Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

சிறிலங்காவில் கைரேகையுடன் கூடிய இலத்திரனியல் அடையாள அட்டை டிசம்பரில் அறிமுகம்

Featured Replies

தற்போது பாவனையில் இருக்கும் தேசிய அடையாள அட்டைகளுக்குப் பதிலாக கைரேகைகளுடன் கூடிய தேசிய இலத்திரனியல் அடையாள அட்டைகள் சிறிலங்கா அரசால் அறிமுகப்படுத்தப்படவுள்ளன.

எதிர்வரும் டிசெம்பர் மாதம் முதல் இவை பயன்பாட்டுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இந்தத் திட்டத்தின் அடிப்படையில் ஏற்கனவே உள்ள அடையாள அட்டைகள் அனைத்தும் இலத்திரனியல் அடையாள அட்டைகளாக மாற்றப்படும்.

பாவனையில் உள்ள அடையாள அட்டைகள் மனித வலுவைப் பயன்படுத்தியே தயாரிக்கப்படுகின்றன. இதனால் அவற்றில் இலகுவாக மேசாடி செய்ய முடிகிறது என்று தெரிவிக்கப்படுகிறது.

தற்போதைய அடையாள அட்டைகள் 1972 ஆம் ஆண்டில் இருந்து பயன்பாட்டில் உள்ளன.

புதிய இலத்திரனியல் அடையாள அட்டைகள் முழுவதுமாக கணினி மயப்படுத்தப்படுவதுடன், மத்திய தரவுத் தளத்துடன் இணைக்கப்பட்டிருக்கும்.

அதனால் அவை மேலும் பாதுகாப்பானவையாக இருக்கும் என்றும் அவற்றில் மோசடிகள் செய்ய முடியாது என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது.

இலத்திரனியல் அடையாள அட்டைகளை வழங்குவதற்காக 480 கோடி ரூபாய்களை அரசு செலவிட உள்ளது. இதற்கான கேள்வி கோரல் விடப்பட்டு தகுந்தவர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார் என உள்நாட்டு நிர்வாக அமைச்சின் செயலாளர் டொக்டர் உபநந்த விதானபத்திரன தெரிவித்தார்.

இந்தத் திட்டத்தை உலக வங்கியின் நிதி உதவியுடன் மேற்கொள்வதற்கே தொடக்கத்தில் திட்டமிடப்பட்டிருந்தது. அதில் ஏற்பட்ட தாமதங்களால் அனைத்துச் செலவுகளையும் தானே பொறுப்பேற்றுக்கொள்வது என்று அரசு தீர்மானித்துள்ளது.

புதிய இலத்திரனியல் அடையாள அட்டைகள் அறிமுகப்படுத்தப்பட்டதன் பின்னர், தற்போதுள்ள அடையாள அட்டைகள் 2015 ஆம் ஆண்டுடன் நாட்டில் இருந்து முற்றாக அகற்றப்பட்டுவிடும். அவற்றின் ஆயுட்காலம் 10 ஆண்டுகள் மட்டுமே என்பதால் இயல்பாகவே அவை பாவனையில் இருந்து மறைந்துவிடும்.

இலத்திரனியல் அடையாள அட்டைகளுக்காகப் பொதுமக்களிடம் இருந்து எவ்வளவு பணம் அறவிடப்படப்போகின்றது என்ற விவரங்கள் இன்னும் வெளியாகவில்லை.

நாடு முழுவதும் உள்ள 331 பிரதேச செயலகங்கள், இலத்திரனியல் அடையாள அட்டை விநியோகிக்கும் பணிக்கு அனுசரணை வழங்க உள்ளன.

புதிய அடையாள அட்டைகளில் நபரின் தனிப்பட்ட விபரங்கள் சிங்களம், தமிழ், ஆங்கிலம் ஆகிய மூன்று மொழிகளிலும் பதியப்பட்டிருக்கும். அத்துடன் கைரேகைப் பதிவும் ஒளிப்படமும் இணைக்கப்பட்டிருக்கும்.

புதினம்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.