Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

கலாநிதி தயான் ஜயதிலக்கவின் பதவி நீக்கம் கூறும் செய்தி என்ன--முத்துலிங்கம்

Featured Replies

விடுதலைப் புலிகளுக்கெதிரான போல் வெற்றிபெறுவதற்கு ஆறு பேர் முக்கிய பங்காற்றியுள்ளனர். நாட்டின் தலைவர், மற்றும் ப்படைகளின் தளபதி என்ற ரீதியில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, பாதுகாப்பு

அமைச்சின் செயலாளர் கோதாபாய ராஜ பக்ஷ, பாதுகாப்புத்துறை பிரதம அதிகாரி சரத் பொன்சேகா, வெளியுறவு அமைச்சின் செயலாளர் கலாநிதி பாலித கொஹண, சமாதான செயலகத்தின் செயலாளர்

கலாநிதி ரஜீவ விஜேசிங்க மற்றும் ஐ.நா விற்கான ஜெனீவா தூதுவர் கலாநிதி தயான் ஜயதிலக்க என்ற அறுவரே புலிகளுக் கெதிரான போல் பிரதான பங்காற்றியுள்ளனர்.

இராணுவ ரீதியில் விடுதலைப் புலிகளை வெற்றிகொள்வது என்ற அரசியல் நிலைப் பாட்டில் திடசங்கற்பம் கொண்டிருந்த ஜனாதிபதி அவர்களது நிலைப்பாடு மற்றும் அதனை அல்படுத்துவதில் திடசங்கற்பம் கொண்டிருந்த பாதுகாப்புச் செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷ மற்றும் களத்தில் யுத்தத்தினை ன்னெடுத்த இராணுவத் தளபதி ஜெனரல் சரத் பொன்சேகாவின் திடசங்கற்பம் என்பன விடுதலைப் புலிகளை இராணுவ தியில் அழிக்க அடிப்படையாக அமைந்த அதேவேளை களத்தில் முன்னெடுக்கப்பட்ட போருக்கு எதிராக சர்வதேசத்தில் எழுந்த அழுத்த எதிர்ப்பலைகளை எதிர்த்து போரினை நியாயப்படுத்தி சர்வதேச தியில் இலங்கை ஓரங்கட்டப்படுவதை தடுத்து நிறுத்துவதில் பின்னைய வரும் ஆற்றிய கருத்தியல் ரீதியான பங்கு பிரதானமானது. ஐ.நா தூதுவராக பணிபுரிந்த கலாநிதி தயான் ஜயதிலக்க ஆற்றிய பங்கு அளப்பரியது.

கடந்த முப்பது வருடத்தில் சில முறை இலங்கை இராணுவம் விடுதலைப் புலிகளை இராணுவ தியில் வெற்றிகொள்ள முற்பட்ட வேளை, சர்வதேச தியில் எழுந்த அழுத்தமே இராணுவ நடவடிக்கைகளில் இலங்கை பின்வாங்க காரணமாக அமைந்தது. சர்வதேச தியில் குறிப்பாக ஐரோப்பிய மற்றும் அமெரிக்க நாடுகளிலிருந்த விடுதலைப் புலிகளின் ஏற்புடையாளர்கள் சர்வதேச அழுத்த சக்திகளில் ஆதிக்கம் செலுத்தி வந்தனர்.

இதனால் விடுதலைப் புலிகளின் மீது முற்றுழுதான யுத்தத்தை மேற்கொள்கையில் இலங்கைக்கு சர்வதேசம் அழுத்தம் கொடுத்து வந்தது. இதன் காரணமாக இலங்கை இராணுவம் விடுதலைப் புலிகள் மீது முழுமையான யுத்தத்தைத் தொடர முடியாத நிலை ஏற்பட்டது.

கிழக்கு மாகாணத்தில் விடுதலைப் புலிகளுக்கு எதிரான யுத்தத்தை இராணுவம் மேற்கொண்டதுடன் மீண்டும் சர்வதேச அழுத்தம் இலங்கை மீது திரும்பலாயிற்று. பல்வேறு நிபந்தனைகளை சர்வதேசம் விதிக்க ஆரம்பித்தது. யுத்தம் வடக்கினை நோக்கி நகர்ந்ததுடன் இது மேலும் அதிகக்கலாயிற்று. ஐரோப்பிய யூனியன், அமெக்கா மற்றும் ஐ.நா மனித உமை பிரிவு என்பன இலங்கையில் மேற்கொள்ளப்படும் யுத்தம் தொடர்பில் அதிருப்தியை வெளியிட்டதுடன் மனித உமை மீறல்கள் பற்றி கருத்து வெளியிட ஆரம்பித்ததுடன் இலங்கையை சர்வதேச கணிப்பின்படி தோல்வி கண்ட நாடு என்ற நிலைக்கு தள்ள முற்பட்டன.

இவ்வாறான இக்கட்டான நிலையிலேயே தயான் ஜயதிலக்கவை ஜனாதிபதி ஐ.நாவிற்கான ஜெனீவா தூதுவராக நியமனம் செய்தார். ப்பது வருடங்களாக சர்வதேசம் கொண்டிருந்த கருத்திற்கு எதிராக புலிகளுக்கு எதிரான கருத்தினை ஏற்புடை செய்ய ஆரம்பித்த தயான் இலங்கை மேற்கொண்டுள்ள இராணுவ நடவடிக்கையை தனது கருத்தியல் கலந்த பேச்சாற்றல் மூலம் நிலைக்குலைய செய்து இலங்கை மேற்கொண்ட இராணுவ நடவடிக்கையை நியாயப்படுத்தினார். மனித உமை மீறல் தொடர்பாக ஐ.நா. சபை மற்றும் ஏனைய சர்வதேச அமைப்புகள் ன்வைத்த குற்றச்சாட்டுகளை முறியடித்து ஐ.நா சபை இலங்கை விடயத்திற்காக கூட்டிய சிறப்பு கலந்துரையாடலின் போது முன்வைக்கப்பட்ட கருத்துக்களை முறியடித்து ஈற்றில் ஐ.நா சபை இலங்கை மீது கட்டுப்பாடு விதிக்க னைந்தமையினை முறியடித்தார்.

இலங்கையின் வரலாற்றைப் பொறுத்த வரை இது ஒரு வரலாற்று முக்கியத்துவம் பெற்ற சம்பவமாகும். எந்தவொரு ஆளுமையையும் கொண்டிராத சின்னஞ்சிறிய நாடு பலம்வாய்ந்த ஐரோப்பிய நாடுகள் கொண்டுவந்த யோசனையை முறியடித்து, வெற்றிகண்டமைக்கு தனியொரு மனிதனின் செயற்பாடு பிரதான பங்காற்றியுள்ளது.

தயான் ஜயதிலக்க எவ்வாறு இலங்கையின் போர் நடவடிக்கையை நியாயப்படுத்தினார் எனின், தமிழ் மக்களுக்கு அதிகார பகிர்வு வழங்குவது அத்தியாவசியம் என்ற நிலைப்பாட்டை வலியுறுத்தியே புலிகளுக்கெதிரான செயற்பாட்டை நியாயப்படுத்தினார். இதுவே லிபரல்வாத ஐரோப்பிய ஏற்புடையாளர்களை வெற்றிகொள்ள வாய்ப்பளித்தது. தயான் ஜயதிலக்க விடுதலைப் புலிகள் பாசிச அமைப்பு என்றும் அதிகாரப்பகிர்வுடனான ஜனநாயகத்தை தமிழ் மக்கள் அனுபவிக்க வேண்டுமாயின் அங்கு பாசிசமற்றதொரு நிலை காணப்பட வேண்டும் எனும் கருத்தை ஏற்புடை செய்தார். அதனை ஏற்படுத்தவே ஜனநாயக அரசு இராணுவ நடவடிக்கையை மேற்கொள்கின்றது எனும் வாதத்தை ன்வைத்தார்.

அதேவேளை இந்தியஇலங்கை உடன்படிக்கையின் பயனாக உருவாக்கப்பட்ட அரசியல் அமைப்பின் 13ஆவது திருத்தச் சட்டம் தமிழ் பேசும் மக்களின் பிரச்சினைக்கு உடனடி தீர்வாக அமைவதுடன் அதற்கு மேலும் பல உரிமைகள் வழங்கப்பட வேண்டும் என்ற கருத்தையும் பல சர்வதேச மற்றும் உள்ளூர் ஆங்கில பத்திகைகளில் வெளியிட்டார். இக் கருத்தும் ஐரோப்பிய ஏற்புடையாளர்களை இலங்கைபால் இலகு நிலையை கடைப்பிடிக்க வழிசமைத்தது.

ஆனால் மறுபுறம் இவரது அதிகாரப் பகிர்வு தொடர்பான கருத்து, அரசுக்கு ஆதரவு அளிக்கும் தென்னிலங்கை அறிவு ஜீவிகளின் கண்டனத்திற்கு உள்ளாகியது. அரசிற்கு ஆதரவு வழங்கும் அறிவு ஜீவிகளின் கண்டனம் யுத்தம் முடிவுறும் தறுவாயில் மேலும் அதிகத்ததுடன் அதிகார பகிர்வு தொடர்பில் கருத்தினை ன்வைக்காத ஜனாதிபதி க்கும் இது பிரச்சினையாக அமைந்தது. அந்த நெருக்கடி அதிகரிக்கையில் தயான் ஜயதிலக்க உடனடியாக நாட்டுக்கு வரவழைக்கப்பட்டார். தயான் நாட்டுக்கு வரவழைக்கப்பட்ட வேளை, ஐ.நா. மனித உமை சபை இலங்கை நிலைவரம் குறித்து சிறப்பு கலந்துரையாடலை கூட்டி முடிவு செய்தது. இவ் வேளை மீண்டும் தயான் ஐ.நா தூதுவராக அனுப்பி வைக்கப்பட்டார்.

இலங்கைக்கு எதிராக ஐ.நா. தனியான கலந்துரையாடலை மேற்கொண்ட வேளை சீனா, ரஷ்யா, இந்தியா, கியூபா, வியட்நாம் உள்ளிட்ட பல நாடுகளின் ஆதரவை பெறுவதில் வெற்றி கண்ட தயான் தனிப்பட்ட தியில் மீண்டும் அதிகாரப் பகிர்வு கருத்தினை வெளியிட்டு வந்ததுடன் அதிகார பகிர்விற்கு எதிரான இலங்கை அரசாங்கத்தின் அறிவுஜீவிகளான மிலிந்த, செனவிரத்ன போன்றோ ருடன் 13ஆவது திருத்தச் சட்டம் தொடர்பில் கடுமையாக தி ஐலன்ட் பத்திகையில் வாதித்து வந்தார்.

இப்பின்புலத்தில் இந்து பத்தி கையின் ஆசியரான என். ராம் இலங்கைக்கு மேற்கொண்ட விஜ யத்தின் போது ஜனாதிபதியுடன் நடத்திய செவ்வியில் அதிகார பகிர்வு தொடர்பாக எழுப்பிய வினாவின் போது சமஷ்டி என்ற பேச்சிக்கு இடமில்லை என்று ஜனாதிபதி கூறியதுடன் தீர்வு பற்றி தாம் ஒரு நிலைப்பாட்டை கொண்டிருப்பதாகவும் மக்களின் விருப்பின்படி எதையும் மேற் கொள்வதாகக் கூறியுள்ளார். இச் செவ்வி வெளிவந்த ன்று வாரங் களுக்கு பின்னர் ஐ.நா தூதுவரான தயான் ஜயதிலக்க பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப் பட்டுள்ளது.

தயானின் பதவி நீக்கத்திற்கு காசாவில் இஸ்ரேல் மேற்கொண்ட தாக்குதலை தயான் கண்டித்தமையின் விளைவே என்று பத்திகைச் செய்திகள் கூறிய போதிலும் அதிகாரப் பகிர்வு விடயத்தில் தயான் அளித்துவரும் பேட் டிகள், கருத்துகளே பிரதான காரணம் என இன்னுமொரு கருத்து பரவலாக நிலவி வருகிறது.

எவ்விடயம் தயான் பதவி நீக்கத்திற்கு காரணமாக அமைந்திருந்த போதிலும் தயானின் உடனடி நீக்கத்தை அதிகாரப் பகிர்வு என்ற விடயத்துடன் இணைத்தே நோக்க வேண்டும். இலங்கை விடயத்தில் ஐ.நா.வில் பக்க பலமாக இருந்த இந்தியா 13ஆவது திருத்தச் சட்டத்தை இலங்கை பூரணமாக அல்படுத்தும் என்ற கருத்தினையே தொடர்ந்து வெளியிட்டு வருகின்றது.

ஒரு சில தினங்களுக்கு முன்னர் தாய்லாந்தின் புக்கெட் நகல் நடைபெற்ற ஆசிய வெளியுறவு அமைச்சர்களின் மாநாட்டிலும் இந்தியாவின் வெளியுறவு அமைச்சர் எஸ்.என்.கிருஷ்ணா இலங்கை 13ஆவது திருத்தச் சட்டத்தை ழுமையாக அல்படுத்தும் என இலங்கை வெளியுறவு அமைச்சர் வாக்குறுதி அளித்துள்ளதாகக் கூறியுள்ளார்.

ஆனால் தயானின் திடீர் பதவி நீக்கத்துடன் ஒப்பிட்டுப் பார்க்கையில் இந்தியா இலங்கையுடன் இவ்விடயத்தில் நெருக்கடியை சந்திக்க நேடும் எனக் கருத நேடுகிறது. இந்தியா கடைப்பிடிக்கும் நிலைப்பாட்டினையே தயானும் கடைப்பிடித்து வந்ததுடன் அந்நிலைப்பாட்டினையே சர்வதேசமயப் படுத்தினார். ஆனால் அதிகாரப்பகிர்வு விடயத்தில் ஜனாதிபதி வெளிப்படுத்தியுள்ள நிலைப்பாடு மற்றும் அவரது நிலைப் பாட்டிற்கு ஒத்திசைவாக, அரசாங்கத்துடன் இணைந்து செயற்படும் அறிவு ஜீவிகளின் கருத்து வெளிப்பாடுகளை நோக்கின் அதிகாரப்பகிர்வு என்பது கானல் நீராக அமையும் என்பதனையே வெளிப்படுத்துகின்றது.

இவ்வகையில் தயானின் பதவி நீக்கம் இந்தியாவிற்கு சமிக்ஞையாகவும் சவாலாகவும் அமைகின்ற அதேவேளை, அரசாங்கத்துடன் ஒத்துழைக்கும் தமிழ் கட்சிகளுக்கும் அதிகார பகிர்வினை வேண்டி நிற்கும் அமைச்சர்களுக்கும் ஒரு சவாலாகும். கடந்த இரண்டு தசாப்தங்களாக 13ஆவது திருத்தச் சட்டத்தை முழுமையாக அல்படுத்தும்படி கோரி வரும் அமைச்சர் டக்ளஸ் தேவானந் தாவிற்கும் இப்பதவி நீக்கம் ஒரு சவாலாகவே அமையும். அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அளித்த செவ்வியொன்றில் 13ஆவது திருத்தச் சட்டத்தினையும் அதனுடன் இணைந்த வேறு சில உமைகளையும் தமிழ் மக்கள் ழுமையாக பெறும் வரை தாம் அரசாங்கத்துடன் இணையாது தனித்து செயற்படுவது அவசியம் எனக் கூறியுள்ளார்.

இது வரவேற்கத்தக்க நிலைப்பாடாயினும் எவ்வளவு காலம் காத்திருக்க வேண்டும் என்பதற்கு இன்றைய நெருக்கடியே விடையாக அமைகின்றது. எனவே ஒட்டுமொத்தமாக நோக்கின் கலாநிதி தயானின் பதவி நீக்கம் இந்தியா மற்றும் 13ஆவது திருத்தச் சட்டத்தை கோ நிற்கும் அனைத்து ஜனநாயக சக்திகளுக்கும் ஒரு சவால் என்பதை அடையாளம் காண டிகின்றது. குறிப்பாக இந்தியா இச்சவாலை எவ்வாறு எதிர்கொள்ளப்போகிறது என்பதை எதிர்வு கூற முடியாதுள்ளது. ஏனெனில் இலங்கை விடயத்தைப் பொறுத்தவரை அழுத்தம் கொடுக்கக் கூடிய சக்தியினை இந்தியா இன்றைய நிலையில் கொண்டிருக்கவில்லை.

http://www.appaa.com/index.php?option=com_...7&Itemid=54

  • கருத்துக்கள உறவுகள்

இனி இந்தியா, சிறிலங்கா அரசைப் பொறுத்தவரை செருப்பு. வேண்டுமானால் வாசற்படிவரைக்கும் வரலாம். அதற்குமேல் வர அனுமதிக்க முடியாது என்று சிங்களத் தேசியம் சொல்லும். சீனாவைக்காட்டித் தமிழின அழிப்பிற்கு உதவியதற்கான பரிசை இந்தியா பெறும்போது புரிந்து கொள்ளும். தென் கோடியில் தமிழரின் பலமே இந்திய உபகண்டத்தினது உறுதிப்பாட்டிற்கு அவசியமானது என்பதை காலம் வெகுவிரைவில் தீர்க்கமுடன் வெளிப்படுத்தும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.