாம்

ஆனால் வெறும் தனி ஈழம் என்பது கொஞ்சம் கூட பயனளிக்காது

விடுதலை என்றால் அது ஒட்டு மொத்த விடுதலையாக இருக்க வேண்டும்

ஈழம்,தமிழகம் என்ற வேறுபாட்டை துடைத்துப்போட்டாலே பெரும் நன்மை உண்டு

  • Replies 54
  • Views 3.1k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

தமிழகத் தமிழர்கள் முழுமையான அளவில் எழுச்சி கொள்ள வேண்டும்.அதற்கு பாரிய அளவில் விழிப்புணர்ச்சி எற்படுத்தப்பட வேண்டும்.இதற்கு சில காலம் எடுக்கும். சிறிய தொகை அளவான ஈழத்தமிழர்களே முழுமையான(100 வீதம்) அளவில் எழுச்சி பெறவில்லை.தமிழகம் வேறு இந்தியா வேறு என்னும் நிலை உருவாக்கப்பட வேண்டும். மற்றைய மாநிலங்கள் எல்லாம் இந்தியன் என்பதை இரண்டாம் பட்சமாகத்தான் வைத்திருக்கிறர்கள். (காவிரிப் பிரச்சனையில் உச்ச நீதி மன்ற தீர்ப்பையே கர்நாடக அரசு மதிப்பதில்லை). உலகத்தமிழருக்கு ஒரு பிரச்சனை என்றால் தமிழகத்தைச் சமாளிக்க முடியாத நிலை இந்திய அரசுக்கு ஏற்பட வேண்டும்.தமிழகமும் பிரிந்து விடுமோ அதைப்பார்த்து மற்றைய மாநிலங்களும் பிரிந்து விடுமோ இந்தியாவின் ஒருமைப்பாடு கேள்விக்குறியாகி விடுமோ என்ற நிலை உருவாக வேண்டும். அத்தகைய எழுச்சிக்கு காரண கர்த்தாக்களாக இருக்கும் தமிழ் உணர்வாளர்களைக் கொச்சைப் படுத்த வேண்டாம். அதை வி;ட்டு விட்டு சம்மா இந்திய அரசு எமக்காக தானாக எதுவும் செய்யும் என்று நம்புவதில் பிரயோசனம் இல்லை. இந்தச் சூழ் நிலையை உருவாக்குவதே நமது வேலையாக இருக்க வேண்டும்.

  • 2 years later...
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

hi

யாரையும் நோகடிக்கும் எண்ணத்துடன் எழுதவில்லை, தயவு செய்து புரிந்து கொள்ளுங்கள்

35 லட்சம் தமிழர்கள் மட்டுமே இருக்கும் ஒரு நிலத்தில் எத்தனை பேர் உங்கள் போராட்டத்தை ஆதரித்தனர். எத்தனை பேர் எதிரியுடன் உறவாடினர். எத்தனை பிரிவுகள் பிளவுகள், சாதி அடிப்படையில், கொள்கையில், அனைவருமா போராடினார்கள்

யாழ்ப்பாணத்தில் இருந்த , கிழக்கில் இருந்த அனைவருமா போராடினார்கள்?....

இன்னொரு பக்கத்தையும் பாருங்கள் இங்கு 7 கோடி பேர் இருந்தாலும் பல பேருக்கு ஈழத்தின் போராட்டம் பற்றிய அறிவு இல்லை ஏன் போராடுகிறார்கள் என்று உணரவைக்கப்படவில்லை .

மேலும் ராஜீவின் கொலை பற்றிய செய்திகள் பலப்பல மக்களை ஈழ சகோதர்களிடை இருந்து தள்ளி வைத்தது.

இங்கும் சாதி, உருப்படாத ஏமாற்று அரசியல், மக்களின் வாழ்வாதார நிலை என பல்வேறு பிரச்சினைகள்.

போராட்டம் நடக்கும் போது இங்கு போராடிய மக்களை போலீஸ் முலம் மிரட்டியதும், மாணவர்கள் போராட்டத்தை

நெடுநாள் பள்ளி கல்லூரி மூடி நசித்ததும், பல்வேறு வகைகளில் மக்களை திசை திருப்பியும், ஏமாற்றவும் ( 3 மணி நேர உண்ணாவிரதம்) செய்தது அரசாங்கம்.

இருந்தும் 11 பேர் தீக்குளித்தனர், நாங்களும் போராடினோம் ... ............ ஒன்றும் முடியவில்லை

என்னளவில் இன்றும் பல உணவருந்தும் நேரங்களில், தூங்க போகும் நேரத்தில் நெஞ்சுக்குள் நெருடி வலியால் தவித்த நாள்கள் பல.

எங்கள் சகோதர்கள் பாவிகளா இப்படி விட்டுவிடீர்களே என்று கேட்கும் போது ஒன்றும் சொல்ல முடியவில்லை. உண்மை, வலி

ஒன்று மட்டும் சத்தியம் எம்மை போன்றவர்கள் என்றும் என்றும் எம் சகோதர்களுக்கு துணையிருப்போம்

  • கருத்துக்கள உறவுகள்

மீனவர்கள் சிக்கலை தீர்க்க கச்ச தீவை திரும்ப ஒப்படைக்கும் பொறிமுறை நோக்கி தமிழகம் நகருமானால்.தமிழீழம் சாத்தியமே.. ராமநாத புரம் சமஸ்தானத்தோடு இருந்த கச்ச தீவு மீண்டும் இணைக்கபட இப்போது கூடங்குளத்தில் அனைத்து சமுதாய மக்களும் சாதி வித்தியாசம் பாராமல் ஒன்றிணைந்து போராடுவது போல . அனைத்து சமுதாய மக்களும் போராட வேண்டும்

இங்கு இலக்கு யார் கொடுப்பார்கள் என்பதே இலக்கு? சிங்களமா அல்லது புதியதாக அமைய இருக்கும் ஈழமா என்பதை யிட்டு இலக்கு நிர்ணயம் செய்யபட வேண்டும்.

டிஸ்கி:

சிங்களன் அந்தமான் நிக்கோபார் எங்கட ஏரியவில் வருகுது என்று சொல்கிறான். அவனே அதை தருமாறு கேட்டாலும் கிந்தியா கேடிஸ்.. ராமஸ்வரத்தை சிங்களவனுக்கு குடுத்துடுவான்.. இவனுங்களுக்கு ஒரே இனமாக இருந்தாலும் ஸ்டேட்டையே ஒழுங்காக பிரிக்க தெரியாது என்பது அனைத்துலகத்திற்கும் தெரிந்த விடயம்.. கூனிமேடுக்கு அந்தாண்ட பல ஊர்கள் பாண்டி சேரிக்காம் அப்புறம் சில ஊர்கள் தமிழ்நாட்டுக்காம் அப்புறம் சில ஊர்கள் தமிழ்நாட்டுக்காம்..அப்புறம் சில ஊர்கள் எப்பா சாமி கண்ணை கட்டுது..

thumb_smileyvault-cute-big-smiley-animated-060.gifthumb_smileyvault-cute-big-smiley-animated-060.gif

Edited by புரட்சிகர தமிழ்தேசியன்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.